10ஆம் வகுப்பு மாணவி தற்கொலை! தமிழகத்தில் மற்றுமொரு சோக சம்பவம்

August 4, 2022 at 3:59 pm
pc

தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தில் பெற்றோர் திட்டியதால், 10ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஈரோடு மாவட்டம் கள்ளுக்கடை பகுதியைச் சேர்ந்தவர் பஷீர் அகமது. இவரது மகள் சபீனா தனியார் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த காலாண்டு தேர்வில் சபீனா குறைவான மதிப்பெண் பெற்றுள்ளார். இதனால் அவரது பெற்றோர் மாணவியை அடிக்கடி டி.வி பார்க்காதே, அதனால் தான் மதிப்பெண் குறைந்திருக்கிறது என்று கூறி திட்டியதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக மாணவி சபீனா மனஉளைச்சல் அடைந்துள்ளார். இந்த நிலையில் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்த அவர் எலி மருந்தை சாப்பிட்டுள்ளார். இதுகுறித்து அறிந்த பெற்றோர் உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இன்று காலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மாணவி உயிரிழந்த சம்பவம் குறித்து அறிந்த பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் தற்கொலை முடிவை எடுப்பது அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.     

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website