22 லட்சம் இந்தியர்களின் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்!

August 4, 2022 at 9:51 am
pc

50 லட்சத்துக்கும் அதிகமான பயனாளர்களை கொண்ட சமூக வலைதள நிறுவனங்கள், சமூக வலைதள புகார்கள் குறித்தும், அவற்றின் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் மாதந்தோறும் அறிக்கை வெளியிட வேண்டும் என்று மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்த தகவல் தொழில்நுட்ப விதிகளில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி புகார்கள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து வாட்ஸ்அப் நிர்வாகம் மாதந்தோறும் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது.

இந்த நிலையில் ஜூன் மாதம் வெளியிடப்பட்ட அறிக்கையில் 22 லட்சத்து 10 ஆயிரம் இந்தியர்களின் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. விதி மீறல்கள் தொடர்பாக நிறுவனத்துக்கு வந்த புகார்களின் அடிப்படையிலும், விதிமீறல்களை கண்டறியும் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலும் கணக்குகள் முடக்கப்பட்டு இருப்பதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த மே மாதத்தில் 19 லட்சம் கணக்குகளையும், ஏப்ரல் மாதம் 16 லட்சம் கணக்குகளையும், மார்ச் மாதம் 18.05 லட்சம் கணக்குகளையும் வாட்ஸ்அப் நிறுவனம் முடக்கி இருந்தது. ஜூன் மாதத்தில் அது 22 லட்சமாக அதிகரித்துள்ளது. விதிமீறல் தொடர்பாக அளிக்கப்படும் புகார்கள் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள உறுதி கொண்டுள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சமூக வலைதள நிறுவனங்கள் குறித்து புகார் தெரிவிப்ப தற்கான தீர்ப்பாயத்தை அமைக்க மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website