4 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்ட இளம்பெண்.

December 11, 2023 at 6:21 am
pc

ரூ.4 லட்சம் பணம் வாங்கி என் அம்மா என்னை விற்றுவிட்டார் என இளம்பெண் கொடுத்த புகாரால் பொலிஸ் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்திய மாநிலமான ஹரியானாவில் 18 வயது இளம்பெண் ஒருவர் மகேஸ்வராவ் பகுதி காவல்நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

அந்த பெண் கொடுத்த புகாரில், “கடந்த நவம்பர் மாதம் 23 -ம் திகதி எனக்கு திருமணம் நடைபெற்றது. அப்போது என்னை திருமணம் செய்த நபர் எனது அம்மாவிடம் ரூ.4 லட்சம் கொடுத்தார். ஆனால், அப்போது அதற்கான காரணம் எனக்கு தெரியவில்லை.

பின்பு, என்னை திருமணம் செய்து அழைத்து வந்து தவறான விடயங்களை செய்ய சொன்னார். செய்யக்கூடாத செயல்களை செய்ய சொல்லி கட்டாயப்படுத்துகிறார். உன் அம்மாவே உன்னை ரூ.4 லட்சத்துக்கு விற்றுவிட்டார் என மிரட்டுகிறார். அடித்து கொடுமைப்படுத்துகிறார். நான் அவரிடம் இருந்து தப்பித்து வந்துவிட்டேன். என்னை காப்பாற்றுங்கள்” எனக் கூறியுள்ளார்.

இதுகுறித்து பொலிஸார் கூறுகையில், “பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரில் உள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரித்து வருகிறோம். அந்த பெண்ணினுடைய இரண்டு சகோதரிகளையும் ஹரியானாவில்தான் திருமணம் செய்து கொடுத்துள்ளார்கள்.

மேலும், இந்த பெண்ணின் குற்றச்சாட்டுக்கு அவரது தாயும் குடும்ப உறுப்பினர்களும் மறுத்துள்ளார்கள். நாங்கள் தொடர்ந்து விசாரித்து வருகிறோம்” என்று கூறினார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website