14 முறை கருக்கலைப்பு.. காதலனால் பெண் தற்கொலை !!
பீகார் மாநிலம் முசாபர்பூர் பகுதியை சேர்ந்த 33 வயதுடைய பெண் டெல்லியில் உள்ள நொய்டாவில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். ஏற்கனவே திருமணம் ஆகி, தனது கணவரை பிரிந்து வாழ்ந்த அவருக்கு அங்கு ஒரு ஆண் நண்பருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒன்றாக லிவ்-இன்-ல் வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில், அவர் நேற்று அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.
இந்த தகவலறிந்த போலீசார் பெண்ணின் உடலை மீட்டு விசாரணையை தொடங்கினர். அப்போது அந்த பெண் தற்கொலைக்கு முன்பு எழுதிய கடிதத்தை மீட்டனர். அதில், தனது காதலன் திருமணம் செய்துகொள்வதாக வாக்கு கொடுத்து தன்னுடன் உறவு கொண்டதாகவும் தன்னை கட்டாயப்படுத்தி, 14 முறை கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும் தற்போது திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் தற்கொலை செய்வதாகவும் எழுதப்பட்டிருந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.