2 சிறுமிகளை மிரட்டி பலாத்காரம் : பெற்ற தாயும் உடந்தையாக இருந்த அவலம்!

May 29, 2022 at 11:56 am
pc

2 சிறுமிகளை மிரட்டி பலாத்காரம் செய்த வாலிபருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து பால்கர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. 

மகாராஷ்டிரா மாநிலத்தில் பால்கர் மாவட்டம். இந்த மாவட்டத்தை சேர்ந்த 35 வயது வாலிபர் ஒருவர் அதே பகுதியில் உள்ள 2 சகோதர சிறுமிகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார். இதற்கு அந்த சிறுமிகளின் தாய் உடந்தையாக இருந்தாக கூறப்படுகிறது. பெற்ற தாயே இந்தக் கொடுமைக்கு உடந்தையாக இருந்ததால் அந்த சிறுமிகள், யாரிடமும் இதைப்பற்றி சொல்ல முடியாமலும் தவித்து வந்திருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் இதனால் பாதிக்கப்பட்ட 2 சிறுமிகளில் ஒருவர் வீட்டை விட்டு வெளியேறி தொண்டு நிறுவனத்தின் உதவியை நாடினார். இதன்பேரில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து, வாலிபர் மற்றும் உடந்தையாக இருந்த தாயையும் கைது செய்தனர்.  

மேலும் பால்கர் மாவட்ட செசன்சு நீதிமன்றம் வழக்கு தொடர்ந்தனர். விசாரணை முடிவில், வாலிபர் மீதான குற்றம் நிரூபணமானது. இதனை தொடர்ந்து அவருக்கு சாகும் வரையில் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website