3 பிள்ளைகளை கொன்று கணவன், மனைவி தற்கொலை! உறவினர்களுக்கு அனுப்பிய வீடியோ

November 27, 2023 at 7:22 pm
pc

இந்திய மாநிலம் கர்நாடகாவில் கடன் தொல்லையால் தம்பதியர் மூன்று பிள்ளைகளையும் கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

1.5 லட்சம் ரூபாய் கடன் 

கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் உள்ள சதாசிவா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கரிப் சாப் (36). இவரது மனைவி சுமையா (32), பிள்ளைகள் ஹசிரா (14), முகமது சுபன் (10), முகமது முனீர் (8). 

கரிப் சாப் தனது வீட்டின் கீழ் பகுதியில் உள்ள குடியிருப்பில் வசித்து வரும் நபர் ஒருவரிடமும், தனக்கு தெரிந்தவர்களிடமும் என மொத்தம் 1.5 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.

வாங்கியுள்ளார்.

தனது உணவகத்தில் நாட்டம் ஏற்பட்டதால் அவர் கடன் வாங்கியதாக தெரிய வந்தது. ஆனால் தொடர்ந்து தன் தொழிலில் நாட்டம் ஏற்பட்டதால் வட்டியை கட்டமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து கீழ் வீட்டில் வசிக்கும் நபர் கரிப்பிடம் கொடுத்த கடனை திருப்பி கேட்டதுடன், அவரையும் குடும்பத்தினரையும் தகாத வார்த்தையால் திட்டியுள்ளார். இதனால் கரிப்பும் அவரது மனைவியும் மனமுடைந்துள்ளனர். 

குடும்பத்துடன் தற்கொலை 

இந்த நிலையில் தங்கள் மூன்று பிள்ளைகளையும் கொன்றுவிட்டு தம்பதியர் தற்கொலை செய்துகொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் உடனடியாக கரிப்பின் வீட்டிற்கு விரைந்து அனைவரின் உடல்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். 

அப்போது கரிப் பதிவு செய்த வீடியோ ஒன்றை தன் உறவினர்களுக்கு அனுப்பி வைத்தது தெரிய வந்துள்ளது. அதைப் பார்த்த உறவினர்கள் அளித்த தகவலின்படியே பொலிஸார் கரிப் வீட்டிற்கு சென்றுள்ளனர்.    

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website