4ஆம் தேதி அதி கனமழைக்கு வாய்ப்பு!எந்தெந்த இடங்களில் தெரியுமா ?

March 2, 2022 at 1:50 pm
pc

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 4ஆம் தேதி அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 4 ஆம் தேதி கடலூர் , விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரியில்  அதிகனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள  குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 2 நாளில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற பின்னர் இலங்கை – தமிழக கடற்கரை நோக்கி நகரலாம் என்பதால் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website