ஹோட்டல் ரூமில் பாலாவின் காலை பிடித்து கதறி அழுத லைலா..! என்ன நடந்தது

September 2, 2023 at 7:32 pm
pc

பாலா செய்த செயலால் நடிகை லைலா அழுத சம்பவம் தெரியவந்துள்ளது.

நந்தா

சேது, நந்தா, பிதாமகன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் பாலா முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்தவர். இதில் நந்தா பாலாவுக்கு முக்கிய படம். சூர்யாவுடன் ராஜ்கிரண், லைலா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

தற்போது அந்தப் படத்தின் ஷூட்டிங்கின்போது நடந்த சம்பவம் ஒன்று தெரியவந்துள்ளது. லைலாவுக்கோ முதலில் ஈழ தமிழ் ஒழுங்காக பேச வரவில்லையாம். மேலும் அந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ரொம்பவே சிரமப்பட்டாராம்.

காலில் விழுந்த லைலா

அதன் காரணமாக பல சமயங்களில் பாலா டென்ஷன் ஆகியுள்ளார். இதனை பார்த்து மிரண்டு போன லைலா இனி என்னால் நடிக்க முடியாது என கூறி ஹோட்டல் ரூமில் உட்கார்ந்து அழுதிருக்கிறார். அதன்பின், அவருடன் இருந்தவர்கள், பாலா மிகச்சிறந்த இயக்குநர்.

அவரது படத்தில் நடித்தால் கண்டிப்பாக நல்ல பெயர் கிடைக்கும் எனக் கூறியுள்ளனர். பிறகு படம் மொத்தமாக தயாரான நிலையில் லைலா பார்த்துவிட்டு மகிழ்ச்சியடைந்துள்ளார். அதனையடுத்து உடனே அருகில் இருந்த பாலாவின் கால்களில் விழுந்த லைலா,

‘என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். ஷூட்டிங்கின்போது நீங்கள் நடந்துகொண்டதை பார்த்து உங்கள் மீது கோபத்தில் இருந்தேன். ஆனால் படம் பார்த்த பிறகுதான் நீங்கல் ஏன் அப்படி நடந்துகொண்டீர்கள் என புரிகிறது’ எனத் தெரிவித்துள்ளார். 

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website