சினிமா

மிரட்டும் ‘அவதார் 2’ ட்ரெயிலர்!

Quick Share

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ திரைப்படத்தின் இறுதி ட்ரெயிலர் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தின் முதலாம் பாகம் 2009ம் ஆண்டு உலகம் முழுவதும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் 2வது பாகம் வரும் டிசம்பர் 16ம் தேதி வெளியாகவுள்ளது. இதையடுத்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து இந்த ட்ரெயிலரை காணலாம். 

கலகத் தலைவன் திரைவிமர்சனம்!

Quick Share

நாயகன் உதயநிதி, வஜ்ரா என்ற கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிறுவனத்தின் இரகசியங்கள் எல்லாம் திருடு போவதாக நிறுவனத்தின் உரிமையாளருக்கு சந்தேகம் ஏற்படுகிறது.

இதனால், வஜ்ரா நிறுவனத்தின் ரகசியங்களை திருடுபவரை கண்டு பிடிக்க ஆரவ் தலைமையிலான குழு களமிறங்குகிறது. இந்தியாவில் உள்ள பல கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் ஆரவ், தனது படை மூலம் நிறுவனத்தில் வேலை செய்யும் பலரை அதிரடியாக விசாரித்து வருகிறார்.

ஒரு கட்டத்தில் உதயநிதி தான் ரகசியங்களை திருடுகிறார் என்பதை கண்டுபிடிக்கிறார். ஆனால் அவர் யார் என்று தெரியாமல் இருக்கிறார். இறுதியில் உதயநிதியை ஆரவ் நெருங்கினாரா? வஜ்ரா கார்ப்பரேட் நிறுவனத்தின் ரகசியங்களை உதயநிதி திருட காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை. 

படத்தில் நாயகனாக வரும் உதயநிதி, அலட்டல் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பல காட்சிகளில் பார்வையாலே நடித்திருக்கிறார். கதாநாயகியை காதலிப்பது, நண்பனுக்காக வருந்துவது என நடிப்பில் பளிச்சிடுகிறார்.

கதாநாயகியாக வரும் நிதி அகர்வால், வழக்கமான ஹீரோயின்கள் போல் இல்லாமல், தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார். காதலா… லட்சியமா என்று முடிவெடுக்கும் காட்சியில் கைத்தட்டல் வாங்குகிறார். 

ஸ்டைலிஷ் வில்லனாக கலக்கியிருக்கிறார் ஆரவ். இவரது மிடுக்கான தோற்றமும், உடல் அமைப்பும் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறது. திரையை நீண்ட நேரம் ஆக்கிரமிப்பு செய்து திரைக்கதைக்கு வலு சேர்த்து இருக்கிறார். 

சிறிது நேரம் மட்டுமே வந்தாலும் மனதில் பதிந்து இருக்கிறார் கலையரசன். கார்ப்பரேட் நிறுவனத்தின் கொள்ளை, அதனால் பாதிக்கப்படும் மக்கள், பொருளாதாரத்தின் நிலைமை, அரசியல் என படத்தில் பல விஷயங்களை பேசி இருக்கிறார் இயக்குனர் மகிழ் திருமேனி. 

கதாப்பாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். ரயில்வே ஸ்டேஷன் காட்சிகள் விறுவிறுப்பாகவும், வித்தியாசமான கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியையும் கொடுத்திருக்கிறார் இயக்குனர். 

ஶ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது. அதுபோல் தில்ராஜின் ஒளிப்பதிவு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது. மொத்தத்தில் கழகத் தலைவன் சிறந்தவன்.

24 வயது பிரபல நடிகை மாரடைப்பால் மரணம்!! அதிர்ச்சியில் திரையுலகம்

Quick Share

24 வயதே ஆன பிரபல இளம் நடிகை மாரடைப்பால் உயிரிழந்த நிலையில் அவரின் மரணம் மற்றவர்களுக்கு எச்சரிக்கை தரும் வகையில் அமைந்துள்ளது.

மாரடைப்பால் மரணமடைந்த நடிகை  ஐன்டிரிலா சர்மா

மேற்கு வங்கத்தை சேர்ந்த ஐன்டிரிலா சர்மா பெங்காலி மொழியில் பிரபல நடிகையாக உள்ளார். இவருக்கு சில முறை நெஞ்சு வலி பாதிப்பு ஏற்பட்டு அதிலிருந்து மீண்டிருக்கிறார். 

