சினிமா

திருமணத்துக்கு தயாராகும் கவுதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன்!

Quick Share

நடிகர் கார்த்திக் மகனான கவுதம் கார்த்திக், மணிரத்னம் இயக்கிய கடல் படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். வைராஜா வை, ரங்கூன், இவன் தந்திரன், ஹரஹர மகாதேவகி, ஆனந்தம் விளையாடும் வீடு உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமான இவர் தற்போது சிம்பு நடிக்கும் ‘பத்து தல’ படத்திலும் நடித்து வருகிறார்.

இதனிடையே கவுதம் கார்த்திக்கும் மஞ்சிமா மோகனும் காதலித்து வந்ததாக செய்தி பரவி வந்ததையடுத்து சமீபத்தில் இருவரும் அதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்து சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பகிர்ந்திருந்தனர். இந்நிலையில், கவுதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இருவரின் திருமணம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி வருகிற நவம்பர் 28- ஆம் தேதி சென்னையில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் அதில் அவர்களது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் கலந்துகொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது. பின்னர் நடக்கும் திருமண வரவேற்பில் திரைப்பிரபலங்களை அழைக்க திட்டமிட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தேசிய விருதுக்கு தயாராகும் ஜோதிகா!

Quick Share

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஜோதிகா சூர்யாவை திருமணம் செய்து கொண்ட பிறகு சில காலங்கள் நடிப்புக்கு பிரேக் எடுத்தார். அதன் பிறகு 36 வயதினிலே என்ற திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த ஜோதிகா அடுத்தடுத்து கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார்.

கடந்த வருடம் உடன்பிறப்பே திரைப்படத்தில் நடித்திருந்த இவர் தற்போது ஒரு மலையாளம் திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். மம்முட்டி நடிக்கும் அந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஜோதிகா நடிக்கிறார். இதற்கு முன்னதாக ஜோதிகா சில படங்களில் நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.

ஆனால் மம்முட்டி இந்த கதாபாத்திரத்திற்கு ஜோதிகா தான் பொருத்தமாக இருப்பார் என்று நினைத்து அவரிடம் நடிக்கும் படி கேட்டுக் கொண்டார். அதனாலேயே ஜோதிகா மற்ற திரைப்படங்களை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு சம்மதித்தார். தற்போது அந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

காதல் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தின் போஸ்டர் பார்ப்பதற்கு ரொம்பவும் அழகாக இருக்கிறது. அதில் ஜோதிகா, மம்முட்டி இருவரும் எதையோ பார்த்து அழகாக சிரிப்பது போன்று அந்த போஸ்டர் இருக்கிறது. அதில் படத்தின் தலைப்பு காதல் என்ற வார்த்தையும் கவிதை போன்ற அமைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த போஸ்டர் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புக்காக சூர்யா ஜோதிகா இருவரும் சென்ற போட்டோ ரசிகர்களை கவர்ந்திருந்தது. அதைத்தொடர்ந்து தற்போது வெளியாகி இருக்கும் இந்த போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

அது மட்டுமல்லாமல் நீண்ட இடைவெளிக்கு பிறகு மலையாளத்தில் நடிக்கப் போகும் ஜோதிகா இந்த படத்தின் மூலம் நிச்சயம் தேசிய விருது பெறுவார் என்று பட குழுவினர் இப்போதே கூறி வருகின்றனர். அந்த அளவுக்கு அவருக்கு இந்த படத்தில் ஒரு கனமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. தலைப்புக்கு ஏற்றவாறு படமும் ரசிகர்கள் மனதை கொள்ளையடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

விஜயகாந்த் கண்புருவத்தை துளைத்த துப்பாக்கி குண்டு!!அதிர்ச்சி தகவல்

Quick Share

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி அரசியலிலும் பிரபலமாக காணப்பட்ட விஜயகாந்த் தற்போது உடல்நல பிரச்சினையால் வீட்டிலிருந்து ஓய்வு எடுத்து வருகின்றார். ஒரு காலக்கட்டத்தில் நடிப்பில் முன்னணியாக திகழ்ந்த விஜயகாந்திற்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளனர். பின்பு அரசியலில் கால்வைத்த நிலையில், அங்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

ஆம் அரசியலில் களமிறங்கிய உடனே பிரபல முன்னணி கட்சிக்கு எதிர்கட்சியாக சென்று கம்பீரமாக அமர்ந்தார். மக்களுக்கு அனைத்து குறைகளையும் நிறைவேற்றிய விஜயகாந்த் நடிப்பிலும் இவரை அடித்துக் கொள்ளவே முடியாது.

