11 மாத குழந்தையை பலாத்காரம் செய்த சிறுவன்
உத்தரபிரதேசத்தில் 11 மாத பெண் குழந்தை ஒரு சிறுவனால் பலாத்காரம் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அலிகார் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஜூன் 23 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது. 11 மாத பெண் குழந்தையின் குடும்பத்தின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த 12 வயது சிறுவன், யாரும் இல்லாத நேரத்தில் அந்த குழந்தையிடம் கொடூரமாக பலாத்காரம் செய்ய முயன்றான். குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு பெற்றோர் ஓடி வந்து பார்த்த போது குழந்தையை சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் சிறுவன் மீது IPC பிரிவு 376-AB மற்றும் POCSO வழக்குகளை பதிவு செய்தனர்.