11 வயது சிறுமிக்கு சிப்ஸ் பாக்கெட்டை கொடுத்து …உறவினர் செய்த வேலை யாரை நம்புவது?

துப்ரி மாவட்டத்தை சேர்ந்த அதுல் பிஸ்வாஸ்(31)உறவினரான சகோதரியின் 11 வயது மகளை வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியிருக்கிறார். பின்னர் அழுது கொண்டே வீட்டிற்கு சென்ற சிறுமியிடம் விபரத்தை கேட்ட போது அவர் தாய் அதிர்ச்சியடைந்தார். அந்த நபர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி விட்டு தனக்கு 100 ரூபாய் பணமும், ஒரு சிப்ஸ் பாக்கெட்டையும் கையில் கொடுத்து அனுப்பியதையும் சிறுமி தாயிடம் சொல்லியிருக்கிறார். உடனே இது குறித்து புகார் அளித்த நிலையில் போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனையும், ஒரு லட்சம் அபராதமும் விதித்துள்ளது.