40 வயதை கடந்த பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஆரோக்கிய குறிப்புகள்!

பொதுவாக 40 வயதை தாண்டி பெண்கள் அவர்களின் உடலில் கவனம் செலுத்து குறைவாக இருக்கும். குழந்தைகள், குடும்பம்,கணவர் என அனைத்திலும் ஈடுபாடு அதிகமாக இருக்கும் பொழுது தங்களின் உடல் ஆரோக்கியத்தை கவனித்து கொள்ள நேரமும் அவர்களுக்கு இருக்காது. ஆனால் பெண்களின் வாழ்க்கை இது தான் முக்கியமான காலக்கட்டம். அத்துடன் உணவில் கட்டுபாடு வேண்டும்.
அந்த வகையில் 40 – 50 வயதிற்குட்பட்ட பெண்கள் ‘மனோபாஸ்’ என்கிற கட்டத்தை அடையும் பொழுது அவர்களின் மாதவிடாய் நின்று போவதற்கு வாய்ப்பு இருக்கின்றது.
இதனை தொடர்ந்து 40 வயதை கடக்கும் பெண்கள் என்னென்ன ஆரோக்கிய பிரச்சினைகளை எதிர்நோக்குவார்கள் என்பதனை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
1. காலை எட்டு மணிக்குள் காலையுணவை அவர்கள் நிறைவு செய்து விட வேண்டும். இது வயிறு தொடர்பான பிரச்சினைகளை உருவாக்கும்.
2. பெண்களின் உடம்பில் வைட்டமின் டீ சத்து குறையும் போது பல்தரப்பட்ட நோய்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கின்றது.
3. கொழுப்பு சத்து நிறைந்த உணவுகள் சாப்பிடுவதை முழுமையாக கட்டுபடுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனின் இது உடல் எடையை அதிகரித்து விடும்.
4. வாரத்திற்கு இரண்டு தடவை சரி முட்டையில் மிளகுத்தூள் சேர்த்து சாப்பிட வேண்டும். இது அவர்களின் உடலுக்கு சக்தியை வழங்குகின்றது.
5. குழந்தைகளுக்கு சாப்பாட்டை கொடுத்து விட்டு பெண்கள் சாதம் எடுத்து கொள்வார்கள். இது அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும்.