இந்நிலையில் நேற்று முன் தின இரவு அவருக்கு நெஞ்சுவலி அதிகம் காணப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அங்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டும் பலனின்றி உயிரிழந்தார், அவரின் மரணத்திற்கு காரணம் மாரடைப்பு என தெரியவந்துள்ளது.

ஐன்டிரிலாவின் மரணம் திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் ஐன்டிரிலாவுக்கு ஏற்பட்ட மாரடைப்புக்கான பின்னணி காரணங்கள் வெளிவந்துள்ளன.

இளம் வயதில் மாரடைப்புக்கு காரணங்கள்

அவர் சில வாரங்களுக்கு முன்பாகத்தான் மூளை பாதிப்பு காரணமாக தீவிர சிகிச்சை பெற்று வந்தார். சி.டி. ஸ்கேன் எடுத்து பார்த்தபோது, மூளையின் இடப்பக்கத்தில் இரத்தக் கசிவு அதிகம் காணப்பட்டுள்ளது தெரியவந்தது. வாரக் கணக்கில் சிகிச்சை பெற்று வந்த ஐன்டிரிலா பின்னர், பாதிப்பிலிருந்து உடல் நலம் தேறியுள்ளார். 

இதேபோன்று ஐன்டிரிலாவுக்கு 2 முறை புற்று நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதிலிருந்து அவர் முழுமையாக மீண்டு பின்னர் நடிப்பில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் மாரடைப்பு காரணமாக அவரது உயிர் பிரிந்துள்ளது.

தவறான உணவு மற்றும் வாழ்க்கைமுறை, அதிக மன அழுத்தம், உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது போன்றவைகளால் தான் இளம் வயதில் மாரடைப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். 

நம்ப முதல்வருமா நடிகர் – தமிழ் சினிமாவில் நடித்த 5 முக்கிய அரசியல் தலைவர்கள்!

Quick Share

புரட்சித்தலைவர் எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற சினிமா பிரபலங்கள் சிலர் தங்களுக்கு இருக்கும் ரசிகர்களால் சினிமாவைத் தாண்டி அரசியலிலும் கொடி கட்டி பறந்தார்கள். அப்படி தமிழ் சினிமாவில் நடித்த 5 முக்கிய அரசியல் பிரபலங்கள் யார் யார் என்பதைப் பார்ப்போம். அதிலும் தற்போதைய தமிழக முதல்வர் விஜயகாந்த் உடன் இணைந்து ஒரு படத்தில் நடித்திருக்கிறார் என்பது பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

முக ஸ்டாலின்: தொடக்கத்தில் இவர் திண்டுக்கல் தீர்ப்பு, நீதி தேவன் மயங்குகிறான் மற்றும் நாளை நமதே போன்ற திராவிட கொள்கைகளை முன்வைக்கும் நாடகங்களில் நடித்தார். பின் தூர்தர்ஷனில் 13 பாகங்களாக வெளியான குறிஞ்சி மலர் என்னும் சீரியலில் அரவிந்தன் எனும் கதாபாத்திரத்தில் ஸ்டாலின் நடித்தார்.

அதன் பிறகு முக ஸ்டாலின் 1987 இல் கலைஞர் கதை வசனம் எழுதிய ஒரே ரத்தம் என்ற படத்தில் நடித்தார். இதேபோல் 1988 ல் கலைஞர் கதை வசனத்தில் மக்கள் ஆணையிட்டால் என்ற படத்தில் ஸ்டாலின் மற்றும் விஜயகாந்த் இணைந்து நடித்தார்கள்.

இதில் மக்கள் ஆணையிட்டால் படத்தில் விஜயகாந்த் மற்றும் ரேகா இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்கள். இந்த படத்தில் ஸ்டாலின் ‘ஆற அமர்ந்து கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்’ எனும் பாடலை பாடுவது போல் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார்.

இந்த இரண்டு படங்களுக்குப் பிறகு ஸ்டாலின் 1998 ஆம் ஆண்டுக்குப் பிறகு திரைத்துறையை விட்டு விலகி அரசியலில் கவனம் செலுத்தி தற்போது முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளார். எனவே ஸ்டாலின் சினிமாவில் நடித்திருக்கிறார் என்பது இளம் தலைமுறைகளுக்கு கொஞ்சம் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தும்.

