16 வயது பள்ளி மாணவன் வகுப்பறையில் தூக்கிட்டு தற்கொலை!

March 1, 2023 at 9:44 pm
pc

ஹைதராபாத் அருகே 16 வயது நிரம்பிய பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தூக்கிட்டு தற்கொலை

ஹைதராபாத் அருகே உள்ள குடியிருப்புப் பள்ளியில் 16 வயது சிறுவன் வகுப்பறையில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். 

11ஆம் வகுப்பு படிக்கும் அம்மாணவர் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததை அவருடன் படிக்கும் மாணவர்கள் பார்த்துக் காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.

துணிகளை உலர்த்தப் பயன்படுத்தப்படும் நைலான் கயிற்றால் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிய வந்துள்ளது.மாணவரது தற்கொலை குறிப்பு எதுவும் இதுவரை கிடைக்கவில்லை எனக் காவல் துறை கூறியுள்ளது. 

பள்ளி ஆசிரியரே காரணம்

இரவு 10 மணியுடன் படித்து முடித்த பின் அனைத்து மாணவ, மாணவியர்களும் தேடி அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மற்ற மாணவ மாணவிகள் உடலை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல சிலரது உதவியை நாடியுள்ளனர். ஆனால் விடுதி வார்டன் ஏன் வாகனம் ஏற்பாடு செய்யவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.

தேர்வில் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்ற அழுத்தமே அவரை தற்கொலைக்குத் தூண்டியதாக இறந்த மாணவனின் நண்பன் குற்றம் சாட்டியுள்ளார்.

இதனிடையே, நீதி கேட்டு அவரது குடும்பத்தினர் கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மாணவியின் தற்கொலைக்குப் பள்ளி ஊழியர் ஆச்சார்யா குற்றம் சாட்டப்பட்டுள்ளார். அவர் சித்திரவதை மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக மாணவர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website