4 வயது மாணவி தொடர் பலாத்காரம்…கணித ஆசிரியர் செய்த கொடுமை!!

August 28, 2022 at 1:10 pm
pc

திருவண்ணாமலை: மருத்துவம் பாடி கிராமத்தை சேர்ந்தவர் காமராஜ். உலகம் பட்டு அரசு பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தனியார் மெட்ரிக் பள்ளி நடத்தி வருகிறார்‌. காமராஜ் அடிக்கடி அவரது மனைவி நடத்தும் பள்ளிக்கு வந்து நிர்வாகத்தை கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்தப் பள்ளியில் படிக்கும் 4 வயது சிறுமிக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் பெற்றோர் சிறுமியை மருத்துவமனையில் சேர்த்த போது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போளூர் போலீசார் விசாரனையை தொடங்கினர். பள்ளியின் சம்பந்தப்பட்டவர்களின் போட்டோக்களை காண்பித்து சிறுமியிடம் அடையாளம் காணும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது சிறுமிக்கு சாக்லேட் கொடுத்து பள்ளி தாளாளரின் கணவர் காமராஜ் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் காமராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.இந்த தகவல் வெளியானதும் நேற்று பள்ளி முன்பு பொதுமக்கள் திரண்டனர். இதனால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website