வேப்பங்குச்சி உடன் கொஞ்சம் உப்பு, கடுகு எண்ணெய் சேர்த்து பல் துலக்குவதால் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன …?

November 28, 2022 at 7:09 am
pc
  • பல் சுகாதாரம் என்பது ஒட்டுமொத்த நல்வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாகும். அதனால்தான், ஏதேனும் பல் பிரச்சனைகள் ஏற்பட்டால், மூல காரணத்தைக் கண்டறிந்து தீர்வு காண்பது முக்கியம்.
  • ஆனால் சில நேரங்களில், எளிமையான விஷயங்களைச் செய்வது நிறைய வித்தியாசங்களை ஏற்படுத்தும் – அவற்றில் ஒன்று, வாய் துர்நாற்றத்தை எதிர்த்துப் போராடும் வேப்பங்குச்சியால் பல் துலக்குவது.
  • ப்ரெஷ்னர்களை நம் வாயில் ஸ்பிரே செய்வது முதல் சுயிங்-கம் வரை, வாய் புத்துணர்ச்சிக்காக நாம் அனைத்தையும் செய்கிறோம். ஆனால் இவை உடனடி தீர்வு மட்டுமே தரும். பிரச்சனைகளை வேரிலிருந்து சரிசெய்யாது.
  • பல நன்மைகளைக் கொண்ட வேப்பங்குச்சி அல்லது வேம்பு பேஸ்ட் பயன்படுத்துங்கள் என்று ஊட்டச்சத்து நிபுணர் நிதி குப்தா கூறினார்.
  • வேப்பங்குச்சி கொண்டு பல் துலக்கும் போது, அது வேப்ப எண்ணெயை வெளியிடுகிறது, இது வலுவான நுண்ணுயிர் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.

எப்படி உதவுகிறது?


பிளேக் உருவாவதைத் தடுக்கிறது
ஈறுகளை வலுவாக்கும்
துர்நாற்றத்தை நீக்குகிறது
பற்களை வெண்மையாக்கும்
சமீபத்தில், நான் இதை என் வாய்வழி சுகாதாரத்திற்காக பயன்படுத்த ஆரம்பித்தேன்.

நான் தினமும் இதைப் பயன்படுத்துவதில்லை, ஆனால் அதன் பலனைப் பெற வாரத்திற்கு இரண்டு முறையாவது, வேப்பங்குச்சியால் பல் துலக்குவதை வழக்கமாக வைத்திருக்கிறேன், என்று அவர் குறிப்பிட்டார்.
“வேப்பங்குச்சியில் பல் துலக்கும் முன், அதில் உப்பு மற்றும் கடுகு எண்ணெயைக் கலந்து தடவலாம். இப்படி செய்வதால் பற்கள் மற்றும் ஈறுகள் வலுவாகும், ”என்று குப்தா கூறினார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website