46 வயது அம்மாவை டேட்டிங் செல்ல வற்புறுத்திய மகள்: பிரபல நடிகை பகீர் தகவல்.!
பாலிவுட் நடிகையான சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி ஷாருக்கானுக்கு ஜோடியாக கபி ஹான் கபி நா படத்தில் நடித்ததன் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். மேலும் பல பாலிவுட் படங்களில் இவர் நடித்துள்ளார். இந்நிலையில் சுசித்ரா அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தனது மகள் குறித்து பேசியுள்ளது இணையத்தை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுசித்ரா, திரைப்பட தயாரிப்பாளர் சேகர் கபூரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் பிறந்த நிலையில், இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். இந்நிலையில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி தனது வாழ்க்கையில் சந்தித்த பிரச்சனைகளை மனம் திறந்து பேட்டியில் பேசியுள்ளார்.
அதில், என் காவேரி குழந்தையாக இருக்கும் போதே நான் விவாகரத்து செய்துவிட்டேன். சிங்கிள் மதராக என் மகள் காவேரி கபூரை வளர்க்க மிகவும் கஷ்டப்பட்டேன். நான் என் மகளிடம் அதிகாரம் செலுத்தும் அம்மாவாக நடந்து கொள்ளவில்லை. நான் அவளிடம் நண்பரான இருக்க நினைத்து நாங்கள் இருவரும் நண்பர்கள் போல பழகினோம். ஆனால், காவேரி வளர்ந்ததும் என்மீது அதிகாரத்தை திணிக்கத் தொடங்கினால் இதனால், நான் மனதளவில் துவண்டு போனேன்.
மேலும், எனது மகள் காவேரி, என் பெயரை டேட்டிங் தளத்தில் இணைத்துவிட்டார். ஆனால் எனக்கு அது பிடிக்கவில்லை. இதுகுறித்து காவேரியிடம் பலமுறை பேசினேன். ஆனால், காவேரி டேட்டிங் செல்வதில் தவறு இல்லை என்று கூறி, அதில் தனது நண்பர்களை இணைத்து, அவர்களுடன் டேட்டிங் செல்லும்படி வற்புறுத்தினாள். ஒரு கட்டத்தில் இது எனக்கு மிகவும் சலிப்பை ஏற்படுத்தியதால், அவளிடம் டேட்டிங் செல்ல முடியாது என்று கூறினேன்.
ஆனால், காவேரியோ உனக்காகத்தானே நான் டேட்டிங் குரூப்பில் உன்னை சேர்த்தேன் இப்போது, எதற்காக மறுக்கிறாய் என்று என்னிடம் கேள்வி எழுப்பினாள். அவள் அப்படி சொன்னது மிகவும் வலியை கொடுத்தது. உனக்காகத்தான் நான் அதில் சேர்ந்தேன் என அவளிடம் நான் ஓபனாக சொல்விட்டு இனிமேலும் அதை செய்ய முடியாது என மறுத்து விட்டேன் என்று அந்த பேட்டியில் கூறியுள்ளார் சுசித்ரா. அவரின் இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.