தொல் திருமாவளவன்: அரசியல்வாதியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவராக இருக்கும் இவர், 2007-இல் அன்புத்தோழி என்ற படத்தில் நடித்தார். அதன்பின் 2011 இல் மின்சாரம் என்ற படத்தில் முதலமைச்சராக நடித்திருப்பார்.

டாக்டர் ராமதாஸ்: தமிழக அரசியல்வாதியும் மருத்துவரும் மன பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனமான இவர் 1990 ஆம் ஆண்டு இந்த கட்சியை துவங்கினார் அரசியல் வட்டாரத்தில் இவருடைய ஆதரவாளர்களால் அய்யா என அன்புடன் அழைக்கப்படும். இவர் 30 வருடங்களுக்கு முன்பு நடித்திருக்கிறார். 1990 பாலம் என்ற படத்தில் டாக்டராக நடித்திருக்கிறார். பின்னர் 1995 தொண்டன் என்ற திரைப்படத்திலும் டாக்டராக நடித்திருக்கிறார்.

பழ கருப்பையா: இவர் முதல் முதலாக 1992 ஆம் ஆண்டு வெளியான மூன்றாம் படி அதன் பிறகு நாடி துடிக்குதடி என்று யாரும் அறியாத படத்தில் நடித்திருந்தார். ஆனால் சமீபத்தில் முக்கியமான இரண்டு படங்களான அங்காடிதெரு மற்றும் சர்க்கார் போன்ற படங்களில் நடித்து கோலிவுட்டில் பிரபலமாகியுள்ளார்.

நாஞ்சில் சம்பத்: அனைத்துக் கட்சிகளிலும் இருக்கக்கூடிய ஒரு முக்கிய நபர் தற்போது திமுகவில் இருக்கிறார். இவர் அச்சமுண்டு அச்சமுண்டு, எல்கேஜி போன்ற திரைப்படங்கள் நடித்திருக்கிறார். இவரை தெரியாதவர்கள் இருக்க முடியாது.

இவ்வாறு இந்த 5 முக்கிய அரசியல் பிரபலங்களும் சினிமாவிலும் கால் பதித்துள்ளனர். அதிலும் பிற்காலத்தில் அரசியல் போட்டியாளர்களாக இருக்கும் முக ஸ்டாலின் மற்றும் விஜயகாந்த் இருவரும் ஒரே படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை வியக்க வைத்திருக்கின்றனர்.

சிறந்த நடிகர் – சக நடிகர்களை தூக்கிவிட்டு அழகு பார்க்கும் கமல்!

Quick Share

உலக நாயகன் கமல்ஹாசன் தான் வளர்ந்தது மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவையும் வளர்த்து விட்டுள்ளார். அதாவது வெளிநாட்டில் உள்ள தொழில் நுட்பங்களை முதலில் தனது படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் கமல் அறிமுகப்படுத்தினார். அதேபோல் பல கலைஞர்களுக்கும் கமல் வாழ்வு தந்துள்ளார். ஆனால் சிலர் கமல் மிகுந்த சுயநலவாதி, நடிகர்களை வளர விடமாட்டார் என்ற ஒரு கருத்தை பரப்பி வருகிறார்கள். அதற்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு காதல் சுகுமார் ஒரு பேட்டியில் தனக்கு நடந்த அனுபவத்தை கூறி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.

அதாவது காதல் படத்தின் மூலம் அடையாளம் பெற்றவர்தான் காதல் சுகுமார். இந்த படத்தில் நடித்த அனைவருக்குமே பட்டப் பெயராக காதல் அமைந்தது. அதாவது காதல் பரத், காதல் சந்தியா, காதல் சுகுமார் என்ற மூவரையும் தற்போது வரை இப்படியே அடையாளப்படுத்துகிறார்கள்.

இந்நிலையில் வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்த போது தான் காதல் படத்திலும் இவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த இரண்டு படங்களுக்குமே ஒரே நாளில் சூட்டிங் நடத்தப்பட்டுள்ளது. கமல் படத்தில் நடிப்பது மிகப் பெரிய விஷயம் என காதல் படத்தை சுகுமார் நிராகரித்துள்ளார்.

