17 வயது மாணவியை உல்லாசம் அனுபவித்து வீடியோ…, நேர்ந்த கொடூரம்

January 8, 2021 at 12:26 am
pc

திருச்சி மாவட்டம் வேம்பனூர் சிலோன் காலனியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் பாக்கியலட்சுமி (17). புதுக்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் கம்யூட்டர் சயின்ஸ் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் அந்த பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

விசாரணையில், பாக்கியலட்சுமி தற்கொலை செய்வதற்கு முன், ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தது தெரியவந்தது. அந்தக் கடிதத்தில், எனது செல்போனில் பிரியா என்ற பெயரில் உள்ள ஒருவன் தான் தன்னுடைய இறப்பிற்கு காரணம். எனது நிலை எந்த பெண்ணுக்கும் வரக்கூடாது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து மாணவி செல்போனை கைப்பற்றி பொலிசார் ஆய்வு செய்த போது, மாணவி ஒரு வாலிபரை காதலித்து வந்ததும், தற்போது, அவர் அந்த வாலிபரை ஒதுக்கியதும், அதனால், ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர், மாணவியும், தானும் ஒன்றாக இருந்த வீடியோவை இணையதளத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் குறித்த மாணவி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து பின்பு குடும்பத்தினரிடம் அவரது உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவியை தற்கொலைக்கு தூண்டிய வாலிபரைக் குறித்து பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website