25 வருடத்திற்கு பின் மீண்டும் இந்தி படத்தில்கதாநாயகியாக களமிறங்கும் ஜோதிகா..!

May 16, 2023 at 12:35 pm
pc

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஜோதிகா. இவர் நடிப்பில் கடைசியாக உடன்பிறப்பே எனும் திரைப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளிவந்தது. இதன்பின் இவர் நடித்து வரும் திரைப்படம் தான் காதல் தி கோர். இப்படத்தில் மம்மூட்டி கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இதை தொடர்ந்து பாலிவுட் பக்கம் நடிகை ஜோதிகா கவனம் செலுத்தி வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. 25 ஆண்டுகளுக்கு பின் பாலிவுட் பக்க ஜோதிகா சென்றுள்ளார்.

ஏற்கனவே ஸ்ரீ எனும் இந்தி படத்தில் நடித்து முடித்துள்ள நடிகை ஜோதிகா மீண்டும் ஒரு புதிய இந்தி படத்தை கமிட் செய்துள்ளாராம்.

இப்படத்தில் மாதவன் மற்றும் அஜய் தேவ்கன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். குயின் படத்தை இயக்கிய இயக்குனர் விகாஸ் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website