ஆனால் இந்த விஷயம் எப்படியோ கமலுக்கு தெரியவந்துள்ளது. ஆகையால் சுகுமாரை அழைத்த காதல் ஷங்கர் தயாரிக்கும் படம். அந்தப் படத்தில் போய் நடியுங்கள் என அறிவுரை கூறியுள்ளார். அதை ஏற்க மனமில்லை என்றாலும் கமல் சொன்னதற்காக சுகுமார் காதல் படத்தில் நடித்துவிட்டு வந்துள்ளார்.

இங்க வசூல்ராஜா எம்பிபிஎஸ் செட்டுக்கு வந்தவுடன் சுகுமார் நடிக்க வேண்டிய படப்பிடிப்பு மட்டும் நடத்தாமல் வைத்துள்ளனர். அதன் பின்பு காதல் சுகுமார் இந்த படத்திலும் நடித்து முடித்துள்ளார். கமல்ஹாசனால் தான் இந்த வாய்ப்பு கிடைத்ததாக சுகுமார் நெகிழ்ச்சியாக பேசி உள்ளார்.

சில்க் ஸ்மிதாவை தற்கொலைக்கு தூண்டிய கள்ளக்காதல்!

Quick Share

தமிழ் சினிமாவின் கவர்ச்சி கன்னி என்று இன்றுவரை அனைவராலும் மறக்க முடியாத நடிகையாக இருந்தவர் சில்க் ஸ்மிதா. இவர் 17 வருடம் சினிமாவில் இருந்து வந்தார். ஒப்பனைக் கலைஞராக தமிழ் சினிமாவில் இருந்து பொழுது வினுசக்கரவர்த்தி வண்டி சக்கரம் என்ற படத்தில் இவரை அறிமுகப்படுத்தினார், அதில் வரும் கதாபாத்திரம் பெயரே இவரது பெயராக மாறியது.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என மொத்தம் 450 மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 1980இல் இவர் நடனம் ஆடாத திரைப்படங்களே இருக்க முடியாது அந்த அளவுக்கு அனைத்து படங்களிலும் இவர் இருப்பார். இவர் பல படங்களில் கவர்ச்சி நடனத்தால் மற்றும் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆனால் இவர் கவர்ச்சி நடிகை என்ற அடையாளத்தை மட்டுமே பெற்றார்.

பின்பு நடிப்பை தாண்டி 3 படங்களை தயாரிக்க செய்தார். ஆனால் அவர் எதிர்பார்த்த மாதிரி இல்லாமல் அந்த படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது. இதனால் அவர் பெரும் நஷ்டத்திற்கு உள்ளானது, மன உளைச்சல் ஏற்பட்டது. இந்த மன உளைச்சலில் இவருக்கு போதைப் பழக்கம் ஏற்பட்டது. முதலில் பாக்கு போடுவது அடுத்து மது அருந்துவது அதற்கு அடுத்ததாக போதை ஊசி போட்டுக் கொள்வது என தன்னை அழித்து கொண்டார்.

இந்த போதை ஊசியை போடுவதற்காக ஒரு மருத்துவர் தேவைப்பட்டதால் அந்த மருத்துவர் தன் வீட்டிற்கு வரவழைத்து போதை ஊசி போட்டுக் கொள்வார். அந்த பழக்கம் இருவருக்கும் நாளடைவில் கணவன் மனைவி போல் வாழ்ந்து வந்தனர். அந்த மருத்துவருக்கு வயதுக்கு வந்த ஒரு மகன் இருக்கிறான் அவன் சினிமாவின் மீது அதிக ஆர்வமாக இருந்ததாக கூறப்படுகிறது.

அந்த இளைஞனின் ஆசையை சில்க் ஸ்மிதா வரவேற்றார் அதற்கான சில உதவிகளும் செய்து வந்தார். இது அந்த மருத்துவருக்கு பிடிக்காததால் இருவரையும் இணைத்து சந்தேகப்பட்டு பேசியுள்ளார். இதனால் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது, ஏற்கனவே மன உளைச்சலில் இருந்த சில்க் ஸ்மிதா இந்த பிரச்சனையும் சேர்ந்து அவரை தற்கொலைக்கு தூண்டியது என செய்திகள் கூறுகின்றன.

