ஹார்மோன் காரணத்தினால் முகத்தில் வளரும் முடியை அகற்றுவது எப்படி…?
சிலருக்கு ஹார்மோன் காரணத்தினால் அதிகமாக முடி வளரும். குறிப்பாக சிலருக்கு மீசை இருப்பது போல உதட்டிற்கு மேல் உள்ள பகுதி கருமையான நிறத்தில் காணப்படும். இந்த பிரச்சனையை சரி செய்ய வீட்டிலேயே இயற்கை மருத்துவ முறைகள் இருக்கின்றன.
அவற்றை நாம் அறிந்து கொள்வோம் வாருங்கள். குப்பைமேனி இலை, வேப்பங்கொழுந்து, விரலி மஞ்சள் ஆகியவற்றை சேகரித்துக் கொள்ள வேண்டும். இவற்றை மாவு போல் நன்றாக அரைத்து, படுக்கைக்கு போகும் முன் மேல் உதட்டில் பூச வேண்டும்.
தொடர்ந்து இரு வாரங்கள் பூசி வந்தால் ரோமம் அல்லது மீசை போல் அருவருப்பாக இருக்கும் முடி உதிர்ந்து விடும். கடலை மாவு, தயிர் மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றை ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி நன்கு உலர வைத்து பின் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் வரும் முடியின் வளர்ச்சி படிப்படியாக குறையும்.
உருளைக் கிழங்கை துருவிக் கொண்டு அதனுடன் துவரம் பருப்பு கொடியுடன் சேர்த்து கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவினால், நாளடைவில் முகத்தில் உள்ள முடியின் நிறமானது மங்க ஆரம்பிக்கும். இந்த முறையை வாரம் ஒரு முறை தொடர்ந்து செய்து வந்தால், முடியின் வளர்ச்சியானது தடைபடும்.