24 மணி நேரத்திற்குள் பெண் போட்டியாளர் வெளியேற்றம்!

October 8, 2024 at 10:18 am
pc

பிக்பாஸ் 8, விஜய் டிவியின் ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலேயே பெரிய பட்ஜெட்டில், வித்தியாசமான கான்செப்டில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி. தமிழக மக்கள் அனைவரும் எதிர்ப்பார்த்த பிக்பாஸ் 8வது சீசன் நேற்று (அக்டோபர் 6) படு பிரம்மாண்டமாக மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக தொடங்கியது.

போட்டியாளர்கள் அனைவருமே நாம் எதிர்ப்பார்த்தவர்கள் தான், ரவீந்தர், சச்சனா, தர்ஷா குப்தா, ரஞ்சித், தீபக், ஜனனி, சத்யா உள்ளிட்ட 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள்.

தற்போது பிக்பாஸ் 8வது சீசனில் எந்த சீசனிலும் நடக்காத ஒரு விஷயம் நடந்துள்ளது. அதாவது நிகழ்ச்சி தொடங்கிய 24 மணி நேரத்திற்குள்ளேயே ஒரு பெண் போட்டியாளர் வெளியேற்றப்பட்டுள்ளார்.

சச்சனா தான் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது, இந்த எவிக்ஷன் காரணம் என்ன என்பது சரியாக தெரியவில்லை என்றாலும் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் விறுவிறுப்பு, அதிரடி காட்டவே பிக்பாஸ் குழு இப்படி செய்திருப்பதாக பேசப்படுகிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website