6000 ஆண்டுகளில் நடக்கும் கதை.. கமல்ஹாசன் படம் குறித்து இயக்குனர் கூறிய ஆச்சரிய தகவல்..!

February 26, 2024 at 4:49 pm
pc

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் அடுத்த திரைப்படத்தின் கதை மகாபாரத காலத்தில் தொடங்கி 6000 ஆண்டுகள் நடைபெறும் கதை அம்சம் கொண்டது என்று அந்த படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘நடிகையர் திலகம்’ உட்பட சில படங்களை இயக்கிய இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’கல்கி 2898 ஏடி. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் கமல்ஹாசன் இந்த படத்தில் வில்லனாக நடித்து வருவதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் இந்த படம் குறித்து சமீபத்தில் பேட்டி அளித்த இயக்குனர் நாக் அஸ்வின் இந்த படத்தின் கதை மகாபாரதத்தில் தொடங்கி 2898 இல் முடிகிறது என்றும் அதனால் தான் இந்த டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

6000 ஆண்டுகள் நடக்கும் விஷயங்களை இந்த படம் பேசுகிறது என்றும் எதிர்காலத்தில் இந்த உலகம் எப்படி இருக்கும் என்பதை கற்பனையாக உருவாக்க முயன்று வருகிறோம் என்றும் முடிந்தவரை இந்திய பாணியில் இந்த படத்தை உருவாக்கியுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.

9 பாகங்களாக உருவாக இருப்பதாக கூறப்படும் இந்த படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பதும் சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website