11 ஆம் வகுப்பு மாணவியை கடத்தி திருமணம் செய்து, பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்…

March 27, 2023 at 9:08 am
pc

தருமபுரியில் 11 ஆம் வகுப்பு மாணவியை கடத்தி திருமணம் செய்து, பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

தருமபுரி மாவட்டம், செந்தில் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் அப்பகுதியில் எலக்ட்ரீஷியன் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவர், தருமபுரியைச் சேர்ந்த 11 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியுடன் பழகி வந்துள்ளார். இதையடுத்து, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துள்ளனர். 

இந்தச் சம்பவத்தை அறிந்த மாணவியின் பெற்றோர், தருமபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இவர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், இளைஞரையும் அந்த மாணவியையும் தேடி வந்தனர்.

மேலும் கார்த்திக் மொபைல் எண்ணை வைத்து தேடிய பொழுது இருவரும் திருப்பூரில் தங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அங்கு சென்ற காவல்துறையினர் அவர்கள் இருவரையும் தருமபுரிக்கு அழைத்து வந்தனர். 

இதைத்தொடர்ந்து, கார்த்திக் மீது மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று குழந்தை திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்ததாக போக்சோ சட்டத்தின் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். 

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website