வறுமையில் ஆரம்பித்த வாழ்க்கை சினிமாவில் இருந்து கடைசியில் அனாதையாக தற்கொலை செய்துகொண்டார் சில்க் ஸ்மிதா. ஆனால் இன்றும் பல இளைஞர்கள் பேசும் வகையில் அவர் நினைவாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர் தனியாக வாழ்ந்து வந்ததால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது இதுவே இவர் குடும்பத்தோடு இருந்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது என்று அப்போது உள்ள சினிமா பிரபலங்கள் கூறி வருகின்றனர்.

பெரும் முதலாளிகளை கதறவிடும் வடிவேலு!

Quick Share

2006ஆம் ஆண்டு, நடிகர் வடிவேலு ஹீரோவாக அறிமுகமாகி நடித்த திரைப்படம் தான், இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி. இயக்குனர் சிம்புதேவன் எழுதி, இயக்கிய இத்திரைப்படத்தை இயக்குனர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்தது. படம் வெளியாகி சக்கை போடு போட்ட நிலையில், பிலிம்பேர் விருது, தமிழ்நாடு ஸ்டேட் அவார்ட் என பல விருதுகளை வாங்கியது. இந்த படத்திற்குப் பின் நடிகர் வடிவேலுவும் பல திரைப்படங்களில் நடித்திருந்த நிலையில், சினிமாவில் பட வாய்ப்புகள் இல்லாமல் சில வருடங்கள் விலகியிருந்தார். அவர் இல்லாத காலகட்டத்தில் நடிகர்கள் சந்தானம், சூரி, யோகி பாபு என பல நகைச்சுவை நடிகர்கள் உருவாக்கியிருந்தனர்.

இதனிடையே 2019ஆம் ஆண்டு நடிகர் வடிவேலு ரீ-என்ட்ரி கொடுக்கும் விதமாக 23 ஆம் புலிகேசி பார்ட் 2 படத்தை தயாரிக்கலாம் என லைகா தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்தது. அதற்கான பூஜைகளையும் செய்து அறிவித்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பை ஆரம்பிக்கும் முன்பாகவே பல பிரச்சினைகள் ஏற்பட்டதால் வடிவேலு இப்படத்திலிருந்து விலகினார்.

அதன்பின் இத்திரைப்படத்திற்கு நடிகர் சூரி அல்லது நடிகர் யோகிபாபு நடிப்பார்கள் என பெயர்கள் அடிபட்டது. ஆனால் இத்திரைப்படம் அப்படியே பேச்சு மூச்சு இல்லாமல் நின்றது. 23 புலிகேசி படத்தில் வந்த பிரச்சனையை சமரசம் செய்து வடிவேலு சார்பாக பேசிய லைக்கா அடுத்து வடிவேலுவை வைத்து இரண்டு படங்களில் நடிக்க வைத்து வந்தனர். தற்போது நடிகர் வடிவேலு பல திரைப்படங்களில் ரீ-எண்ட்ரி கொடுத்து மீண்டும் நகைச்சுவை நடிகராக நடித்து வருகிறார்.

பொதுவாக வடிவேலு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் அவரது இஷ்டப்படி டயலாக்குகளை பேசுவது, படத்தின் ஷூட்டிங்குக்கு அவர் சொல்லும் நேரத்தில் வருவது என பல சேஷ்டைகள் செய்வார். இதனிடையே தற்போது எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் வடிவேலு சூட்டிங்கிற்கு சரியாக வருவதாக செய்திகள் அண்மையில் வெளியானது.

இதை அறிந்த லைக்கா தயாரிப்பு நிறுவனம் இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி பாகம் 2 திரைப்படத்தை எடுக்கலாம் என முடிவு செய்து வடிவேலுவிடம் அணுகியது. முன்பு இருந்த வடிவேலு மாறி இருப்பார் என்று நினைத்த லைக்கா இப்போது நடிக்கும் இரண்டு படங்களில் அவர் நடந்ததை பார்த்து பயந்து விட்டனர். அதனால் 23ஆம் புலிகேசி பார்ட் 2 கண்டிப்பாக எடுக்க முடியாது இவரை வைத்து என முடிவு செய்து விட்டனர். ஆனால் வடிவேலு மீண்டும் தனது வேலையை காட்டும் விதமாக படப்பிடிப்பிற்கு வருகிறேன் என கூறி விட்டு கலந்து கொள்ளாமல் உள்ளாராம்.

