30 நாட்களில் உங்கள் முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும் ஹோம் மேட் ஹேர் ஆயில்….!
அதிகப்படியான முடி உதிர்வுக்கு காரணமே நாம் உச்சந்தலையை வறட்சியாக வைத்துக் கொள்வதால் தான். அதேபோல், முடி வளர்ச்சிக்கு எண்ணெய் வைப்பது என்பது மிகவும் அவசியமான ஒன்று. நீங்க தொடர்ச்சியாக எண்ணெய் வைக்காமல் இருந்தால் முடியின் இறுதியில் வெடிப்பு ஏற்பட்டு, முடி வளர்ச்சி தடைபடும். என்னதான் கண்டிஷனர் போட்டாலும், அது முடியை கண்டிஷன் செய்வதற்கு மட்டுமே தவிர, முடியின் வறட்சியை போக்காது. எனவே, தலைக்கு குளித்த அடுத்த நாளே தலைக்கு எண்ணெய் தடவுங்கள். இது முடி வறட்சியை போக்கி, முடி வளர்ச்சிக்கு உதவும்.
பொதுவாக நாம் முடிக்கு கடைகளில் விற்கப்படும் தேங்காய் எண்ணெய்யை வாங்கி பயன்படுத்துவோம், ஆனால் அதில் ரசாயனங்கள் கலக்கப்பட்டிருக்கும். அதுவும் முடியின் சேதத்திற்கு வழிவகுக்கும். எனவே, நீங்களே இயற்கையான ஹேர் ஆயில்களை தயாரித்து பயன்படுத்தலாம். இது ஊட்டச்சத்தை அளிப்பதோடு முடி உதிர்வையும் தடுத்து, அடர்த்தியான நீளமான முடி வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். பொடுகுப் பிரச்சனைகளில் இருந்தும் உங்களுக்கு தீர்வு அளிக்கும்.
வெங்காயத்தின் பயன்:
வெங்காயம் முடி வளர்ச்சியை அதிகரிக்கவும், முடி உடைவதைத் தடுக்கவும் நிரூபிக்கப்பட்ட தீர்வாகும். வெங்காயத்தில் உள்ள அதிக சல்பர் அனைத்து விதமான முடி பிரச்சனைகளுக்கும் சிகிச்சை அளிக்க உதவுகிறது. அதுமட்டுமல்லாமல், முடியின் pH அளவை பராமரித்து, முன்கூட்டியே நரைப்பதையும் தடுக்கிறது.
வெங்காய எண்ணெய் தயாரிப்பது எப்படி?
சிறிதளவு சின்ன வெங்காயம் அல்லது பெரிய வெங்காயத்தை எடுத்து தோல் நீக்கி நறுக்கிக் கொள்ளவும், பின்னர் அதோடு சிறிதளவு கறிவேப்பிலையை சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் 1/2 லிட்டர் தேங்காய் எண்ணெயை ஊற்றி மிதமான தீயில் சூடாக்கவும். பின்னர் அந்த பேஸ்ட்டை அதில் கொட்டி 15 லிருந்து 20 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொடிக்கவிட்டு, அடுப்பை அணைக்கவும். இதை அடுத்த நாள் வடிகட்டி பொருத்தமான பாத்திரத்தில் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.
இதை தினமும் பயன்படுத்தி வந்தால், நீங்க நினைத்து பார்க்காத அளவிற்கு முடி வளர்ச்சி காணப்படும்.