17 வயது சிறுமியிடம் அத்துமீறிய 4 போலீசார்..!வேலியே பயிரை மேய்வதா..?
தமிழக மாவட்டம் திருச்சியில் சுற்றுலா தளத்திற்கு சென்ற சிறுமியிடம் பயிற்சி எஸ்.ஐ உட்பட 4 காவலர்கள் அத்துமீறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சுற்றுலா தளத்திற்கு வந்த சிறுமி
திருச்சி முக்கொம்பு அணைக்கு 17 வயது சிறுமி ஒருவர் தனது ஆண் நண்பருடன் சென்றுள்ளார்.
அங்கு இருந்த பயிற்சி எஸ்.ஐ.சசிக்குமார், காவலர்களான பிரசாத், சித்தார்த், சங்கரபாண்டி ஆகிய 4 பேர் சிறுமியிடம் அத்துமீறியுள்ளனர்
இதனைத் தொடர்ந்து, குறித்த சிறுமி ஜீயபுரம் காவல் நிலையில் அத்துமீறிய பொலிஸார் மீது புகார் அளித்தார். .\
அவரது புகாரின் அடிப்படையில் 4 பேரும் கைது செய்யப்பட்டு, அவர்களின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் அவர்கள் 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.