அதற்குள் லைக்கா தயாரிப்பு நிறுவனமும், தொடர்ந்து இந்தியன்2, ரஜினிகாந்த் திரைப்படங்கள் என அடுத்தடுத்து திரைப்படங்களை தயாரித்து வருகிறது. இதனிடையே வடிவேலுவிடம் கையெடுத்து கும்பிட்டு நீங்கள் இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி பாகம் 2 திரைப்படத்தில் நடித்துக் கொடுக்க வேண்டாம் மற்றும் வேறு எந்த படங்களிலும் நாங்கள் இனிமேல் இவரை ஒப்பந்தம் செய்ய மாட்டோம், என வடிவேலுவிடம் லைகா தயரிப்பு நிறுவனம் கூறி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெய்லர் பட வில்லனை உறுதி செய்த சன் பிக்சர்ஸ்!

Quick Share

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி போன்றோரும் நடிக்கின்றனர். ரஜினி நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்த படமும், நெல்சனின் கடைசி படமான பீஸ்ட் படமும் சரியாக போகவில்லை. ஆகையால் முழு வீச்சில் இந்த படத்தை வெற்றி அடைய வேண்டும் என்ற நினைப்பில் நெல்சன் செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் ஜெயிலர் படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்துகிறது. அதாவது ஏற்கனவே கூகுளில் உள்ள புகைப்படத்தை நெல்சன் பயன்படுத்தி உள்ளார் என்று விமர்சித்திருந்தனர். இது இணையத்தில் மிகப்பெரிய பேசு பொருளாக மாறியது.

அதுமட்டுமின்றி சூப்பர் ஸ்டார் படத்தின் போஸ்டர் இப்படியா இருக்கும் என ரசிகர்கள் கோபத்தில் கொந்தளித்தனர். இதைத்தொடர்ந்து ரஜினி ஒரு ப்ரொபசர் லுக்கில் உள்ள போஸ்டர் வெளியாகி இருந்தது. இன்று 6:00 மணிக்கு ஜெயிலர் படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி உள்ளது.

அதில் ஜெயிலர் படத்தில் சிவராஜ் குமார் நடித்துள்ளார் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஆனால் ரஜினியின் போஸ்டருக்காக காத்திருந்த அவரது ரசிகர்களுக்கு இது ஏமாற்றத்தை தான் தந்துள்ளது.

5 இயக்குனர்களை அடையாளம் காண வைத்த சூப்பர் ஹிட் படங்கள்!

Quick Share

சினிமாவை பொறுத்தவரை இயக்குனர்கள் ஆவது என்பதெல்லாம் மிகப் பெரிய சாதனையே. இப்போதெல்லாம் உதவி இயக்குனர்களாக வாய்ப்பு கிடைப்பது கூட கடினமாகி விட்டது. பல வருடங்களாக இயக்குனர்களாக இருந்தாலும் ஒரு வெற்றிப்படம் கூட கொடுக்க முடியாமல் நிறைய பேர் திணறி வருகின்றனர். இதில் சிலருக்கு தான் தங்களுடைய முதல் படமே ஒரு அடையாளத்தை வாங்கி கொடுத்து விடுகிறது.

எஸ். ஜே. சூர்யா: ஆசை படத்தில் உதவி இயக்குனராக இருந்த போதே அஜித்துக்கு வாலி பட கதையை சொல்லிவிட்டார் எஸ். ஜே. சூர்யா. அஜித் அவரின் மீதும் அந்த கதையின் மீதும் நம்பிக்கை வைத்து வாய்ப்பு கொடுத்தார். வாலி படம் மிகப்பெரிய ஹிட் ஆனது. வெற்றிக் கொண்டாட்டமாக அஜித், எஸ். ஜே. சூர்யாவுக்கு மோட்டார் சைக்கிளை பரிசாக கொடுத்திருக்கிறார்.