சண்டை காட்சிகளில் டூப் போடாத இவர், உண்மையாகவே நடிப்பதை வழக்கமாக வைத்திருந்தார். இவ்வாறு கம்பீரமாக திகழ்ந்த விஜயகாந்த் தற்போது வீட்டில் முடங்கி கிடக்கின்றார்.

விஜயகாந்திற்கு இந்த இடத்தில் எலும்பு இல்லையா? நடிகர் விஜயகாந்திற்கு விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் என்ற இரண்டு மகன்கள் உள்ள நிலையில், தந்தையுடன் நடித்து நடிகராகவும் அறிமுகமானார் சண்முக பாண்டியன்.

இந்நிலையில் சண்முக பாண்டியன் தன்னுடைய அப்பாவை குறித்து பேசுகையில், திரைப்படம் ஒன்றில் நடித்த போது சண்டைக் காட்சியில் டம்மி துப்பாக்கி வைத்து சுடுவதாக இருந்துள்ளதாம்.

ஆனால் எதிரே நின்று சுட்ட நபரின் திடீரென உண்மையான துப்பாக்கி இருந்ததால், துப்பாக்கி குண்டு விஜயகாந்த் கண்புருவத்தில் துளைத்து சென்றுவிட்ட நிலையில், தற்போது வரை அந்த இடத்தில் எலும்பு இருக்காது என்று மகன் கூறியுள்ளார்.

வசூல் வேட்டையில் யசோதா!

Quick Share

நடிகை சமந்தா நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் படம் யசோதா. 

சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகியுள்ள இத்திரைப்படம் வாடகை தாய் குறித்தும், அதில் நடைபெறும் மருத்துவ முறைகேடு குறித்தும் எடுக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை குவித்து வருகிறது. இப்படத்தை ஹரி மற்றும் ஹரீஷ் ஆகிய இரண்டு இயக்குனர்கள் இணைந்து இயக்கியுள்ளார். 

40 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் முதல் நாளில் 3.20 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. அடுத்து விடுமுறை நாட்கள் வருவதால் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பாக்கின்றனர்.

பிரதீப் ரங்கநாதனை பாராட்டிய ரஜினிகாந்த்

Quick Share

இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து பிரதீப்பை நடிகர் ரஜினிகாந்த் நேரில் பார்த்து பாராட்டியுள்ளார். அவரது புகைப்படங்களை பகிர்ந்த அவர், “இதைவிட வேறு என்ன கேட்க முடியும். சூரியனின் அருகில் இருந்ததுபோன்ற ஒரு வெதுவெதுப்பு. அந்த சிரிப்பு, கண்கள், ஸ்டைல், அழுத்தமான அணைப்பு. என்ன ஒரு ஆளுமை? சூப்பர் ஸ்டார் இன்று லவ் டுடே பார்த்து என்னை பாராட்டினார். நீங்கள் சொன்ன வார்த்தையை மறக்கவே மாட்டேன் சார்” என கூறியுள்ளார்.

பார்த்திபன் குறித்து அவமானப்படுத்து வகையில் அமேசான் பிரைம் நிறுவனம் செய்த விஷயம்

Quick Share

பார்த்திபன்

நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் எப்போதும் தனது திரைப்படங்களை வைத்து புதிதான விஷயங்களை முயற்சி செய்து வருபவர்.

அப்படி அவர் கடைசியாக நடித்து இயக்கியிருந்த திரைப்படம் இரவின் நிழல். அப்படம் முழுக்க ஒரே ஷாட்டில் எடுக்கபட்ட முதல் சிங்கிள் ஷாட் திரைப்படம் என விளம்பரப்படுத்தப்பட்டது.

ஆனால் இரவின் நிழல் திரைப்படத்திற்கு முன்பே ஏற்கனவே இதேபோல் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் வெளியாகியிருக்கிறது என ப்ளூ சட்டை மாறன் சொல்லிவந்தார். இது பின் அவர்கள் இருவருக்குமிடையே பெரிய சர்ச்சையாக வெடித்தது.

