5 வயதில் பாலியல் தொல்லை.. இன்று அவனுக்கு பெண் குழந்தை இருக்குது: பிரபல நடிகையின் அதிர்ச்சி பதிவு..!
ஐந்து வயதில் தனது உறவினர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் தற்போது அவருக்கு திருமணம் ஆகி பெண் குழந்தை உள்ளது என்றும் பிரபல நடிகை ஒருவர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் கொடூரம் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது என்பதும் போக்சோ உள்ளிட்ட சட்டங்கள் நடைமுறையில் இருந்தாலும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள், குறிப்பாக திரை உலகை சேர்ந்த பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் கேரள மாநிலம் வயநாடு என்ற பகுதியைச் சேர்ந்த நடிகை சுருதி, தனக்கு ஐந்து வயதிலேயே பாலியல் தொல்லை இருந்ததாக அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளார். கோவையில் எம்ஏ படித்து அதன் பின் மாடல் அழகியாக வலம் வந்த சுருதி, மலையாள தொலைக்காட்சி சீரியல்கள் மூலம் பிரபலமானார். சமீபத்தில் வெளியான நரேன் மற்றும் மீரா ஜாஸ்மின் நடித்த ’குயின் எலிசபெத்’ என்ற படத்தில் இவர் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் ’தனக்கு ஐந்து வயது இருக்கும் போது தன்னுடைய உறவினர் ஒருவரால் பாலியல் தொல்லைக்கு ஆளானேன் என்றும், அப்போது எனக்கு பயமாக இருந்ததாலும், அவர் தனது உறவினர் என்பதாலும் நான் வெளியே சொல்லவில்லை என்றும் ஆனால் என்னை போல் இல்லாமல் இப்போது உள்ள குழந்தைகள் இதுபோன்ற தொல்லைகளை சந்திக்கும் போது பயமின்றி பெற்றவரிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த அந்த உறவினருக்கு திருமணம் ஆகி தற்போது பெண் குழந்தை உள்ளது என்றும் பெண் குழந்தை பிறந்தவுடன் என்னிடம் அவர் மன்னிப்பு கேட்டு மெசேஜ் செய்து உள்ளார் என்றும் இப்போது கூட அவரை நான் காட்டிக் கொடுக்க விரும்பவில்லை என்றும் அவருக்கு பெண் குழந்தை இருப்பதால் அவருடைய அவர் குற்ற உணர்ச்சியுடன் இருப்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது என்றும் தெரிவித்துள்ளார்.