வெற்றிமாறன்: வெற்றிமாறனுக்கு பொல்லாதவன் திரைப்படம் முதல் படம் என்று சொன்னால் யாராலும் நம்ப முடியாது. ஒரு பைக்கை வைத்து இரண்டரை மணி நேர கதையை சொல்லியிருந்தார். 2007ல் ரிலீஸ் ஆன இந்த திரைப்படம் மிகப்பெரிய ஹிட் படமானது. வெற்றிமாறன் இப்போது கோலிவுட்டின் அசைக்க முடியாத இயக்குனர்களில் ஒருவர்.

ஹெச் வினோத்: நடிகர் அஜித்குமாரின் ஆஸ்தான இயக்குனராக இருக்கும் ஹெச் வினோத்துக்கு சதுரங்க வேட்டை தான் முதல் திரைப்படம். அப்போது ட்ரெண்டிங்கில் இருந்த ஈமு கோழி, மண்ணுளிப் பாம்பு, ரைஸ் புல்லிங் போன்ற ஏமாற்று வேலைகளை அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்டியிருந்தார். இந்த படம் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

லோகேஷ் கனகராஜ்: இன்றைய சென்சேஷனல் இயக்குனராக இருப்பவர் தான் லோகேஷ் கனகராஜ். சினிமாவில் ஒரு இயக்குனர் 50 படங்களில் வாங்க வேண்டிய பெயரை கைதி என்னும் ஒரு படத்திலேயே வாங்கிவிட்டார் லோகேஷ். கைதி படத்தின் வெற்றி காரணமாக கோலிவுட்டின் டாப் ஹீரோக்களான விஜய் மற்றும் கமலஹாசனின் படவாய்ப்புகளும் இவரை தேடி வந்தது.

பிரதீப் ரங்கநாதன்: கோலிவுட்டின் ட்ரெண்டிங் இயக்குனராக மாறியிருக்கிறார் பிரதீப். இவரை இளைஞர்கள் கொண்டாடி வருகின்றனர். லவ் டுடே என்னும் ஒரு படத்தின் மூலம் மொத்த சினிமா ரசிகர்களையும் தன்னுடைய வசம் கொண்டு வந்துவிட்டார். மிகக் குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் ரிலீஸ் ஆன இரண்டு வாரங்களில் வசூலில் 50 கோடியை எட்டிவிட்டது.

குடிப்பதற்கு சிறுநீர் கேட்ட ரச்சிதா!!மரணமா கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

Quick Share

மகாராணி வேடத்தில் இருக்கும் ரச்சிதா தூய தமிழில் பேசி பார்வையாளர்களிடம் வசமாக மாட்டிக் கொண்டிருக்கிறார்.

குடிப்பதற்கு சிறுநீர் கேட்ட ரச்சிதா மகாலட்சுமியை சமூக வலைதளவாசிகள் கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

பிக் பாஸ் 6 வீட்டை ராயல் மியூசியமாக மாற்றிவிட்டார்கள். ராபர்ட் மாஸ்டர் ராஜாவாகவும், ரச்சிதா மகாலட்சுமி ராணியாகவும் இருக்கிறார்கள். ராஜா, ராணி வேடத்தில் இருப்பதால் தூய தமிழில் பேசுகிறார்களாம். இந்நிலையில் மன்னா எனக்கு சிறுநீர் வேண்டும் என்று கூறுங்கள் என ராபர்ட் மாஸ்டரிடம் தெரிவித்தார் ரச்சிதா.

ராபர்ட்

சிறுநீரா என்று கேட்டுவிட்டு கிளம்பினார் ராபர்ட். குடிநீரை தான் ரச்சிதா சிறுநீர் என்று சொல்ல அது கூட தெரியாமல் ராபர்ட் மாஸ்டர் சிறுநீர் எடுத்து வர சென்றுவிட்டார். தமிழ் செத்துவிடும். இப்படி தமிழ் பேசும் ராஜா, ராணியால் நாடு வெளங்கிவிடும் என்று சமூக வலைதளவாசிகள் கிண்டல் செய்கிறார்கள்.

பாத்ரூம்

சிறுநீரா என்ன கருமத்தமா கேட்குற. யோவ் ராபர்ட் மாஸ்டர், சிறுநீரை எடுத்து வர பாத்ரூமுக்கா செல்கிறீர். உங்களின் தமிழில் தீயை வைக்க என்று பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரே நாளில் பெற்றோருக்கு பிரமாண்டமாக பிறந்தநாள் கொண்டாடிய நடிகை கீர்த்தி சுரேஷ்!