அமேசான் பிரைம்

இதற்கிடையே நீண்ட நாட்களாக இப்படம் OTT தளங்களில் ஏதும் வெளியாகாமல் இருந்து வந்தது, மேலும் தற்போது அமேசான் பிரைம் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.

ஆனால் இரவின் நிழல் திரைப்படம் குறித்த அவர்களின் Trivia-ல் உண்மை என்னவென்றால் இது உலகத்திலே இரண்டாவதாக வெளிவந்த சிங்கிள் ஷாட் திரைப்படம். இதன் இயக்குநர் தொடர்ந்து தவறான உண்மையை சொல்லி வருகிறார்.

அமேசான் பிரைம் நிறுவனம் பார்த்திபன் குறித்து பதிவிட்டுள்ள இந்த விஷயம் இணையத்தில் காட்டு தீப்போல் பரவி வருகிறது. 

அத்துமீறும் ராபர்ட் மாஸ்டர்… கடும் கோபத்தில் ரச்சிதா கணவர்!

Quick Share

ரச்சிதாவிடம் தொடர்ந்து அத்துமீறி வரும் ராபர்ட் மாஸ்டர் மீது அவரது கணவர் கடும் கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களில் ஒருவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலின் மூலம் பிரபலமான ரச்சிதா, திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

கணவர் தினேஷ்

ரச்சிதா சீரியல் நடிகரான தினேஷ் கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களாக பிரிந்து இருப்பதாக தகவல் வெளியானது. மனைவியை பிரிந்து இருப்பது குறித்து சமீபத்தில் பேசிய தினேஷ், விரைவில் எல்லாம் சரியாகும் என்று கூறியிருந்தார்.

முத்தம் கேட்ட ராபர்ட்

ரச்சிதா பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றதும் முதல் ஆளாக அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள சக போட்டியாளரான ராபர்ட் மாஸ்டர், ரச்சிதாவிடம் வழிந்து வருகிறார். அவரது கையை பிடித்து இழுத்தது, அவரிடம் முத்தம் கேட்டது போன்ற சம்பவங்கள் ரச்சிதாவின் ரசிகர்கள் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

குடும்பத்தினர் கோபம்

இதுகுறித்து ராபர்ட்டிடம் தெளிவுப்படுத்திய ரச்சிதா, நீங்கள் எனக்கு அண்ணன் மாதிரி என்று கூறினார். ஆனாலும் அடங்குவதாய் இல்லை ராபர்ட் மாஸ்டர். ராபர்ட் மாஸ்டரின் நடவடிக்கையால் ரச்சிதாவின் கணவரான தினேஷ் கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. தினேஷ் மட்டுமின்றி அவரது மாமியார் உட்பட ஒட்டுமொத்த குடும்பத்தினரும் செம கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரெட் கார்டு கொடுக்க…

ராபர்ட் மாஸ்டர் இப்படியே செய்து கொண்டிருந்தால், தினேஷ் இந்த விவகாரத்தில் தலையிட்டு அவருக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது. பெண் போட்டியாளர்களை, தடவியும், உரசியும் எல்லை மீறி வந்த அசல் கோளாறு ரசிகர்களின் எதிர்ப்பால் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் ராபர்ட் மாஸ்டரும் அதேபோன்று ஒரு சம்பவத்தை எதிர்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் களமிறங்கும் லட்சுமி மேனன்!

Quick Share

சுந்தர பாண்டியன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை லட்சுமிமேனன். வெற்றிப்படமான இப்படத்தை தொடர்ந்து அவர் நடிப்பில் கும்கி படமும் சிறந்த வெற்றிப்படமாக அமைந்தது. தொடர்ந்து ரெக்க, வேதாளம் உள்ளிட்ட படங்களில் நடித்த லட்சுமி மேனன் சிறிது காலம் வெளியில் தென்படாமல் இருந்தார். வாய்ப்பு குறைந்ததே இதற்கு காரணமாக இருந்தது. 

