300 பட்டுப்புடவை.. பல லட்சம் மதிப்பில் பங்களா.. தங்கக் கட்டில் மகாலட்சுமியை திக்குமுக்காட வைத்த ரவீந்தர்!
காதல் மனைவி மகாலக்ஷ்மிக்கு ரவீந்தர் வழங்கிய பரிசுகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
மகாலக்ஷ்மி திருமணம்
சின்னத்திரை நடிககையான மகாலக்ஷ்மியும் தயாரிப்பாளர் லிப்ரா ரவீந்தரும் கடந்த ஒன்றாம் தேதி திருமணம் செய்து கொண்டனர். திருப்பதியில் எளிமையாக இவர்களின் திருமணம் நடைபெற்றது. தங்களுக்கு திருமணம் ஆன தகவலை ரவீந்தரும் மகாலக்ஷ்மியும் மணக்கோலத்தில் இருக்கும் போட்டோவை பகிர்ந்து அறிவித்தனர்.
ட்ரோல்ஸ்
அவர்களின் திருமணத் தகவல் வெளியானது முதலே சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் ட்ரோல்களை தொடங்கி விட்டனர். இருவரும் காதலித்து திருமணம் செய்துள்ளதாக கூறிய போதும் அதையும் விமர்சித்து வருகின்றனர் நெட்டிசன்கள். இதனால் உங்கள் வீட்டு பெண்ணையா திருமணம் செய்தேன் என பதிலடி கொடுத்து வருகிறார்.
கிஃப்ட் கொடுக்கல
சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மகாலக்ஷ்மிக்கு இதுவரை எந்த கிஃப்ட்டும் கொடுக்கவில்லை என்று கூறியிருந்தார். மேலும் மகாலக்ஷ்மி தனக்கு மனைவியாக பிறகுதான் அவருக்கு பரிசு கொடுக்க வேண்டும் என நினைத்திருந்ததாகவும் தெரிவித்தார் ரவீந்தர்.
300 பட்டுப்புடவைகள்
இந்நிலையில் ரவீந்தர் மகாலக்ஷ்மிக்கு வழங்கிய பரிசு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி மகாலக்ஷ்மிக்கு 300க்கும் மேற்பட்ட பட்டுப்புடவைகளை ரவீந்தர் வழங்கியுள்ளதாகவும், ஒரு பெண்ணுக்கு தேவையான அத்தனை நகைகளையும் தங்கத்தில் வாங்கிக் கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
புதிய பங்களா
மேலும் தனது காதல் மனைவிக்காக புதிதாக வீடு ஒன்றையும் கட்டியுள்ளார் ரவீந்தர். அதில் நீச்சல் குளம், தியேட்டர் உள்ளிட்ட நவீன வசதிகள் செய்யப்பட்டிருப்பதாகவும், இதன் மதிப்பு 75 லட்சம் ரூபாய் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அதோடு புது மண தம்பதிகளுக்கான கட்டில் தங்க முலாம் பூசப்பட்டது என்றும் கூறப்படுகிறது. இந்த தகவல் எந்தளவுக்கு உண்மை என்பது அவர்களே கூறினால் மட்டுமே தெரியவரும்.