14 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்

August 23, 2022 at 7:33 pm
pc

கேரள மாநிலம் பாலக்காடு அருகே கருகாபுத்தூர் அருகே மதரசா கூடம் உள்ளது. மதரசாவுக்கு அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் சென்றான். அங்கு சென்று வந்த பின்பு அந்த சிறுவனின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டது. இதனை கவனித்த பெற்றோர், அந்த சிறுவனிடம் கேட்ட போது அவர் பதில் எதுவும் சொல்லாமல் மவுனமாக இருந்தார். 

இதையடுத்து பெற்றோர் அந்த சிறுவனை மனநல ஆலோசகரிடம் அழைத்து சென்றனர். அங்கு சிறுவனுக்கு மனநல ஆலோசனை அளிக்கப்பட்ட போது, மதரசாவில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது தெரியவந்தது. அங்குள்ள ஆசிரியர் ஒருவரே சிறுவனுக்கு தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து சிறுவனின் பெற்றோர் சாலிசேரி போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக மதரசா ஆசிரியர் இர்ஷாத் அலி என்பவரை கைது செய்தனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website