இதனால், படிப்பிலும் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால் நடிப்பில் முழு கவனம் செலுத்த முடியவில்லை என்று கூறிவந்தார். இந்நிலையில் அவர், இப்போது நடிப்பில் முழுகவனம் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ளார். அவர் எதிர்பார்த்தது போலவே கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. ‘மலை’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் ‘அறம்’ நயன்தாரா அளவுக்கு தனக்கு பெயர் வாங்கித்தரும் என்று தனது நண்பர்கள் வட்டாரத்தில் சொல்லி மகிழ்ச்சி அடைந்து வருகிறார்.

கண்ணீரில் சமந்தா!!குவியும் வாழ்த்து…யசோதா வெற்றி

Quick Share

ஹரி மற்றும் ஹரிஷ் இயக்கத்தில் சமந்தா நடித்த யசோதா படம் இன்று தியேட்டர்களில் ரிலீஸாகியிருக்கிறது. படம் பார்த்த அனைவரும் சமந்தாவின் நடிப்பை பாராட்டுகிறார்கள்.

இந்த படம் சூப்பர் ஹிட்டாவதை யாராலும் தடுக்க முடியாது என்கிறார்கள். படத்தை தன் தோளில் தாங்கியிருக்கிறார் சமந்தா என்கிறார்கள் ரசிகர்கள். அமெரிக்காவிலும் யசோதாவை கொண்டாடுகிறார்கள்.

யசோதா படத்தில் நடித்தபோதே மயோசிடிஸ் எனும் அரிய வகை நோயுடன் போராடினார் சமந்தா. ஆனால் அதை யாருக்கும் சொல்லாமல் கஷ்டப்பட்டு நடித்துவிட்டார்.

மயோசிடிஸ் பற்றி கடந்த சில நாட்களுக்கு முன்பு சமந்தா சமூக வலைதளங்களில் தெரிவித்தபோது தான் யசோதா படக்குழுவுக்கும் அது பற்றி தெரிய வந்து அதிர்ச்சி அடைந்தது.

இந்நிலையில் அவ்வளவு வலியையும் தாங்கிக் கொண்டு தான் நடித்த படம் வெற்றி பெற்றுள்ளதை பார்த்த சமந்தா ஆனந்த கண்ணீர் விட்டுள்ளார்.

பட ரிலீஸுக்கு முன்பாக தான் டென்ஷனில் இருப்பதாக போஸ்ட் போட்டார். தற்போது டென்ஷன் போய் சந்தோஷத்தில் இருக்கிறார் சமந்தா.

அவரின் இந்த வெற்றியை தங்களின் வெற்றியாக கொண்டாடுகிறார்கள் ரசிகர்கள். உங்களின் அன்புக்கெல்லாம் என்ன செய்யப் போகிறேனோ என்று சமந்தா நெகிழ்ந்திருக்கிறார்.

ஹரி மற்றும் ஹரிஷ் தன்னிடம் கதை சொன்னபோதே இது கண்டிப்பாக தியேட்டரில் ரிலீஸாக வேண்டிய படம் என்று தெரிவித்திருக்கிறார் சமந்தா. அவர் சொன்னது தான் சரி என படம் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

அரிய வகை நோயுடன் சமந்தா நடித்த யசோதா படம் எப்படி?: ட்விட்டர் விமர்சனம்

Quick Share

ஹரி மற்றும் ஹரிஷ் இயக்கத்தில் சமந்தா நடித்த யசோதா படம் இன்று தியேட்டர்களில் ரிலீஸாகியிருக்கிறது. யசோதா படம் பார்ப்பவர்கள் அது குறித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்தியா தவிர்த்து அமெரிக்காவிலும் யசோதாவுக்கு அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதை பார்த்த சமந்தா மகிழ்ச்சி அடைந்து தன் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

யசோதா படம் பார்த்தவர்கள் அது பற்றி ட்விட்டரில் கூறியிருப்பதாவது, சமந்தாவின் நடிப்பு சிறப்பு. திருப்தி அளிக்கும் எமோஷனல் த்ரில்லராக அமைந்திருக்கிறது யசோதா. படத்தை தன் தோள்களில் தாங்கியிருக்கிறார் சமந்தா. பிஜிஎம் அருமை. விஷுவல்ஸ், ஆக்ஷன் காட்சிகள் நன்றாக இருக்கிறது. கான்செப்ட் சிறப்பு என தெரிவித்துள்ளனர்.

