2-வது ஒருநாள் போட்டி.. இந்திய அணி அபார வெற்றி.!
இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையேயான 2-வது ஒருநாள் போட்டி ராஞ்சியில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 278 ரன்களை எடுத்தது.
இதையடுத்து, 279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கிய இந்திய அணி, 45.5 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.