5 வயது சிறுமியை சூடு வைத்து டார்ச்சர் செய்த தாத்தா!
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கட்டங்குடி கிராமத்தில் 5 வயது சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளானதாக குழந்தைகள் நல அலுவலகத்துக்கு புகார் வந்தது. இதையடுத்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியிடம் விசாரணை நடத்தினார். அப்போது அவரது தாத்தா பெரியண்ணன், மாமா சரவணன் ஆகியோர் சிறுமிக்கு நீண்ட நாட்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்ததும் சிறுமி ஒத்துழைக்காத பட்சத்தில் இருவரும் சேர்ந்து சூடான கரண்டியால் உடம்பில் பல்வேறு இடங்களில் சூடு வைத்ததும் தெரியவந்தது. இதையடுத்து அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸார் பெரியண்ணன், சரவணன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.