யசோதா படம் பார்த்தவர்கள் அது குறித்து நல்லபடியாக விமர்சிப்பது படக்குழுவை மகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது. இது சமந்தாவுக்கு கிடைத்த வெற்றி என்று ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

மயோசிடிஸ்

மயோசிடிஸ் எனும் அரிய வகை நோயில் இருந்து மீண்டு வருகிறார் சமந்தா. யசோதா படத்தில் நடித்தபோதே அவருக்கு மயோசிடிஸ் பிரச்சனை இருந்திருக்கிறது. இருப்பினும் அதை யாருக்கும் சொல்லாமல் நடித்திருக்கிறார். மேலும் ஆக்ஷன் காட்சிகளில் டூப் போடாமல் நடித்து அசத்தியிருக்கிறார். அந்த ஆக்ஷன் காட்சிகள் தான் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

நடிகர் விஜயின்” ரஞ்சிதமே “பாடலுக்கு கடும் எதிர்ப்பு!!மோசமான வரிகள்…

Quick Share

சமீபத்தில் ‘வாரிசு’ படத்தின் முதல் சிங்கிளாக வெளியான ‘ரஞ்சிதமே’ பாடலுக்கு தற்போது கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

வாரிசு படம் 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் நடிப்பில் வெளியாகும் படங்களின் முதல் சிங்கிள் பாடல் ரசிகர்களைக் கவர்ந்துவிட்டால் அவை யூ-டியூப்பில் பெரிய சாதனையைப் படைத்து விடும். 

இவர் பாடலுக்கென்று ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு உள்ளது. அவருடைய முந்தைய பட பாடல்களின் சாதனைகளை எப்படியும் லேட்டஸ்ட்டாக வெளியாகும் பாடல்கள் முறியடித்துவிடும்.

ஆனால், சமீபத்தில் ‘வாரிசு’ படத்தின் முதல் சிங்கிளாக வெளியான ‘ரஞ்சிதமே’ பாடல் முந்தைய சாதனைகளை முறியடிக்கவில்லை. ‘ரஞ்சிதமே’ பாடல் வெளியாகி 24 மணி நேரத்தில் 18.5 மில்லியன் பார்வைகளையும், 1.3 மில்லியன் லைக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. 

இதற்கு முன் வெளியான ‘பீஸ்ட்’ படத்தின் முதல் சிங்கிளான ‘அரபிக் குத்து’ பாடல் 24 மணி நேரத்தில் 23.7 மில்லியன் பார்வைகளையும், 2.2 மில்லியன் லைக்குகளையும் பெற்று சாதனை படைத்தது. அந்த சாதனையை ‘ரஞ்சிதமே’ பாடல் முறியடிக்கவில்லை

‘ரஞ்சிதமே’ பாடலுக்கு எதிர்ப்பு

இந்நிலையில், ‘ரஞ்சிதமே’ பாடலில் இடம் பெற்ற, ‘உச்சு கொட்டும் நேரத்திலே உச்சகட்டம் தொட்டவளே…’ என்ற வரிகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பாடலின் உண்மையான அர்த்தம் புரியாமலேயே, பல சிறுவர்கள் இப்பாடலை பாடிக் கொண்டு வருகிறார்கள்.

விஜய் போன்ற பிரபல நடிகர்கள், சமூக பொறுப்பை கடைப்பிடிக்க வேண்டும் என்று பலர் இப்பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூகவலைத்தளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர். 

ஹீரோயினான சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி! அடுத்தடுத்து அடித்த அதிர்ஷ்டம்

Quick Share

சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி லைசென்ஸ் திரைப்படத்தில்  முதன்மை கதாபாத்திரத்தில் நடிகையாக அறிமுகமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இளஞ்செழியன் தயாரிக்கும் லைசென்ஸ் படத்தின் அறிமுக விழா அண்மையில் நடந்துள்ளது.

இந்த நிலையில் இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

ராஜலட்சுமிக்கு அடுத்தடுத்து அடித்த அதிர்ஷ்டம்

ராஜ லட்சுமியுடன் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் ராதாரவி நடிக்கிறார்.  

பெண்களின் மேன்மையை எடுத்துரைக்கும் விதமாக எடுக்கப்படும் இந்த படத்தில்  சில பாடல்களை ராஜ லட்சுமி பாட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் சூப்பர் சிங்கர் ராஜலட்சுமிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.

  




You cannot copy content of this Website