Quick Share

கீர்த்தி சுரேஷ், ஒரே நாளில் பிறந்த தன்னுடைய தாய் – தந்தைக்கு குடும்பத்தினருடன் சேர்ந்து மிக பிரமாண்டமாக பிறந்தநாள் கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.

நடிகை கீர்த்தி சுரேஷ் மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் கதாநாயகியாக மாறியவர். இவருடைய தந்தை சுரேஷ் மலையாள திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்.

அதே போல் கீர்த்தி சுரேஷின் தாயார் மேனகா தமிழ் சினிமாவில் பல படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர். 1980 ஆம் ஆண்டு, ராமாயி வயசுக்கு வந்தாச்சு என்கிற படத்தின் மூலம் அறிமுகமான இவர், இதை தொடர்ந்து, கீழ் வானம் சிவக்கும், காலம், நெற்றிக்கண் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். 

மேனகா கடந்த 1987 ஆம் ஆண்டு, தயாரிப்பாளர் சுரேஷை திருமணம் செய்து கொண்ட பின்னர் முழுமையாக சினிமாவில் நடிப்பதில் இருந்து விலகி, குடும்பம் மற்றும் குழந்தைகளை வளர்ப்பதில் கவனம் செலுத்த துவங்கினார்.

இவருடைய மூத்த மகளான ரேவதி, கீர்த்தி நடித்த வசி என்கிற படத்தை தயாரித்தார். மேலும் பல படங்களில் இவர் துணை இயக்குனராக பணியாற்றியுள்ள நிலையில், விரைவில் படம் இயக்கவும் உள்ளார்.

இந்நிலையில், கீர்த்தி சுரேஷ், ஒரே நாளில் பிறந்த தன்னுடைய தாய் – தந்தைக்கு குடும்பத்தினருடன் சேர்ந்து மிக பிரமாண்டமாக பிறந்தநாள் கொண்டாடி மகிழ்ந்துள்ளார். 

இந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட ரசிகர்களும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். கீர்த்தி சுரேஷ், ஒரே நாளில் பிறந்த தன்னுடைய தாய் – தந்தைக்கு குடும்பத்தினருடன் சேர்ந்து மிக பிரமாண்டமாக பிறந்தநாள் கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.

முன்னாள் கணவர் சாண்டியின் வீட்டுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த காஜல்..!

Quick Share

நடிகை காஜல் பசுபதி தனது முன்னாள் கணவர் சாண்டியின் வீட்டுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்து அவரது குடும்பத்தினருடன் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

மானாட மயிலாட நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆனவர் சாண்டி. தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடன இயக்குனராக வலம் வரும் இவர், நடிகை காஜல் பசுபதியை முதலாவதாக திருமணம் செய்துகொண்டு, பின்னர் விவாகரத்து செய்து பிரிந்தார். இந்த விவாகரத்து முடிவுக்கு நான் தான் காரணம் சாண்டி மீது எந்த தவறும் இல்லை என காஜல் கூறி இருந்தார்.

காஜலை விவாகரத்து செய்த பின்னர் சில்வியா என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் சாண்டி, இத்தம்பதிக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளன. ஆனால் சாண்டியை பிரிந்த பின்னர் நடிகை காஜல் பசுபதி வேறு திருமணம் செய்துகொள்ளாமல் சிங்கிளாகவே வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை காஜல் பசுபதி தனது முன்னாள் கணவர் சாண்டியின் வீட்டுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்து அவருக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். சாண்டி – சில்வியா ஜோடிக்கு கடந்த ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. அதனை பார்க்க சென்றபோது எடுத்த புகைப்படங்களை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து தனது அன்பை வெளிப்படுத்தி உள்ளார் காஜல்.

சாண்டியின் மனைவி சில்வியா மற்றும் அவரது குழந்தைகளுடன் காஜல் பசுபதி எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. விவாகரத்து பெற்ற பின்னரும் சாண்டியுடனும், அவரது குடும்பத்தினருடனும் காஜல் பசுபதி நட்புடன் பழகி வருவதை பார்த்த ரசிகர்கள் அவரை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.




You cannot copy content of this Website