31 குழந்தைகளை தத்தெடுத்த ஹன்சிகா
மனோஜ் தாமோதரன் இயக்கத்தில் பாட்னர் என்ற படத்தில் நாயகியாக நடித்திருப்பவர் ஹன்சிகா மோத்வானி. நகைச்சுவை படமாக உருவாகி வரும் இப்படத்தில் நடித்த அனுபவம் பற்றி அவர் பேசினார், அப்போது கதையின் படி. காமெடி நடிகர் யோகிபாபு தூங்கி எழுந்தவுடன் ஹன்சிகாவாக மாறுவதாக கதைக் களம் செல்கிறது. யோகிபாபு போல நடித்தது மறக்க முடியாத அனுபவம் என்றார். வாழ்க்கையில் திருமணத்துக்கு பின்னர் பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லை எனக் குறிப்பிட்ட ஒரு நண்பர் கிடைத்திருக்கிறார் அவ்வளவுதான் என்றார்.. மேலும், இப்போதைக்கு 31 ஏழைக்குழந்தைகளை தத்தெடுத்து படிக்க வைத்துக்கொண்டிருப்பதாக ஹன்சிகா கூறினார்.