7 ஆண்டுகளாக பெண் பார்த்தும் திருமணமாகவில்லை! விரக்தியில் தமிழக இளைஞர் எடுத்த முடிவு

August 14, 2023 at 10:11 pm
pc

தமிழகத்தில் உள்ள ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் திருமணமாகாத விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

திருமணமாகாத விரக்தி

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட்டை அடுத்த புளியந்தாங்கல் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் வினோத். 32 வயதான இவர் நெல்லிக்குப்பம் சிப்காட் பேஸ்-3யில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

கடந்த 7 ஆண்டுகளாக வினோத்திற்கு திருமணம் செய்து வைக்க அவரது உறவினர்கள் பெண் பார்த்து வந்துள்ளனர். ஆனால், வினோத்தின் ஜாதகம் சரியாக அமையவில்லை. இதனால், திருமணம் ஆகவில்லை என்ற விரக்தியில் வினோத் இருந்ததாக கூறப்படுகிறது. 

விபரீத முடிவு 

இந்நிலையில், நேற்று தனது வீட்டில் தூக்கில் தொங்கியபடி வினோத் இருந்துள்ளார். அதனை பார்த்த உறவினர்கள், அவரை மீட்டு ராணிப்பேட்டை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வினோத் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். பின்பு, சிப்காட் பொலிசார் விரைந்து வந்து வினோத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலையா, இல்லை வேறு காரணமா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.     

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website