2 விரலை காட்டிய பிரபல இயக்குநர்: பதிலுக்கு அதிர வைத்த சமந்தா
காதல் கணவரான நாக சைதன்யாவை பிரிந்த பிறகு அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் வந்த ஊ சொல்றியா மாமா பாடலுக்கு குத்தாட்டம் போட்டார் சமந்தா. அந்த பாடல் பட்டிதொட்டி எல்லாம் பிரபலமானது.
இதையடுத்து சமந்தாவை தேடி பட வாய்ப்புகள் வந்து குவிகிறது. பாலிவுட்டிலும் கூப்பிடுகிறார்களாம். சமந்தாவை டாப்ஸி தான் பாலிவுட்டில் அறிமுகம் செய்து வைக்கவிருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் கொரடலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர். நடிக்கும் படத்தில் சமந்தாவை தான் ஹீரோயினாக தேர்வு செய்தார்களாம்.
ரூ. 2 கோடி தருகிறோம், நடிக்க வாங்க என்று அழைத்தாராம் சிவா. பதிலுக்கு சமந்தாவோ ரூ. 2 கோடி எல்லாம் முடியாது ரூ. 4 கோடி கொடுத்தால் தான் நடிப்பேன் என்றாராம்.
இதையடுத்து ரூ. 4 கோடி கொடுத்து சமந்தாவை நடிக்க வைக்க கொரடலா சிவா விரும்பவில்லையாம். முன்னதாக டேட்ஸ் பிரச்சனையால் ஜூனியர் என்.டி.ஆர். படத்தில் நடிக்க மறுத்தார் சமந்தா என்று கூறப்பட்டது.