7 மணிக்குள் இரவு உணவை சாப்பிட்டால் இவ்வளவு நன்மையா?

August 27, 2023 at 8:25 pm
pc

தற்போதைய காலக்கட்டத்தில் சரியான நேரத்தில் உணவருந்தால் பல பிரச்சினைகளை நபர்கள் சிக்கிக் கொள்கின்றனர். தாமதமாக உணவு அருந்துவதால் உடலில் சர்க்கரை அளவு அதிகரிப்பதுடன், அதிக ரத்த அழுத்தம், உடல் எடை அதிகரித்தல் இவ்வாறான பிரச்சினை ஏற்படுகின்றது. தற்போது இரவு உணவு எந்த நேரத்தில் உண்ண வேண்டும் என்பதை குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

வல்லுனர்களின் கூற்றுப்படி மனிதர் இரவு உணவு 7 மணிக்குள் உண்ண வேண்டுமாம். ஒருவேலை இரவு முழுவதும் கண் விழிப்பவராக இருந்தாலோ அல்லது அந்த நேரத்தில் பசி எடுத்தாலோ

ஒரு வேலை நீங்கள் இரவு முழுவதும் கண் விழிப்பவராகவோ அல்லது உண்மையாகவே உங்களுக்கு இரவு நேரங்களில் பசியெடுத்தாலும் சிறிய அளவிலான ஸ்நாக்ஸ்களை உட்கொண்டு பசியை போக்கிக்கொள்ள முயற்சி செய்யலாம். இது அதிக அளவு உணவு உட்கொள்வதை தவிர்க்க உதவும். அந்த வகையில் இரவு 7 மணிக்குள் இரவு உணவை உட்கொள்வதன் முக்கியத்துவத்தை பற்றியும், அதனால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றியும் இந்த பதிவில் பார்ப்போம். 

சிர்க்காடியன் இசைவு சரியாக இயங்கும்: நமது ஒவ்வொருவரின் உடலுக்குள்ளும் ஒரு கடிகாரம் ஓடிக்கொண்டு இருக்கிறது. நாம் எப்போதும் கண்விழிக்க வேண்டும், எப்போது உணவு அருந்த வேண்டும் போன்ற அனைத்து செயல்களும் அந்த கடிகாரத்தோடு தொடர்புடையது. இதனை சிர்க்காடியின் இசைவு என்று அழைப்பார்கள். சரியான நேரத்தில் உணவு உட்கொண்டு சரியான நேரத்தில் தூங்குவதன் மூலம் நமது உடலில் நடைபெற வேண்டிய செயல்கள் சீரான வகையில் எந்த விட பிரச்சனையும் இன்றி நடைபெறும்.

குறிப்பாக உணவு செரிமானம் மற்றும் வளர்ச்சிதை மாற்றங்கள் சீராக இருப்பதோடு, உடலுக்கு ஓய்வு ஓய்வு கொடுப்பதால் கல்லீரல் எந்தவித அழுத்தமும் இன்றி உடலின் நச்சுத்தன்மையை வெளியேற்றும் வேலையை அது செய்கிறது. மேலும் நமது வயிற்றில் உடலுக்கு நன்மை செய்யும் நுண்ணுயிரிகளும் அதிகம் வளர்ந்து செரிமானத்தை எளிதாக்குகின்றன. 

சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவுகிறது: இரவு ஏழு மணிக்குள் இரவு உணவை உட்கொள்வதால் உடலின் இன்சுலின் உணர்திறனை இது அதிகரிக்கிறது. இவை ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்க உதவுவதோடு, உடலின் இன்சுலின் எதிர்ப்பு அபாயத்தை குறைக்கவும் உதவுகிறது. இது தடைப்படும் பட்சத்தில் ஒருவருக்கு டைப் 2 நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்புண்டு..

ஆரோக்கியமான உறக்கம்: உறங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன் உணவு உட்கொண்டு உறங்கும்போது, அதனால் சில பிரச்சனைகளை ஏற்படக் கூடும். மேலும் இது உணவு செரிமானம் ஆவதிலும் பிரச்சனையை உண்டாக்கலாம். எனவே இரவு நேரங்களில் சீக்கிரமாகவே இரவு உணவை உட்கொள்வது உறக்கத்தின் போது உடலை மிகவும் ஓய்வாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் இரவு முழுவதும் ஆரோக்கியமான தூக்கத்திற்கும் இது வழிவகை செய்கிறது.

இதயத்தின் ஆரோக்கியம் மேம்படுத்துகிறது: இரவு உணவை தாமதமாக உட்கொள்ளும் போது அவை இதயத்தில் பாதிப்பை உண்டாக்கலாம். குறிப்பாக அதிக கலோரிகள் கொண்ட ஆரோக்கியமற்ற உணவு பொருட்களை உட்கொள்வதால் இதயத்தின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். இரவு உணவை மிகவும் விரைவாக உட்கொள்வது இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

ஹார்மோன்கள் சுரப்பதை சம நிலையில் வைக்க உதவுகிறது: இன்சுலின், கார்டிசால் போன்ற முக்கியமான ஹார்மோன்கள் நமது உடலில் தினசரி சுரப்பைவை ஆகும். இரவில் விரைவாக உணவு உட்கொள்வது நமது உடலில் சுரக்கும் ஹார்மோன்களை இயற்கையாகவே சமநிலையில் வைக்க உதவுகிறது. இதன் காரணமாக உடலின் வளர்ச்சிதை மாற்றம் சீராக இருக்கிறது. தீபிகா வாசுதேவனின் கூற்றின் படி ஒருவர் உறங்கச் செல்வதற்கு குறைந்த பட்சம் இரண்டு மணி நேரம் முன்னதாகவே இரவு உணவை உட்கொள்ள வேண்டும். இரவு உணவிற்குப்பின் 20 நிமிடம் வாக்கிங் செய்து விட்டு வரலாம் இது உணவு செரிமானம் ஆவதை எளிதாக்கும்.

உறங்கச் செல்வதற்கு முன் இரவு உணவை உட்கொள்வது என்பது உடலில் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தையும் பாழ்படுத்திவிடும். குறிப்பாக செரிமான பிரச்சனை, ஆசிடிட்டி ஆகியவை ஏற்படலாம். இரவு உணவு உண்டவுடன் உறங்கச் செல்லும் போது, புவியீர்ப்பு விசையானது நமது செரிமான பாதைக்குள் உணவு நகர்ந்து செல்வதை தடை செய்கிறது. மேலும் இரவில் கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் உள்ள உணவை உட்கொள்ளும் பட்சத்தில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவும் அதிகரிக்கக்கூடும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website