49 வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை ஐஸ்வர்யா ராய்!!அழகே பொறாமைபடும் பேரழகு…வைரல் புகைப்படம்

November 1, 2022 at 3:50 pm
pc

நடிகை ஐஸ்வர்யா ராய் இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடியுள்ள நிலையில், கொள்ளை அழகில் ஜொலிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகை ஐஸ்வர்யா ராய்

கர்நாடகாவில் பிறந்த ஐஸ்வர்யா ராய் 1994ம் ஆண்டு உலக அழகி பட்டத்தினை வென்றார். பின்பு கோலிவுட், பாலிவுட்டில் அறிமுகமாகிய இவர் பல வெற்றிப் படங்களைக் கொடுத்தார்.

மேலும் ஜீன்ஸ் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்த இவர் பல விருதுகளையும் பெற்றார். இதை தொடர்ந்து பல ஆண்டு இடைவெளிக்குப் பிறகு சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்திலும் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.

நந்தினி / மந்தாகினி தேவி என்னும் இரு வேறு வேடங்கள் தரித்த தனது நடிப்பின் முத்திரையை பதித்துள்ளார் ஐஸ்வர்யா ராய். இவரது நடிப்பு பலரின் பாராட்டை பெற்றதோடு, இரண்டாம் பாகத்தில் நந்தினியும்/ மந்தாகினியும் யார் என அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

திருமணம்

இவர் அமிதாப்பச்சனின் மகனான அபிஷேக் பச்சன் என்பவரை கடந்த 2007ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும் உள்ளார்.

சமீபத்தில் இவர் இரண்டாவது கர்ப்பமாக இருப்பதாக தகவல் தீயாய் பரவியது. பின்பு அந்த தகவல் வதந்தி என்று தெரியவந்தது. இந்நிலையில் இன்று தனது49வது பிறந்தநாளைக் கொண்டாடும் ஐஸ்வர்யா ராய்க்கு பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

மேலும் இவரது புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website