7 மாத கர்ப்பிணியை அடித்துக்கொன்ற காதல் கணவன்!
கடலூர் மாவட்டம் சின்னவடவாடி கிராமத்தை சேர்ந்தவர் அற்புதராஜ் ( 20). இவரும், விருத்தாசலத்தை சேர்ந்த சக்தி (18) என்ற பெண்ணும் காதலித்தனர். இதில் சக்தி கர்ப்பமானார். இதையடுத்து இருவரும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டனர். 7 மாத கர்ப்பிணியான சக்தி, தனது தாய் லதா வீட்டில் தங்கி இருந்தார். தனக்கு வளைகாப்பு நடத்த வேண்டும் என கணவர் அற்புதராஜிடம் சக்தி கூறியுள்ளார். அதற்கு அற்புதராஜ், ஏற்கனவே கடன் அதிகமாக உள்ளது. தற்போதுள்ள நிலைமையில் வளைகாப்பு நடத்த முடியாது என்று கூறியுள்ளார். இதனால் நேற்று இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அற்புதராஜ் சக்தியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சக்தி பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் அற்புதராஜை கைது செய்தனர்.