6 வயது சிறுவனை நரபலி கொடுத்த இளைஞர்கள்! சொன்ன அதிர்ச்சி காரணம்

October 3, 2022 at 12:28 pm
pc

மூட நம்பிக்கையால் பரிதாபமாக உயிரிழந்த ஆறு வயது சிறுவன் 

பணக்காரனாக ஆசைப்பட்டு சிறுவனை நரபலி கொடுத்த இளைஞர்களால் பரபரப்பு

இந்தியாவின் டெல்லியில் கடவுள் சிறுவனை பலி கொடுக்க கூறியதாக இளைஞர்கள் இருவர் கைதான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

டெல்லியின் லோதி காலனி பகுதியில் ஆறு வயது சிறுவன் பிணமாக கிடந்துள்ளான். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். குறித்த சிறுவன் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்ததால் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சிறுவனின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் இதுகுறித்து விசாரணை நடத்திய பொலிஸார், கட்டிட வேலை பார்க்கும் இருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது அந்த இளைஞர்கள் கூறிய விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பணக்காரனாக வாழ வேண்டும் என்றால் சிறுவனை நரபலி கொடுக்க வேண்டும் என கடவுள் கூறியதாக அவர்கள் தெரிவித்தனர். 

அதனாலேயே ஆறு வயது சிறுவனை கொலை செய்ததாக குறித்த இளைஞர்கள் ஒப்புக் கொண்டனர். கைது செய்யப்பட்ட இருரும் பீகாரைச் சேர்ந்த அமீர்குமார், விஜயகுமார் என தெரிய வந்துள்ளது. கொலை செய்யப்பட்ட சிறுவனின் தாய் கதறி அழுதது காண்போரை கலங்க வைத்தது.  

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website