13 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 35 வயது பெண்!!
சிவகங்கையில் 13 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 35 வயது பெண்ணிற்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் 1000 ரூபாய் அபராதம் விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. சிவகங்கை மாவட்டம் கீழச்சேவல்பட்டி அருகேவுள்ள ஆவனிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் உதயவள்ளி. இவர் வீட்டு அருகே வசித்து வந்த 13 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுவன் பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர் கீழச்சேவல்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் உதயவள்ளி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைதானார். சிறுவனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
அந்த வழக்கானது சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.நீதிமன்றத்தில் உதயவள்ளி மீதான குற்றம் உறுதி செய்யப்படவே அவருக்கு 5 ஆண்டு சிறைதண்டனையும் 1000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி பாபுலால் அதிரடி தீர்ப்பை வழங்கினார். இதனை தொடர்ந்து அவர் மதுரை மத்திய சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டார்.