120 மாணவிகள் … 1900ஆபாசப்படங்கள்!!காதலிப்பதாக ஏமாற்றி பணமோசடி!!பகீர் தகவல்…

June 30, 2022 at 3:01 pm
pc

ஆசை வார்த்தைகளை கூறி சமூக வலைத்தளங்கள் மூலமாக தமிழகம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த 120 க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் இளம் பெண்களை காதலிப்பதாக ஏமாற்றி பணமோசடி மற்றும் ஆபாச புகைப்படங்களை வெளியிட்டுவதாக மிரட்டிய வழக்கில் நாகர்கோவிலைச் சேர்ந்த சுஜி என்ற காசி என்பவன் கடந்த 2020 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டான். இந்த வழக்கில் மாணவிகள் உட்பட ஏராளமான இளம் பெண்களை காதலிப்பதாக கூறி ஏமாற்றி பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளான் காசி.

காசி மீது போக்சோ வழக்கு, பாலியல் பலாத்கார வழக்கு, கந்துவட்டி வழக்கு என பல பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் சிபிசிஐடி போலீஸ் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் அவரது செல்போன் மற்றும் லேப்டாப் ஆகியவற்றில் இருந்த ஆபாச படங்கள் அழிக்கப்பட்டுள்ளதால் சைபர் க்ரைம் போலீசார் தெரிவிததையடுத்து சிபிசிஐடி போலீஸார் அந்த படங்களை யார் அழித்திருக்கக்கூடும் என்ற அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில், காசியின் தந்தையான தங்கபாண்டியன் இந்த செயலை செய்திருப்பதாக அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கில் காசியின் தந்தை தங்க பாண்டியன் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இவர் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த வழக்கை விசாரணை செய்யும் சிபிசிஐடி போலீசார், காசியின் தந்தை தங்கபாண்டிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என அறிக்கை தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையில் அதிர்ச்சியான சம்பவங்கள் நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website