35 ஆயிரம் பாம்புகளை பிடித்த பாம்பு லோகேஷ் பாம்பு கடித்து சாவு
பாம்பு லோகேஷ் என்றே மாநிலம் முழுக்க புகழ் பெற்றிருந்த ஊர்வனவற்றை மீட்டு வந்த பாம்பு லோகேஷ் பாம்பு கடித்து பின்னர் அதற்கான சிகிச்சை பலனளிக்காமல் நகரில் இறந்து போயுள்ளார் .
நகரின் மணிபால் மருத்துவமனையில் இன்று காலை ஸ்நேக் லோகேஷ் உயிரிழந்துள்ளார்.
நெலமங்களா தாலூகாவின் டாபர்ஸ் பேட்டையில் கடந்த ஜூலை 17 அன்று பாம்பு லோகேஷின் வலது கை விரலை தான் காப்பாற்றப்போன விஷம் கொண்ட நாக பாம்பு கடித்துள்ளது
உடனே அவரை நெலமங்களாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி அளித்து பின்னர் நகரின் மணிபால் மருத்துவமனைக்கு கூடுதல் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். விதியின் சதியால் சிகிச்சை பலனளிக்காமல் பாம்பு லோகேஷ் இன்று இறந்துள்ளார்.
இதுவரை பாம்பு லோகேஷ் 35 ஆயிரத்திற்கும் அதிகமான பல்வேறு ஊர்வன ஜந்துக்கள் , பிராணிகள் , மற்றும் பறவைகளை காப்பாற்றியுள்ளார். இசையில் மிகவும் விருப்பம் கொண்டிருந்த பாம்பு லோகேஷ் சில தொலைக்காட்சி தொடர்கள் , மற்றும் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
நெலமங்களாவில் சிறிய ஓட்டல் வைத்துக்கொண்டு வாழ்க்கை நடத்தி வந்தார். ஆனால் இவருடைய துரதிர்ஷ்டம் பாம்பு கடித்தே சிகிச்சை பலனின்றி இன்று இறந்து போனார்.