சினிமா

“படுக்கைக்கு வந்தால் எவ்வளவு வேண்டும் என்று அழைத்த பேராசிரியர்”..‘மாஸ்டர்’ ...

Quick Share

நடிகையை சௌந்தர்யாவிடம் பேராசிரியர் ஒருவர் படு ஆபாசமாக பேசியுள்ளது சோசியல் மீடியாவில் பரபரப்பை கிளப்பியுள்ளது.


விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள், நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அந்த வகையில் பல ஆண்டு காலமாக மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருக்கும் நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி ஜூனியர், சீனியர் என்று இரு பிரிவுகளாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர்

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா, அடிக்கடி தன்னுடைய போட்டோஷுட் புகைப்படம், வீடியோக்களை பகிர்வது, ரசிகர்களுடன் உரையாடுவது என ஏதாவது ஒன்று செய்து சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருவார். இந்நிலையில் சௌந்தர்யா பதிவிட்டுள்ள போஸ்ட் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது சமூக வலைத்தளத்தில் இவரிடம் மதுரையை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் ஆபாசமாக கேள்வி எழுப்பியிருந்தார். குறிப்பாக படுக்கைக்கு வந்தால் எவ்வளவு வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார் சௌந்தர்யா. இவரிடம் படிக்கும் பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும் என்றும் தன்னுடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார். நடிகை செளந்தர்யா பதிவை தொடர்ந்து அந்தப் பேராசிரியருக்கு சோசியல் மீடியாவில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

சௌந்தர்யா நந்தகுமார்.


இவர் 2010 ஆம் ஆண்டில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதன்பின்னர் சின்னத்திரை சீரியல்களிலும், குறும்படங்களிலும் நடித்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘மாஸ்டர்’ படத்திலும் பேராசிரியர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவங்களுக்கு என்ன ஆச்சு – திருமணம் செய்துகொள்ள மறுக்கும் 7 நடிகைகள்!

Quick Share

பொதுவாக சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகைகளுக்கு மார்க்கெட் கொஞ்சம் குறைந்து விட்டால் அவர்கள் ஒரு தொழிலதிபராக பார்த்து திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிடுவார்கள். திருமணத்துக்கு பின்னும் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்த நடிகைகளும் இருக்கிறார்கள். ஆனால் வயசானாலும் திருமணமே செய்து கொள்ள மாட்டேன் என்று அடம் பிடிக்கும் சில நடிகைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி திருமணம் வேண்டாம் என்று ஓட்டம் பிடித்த சில நடிகைகளைப் பற்றி காண்போம்.

தமன்னா இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தற்போது தெலுங்கு பக்கம் கவனம் செலுத்தி வரும் தமன்னா 32 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். வயதாகி விட்டதே என்று அவரிடம் கேட்டால் சினிமாவில் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது என்று கூலாக பதில் சொல்கிறார்.

லக்ஷ்மி ராய் இவருக்கு 32 வயது தாண்டிவிட்டது ஆனாலும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். சினிமாவில் மார்க்கெட் இருந்தால் கூட பரவாயில்லை தற்போது இவர் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவது, கவர்ச்சி வேடங்களில் நடிப்பது என்று காலத்தை கடத்தி வருகிறார். அதுமட்டுமல்லாமல் வாய்ப்பு தேடி பல கவர்ச்சி போட்டோக்களையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

ப்ரியா ஆனந்த் 35 வயதாகும் இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக சுற்றி வருகிறார். ஆரம்பத்தில் தமிழில் அதிக திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்த இவர் சமீபகாலமாக மலையாள பக்கம் தன் கவனத்தை திருப்பியுள்ளார்.

சதா தமிழில் ஜெயம், அந்நியன் போன்ற பல திரைப்படங்களில் நடித்து பிரபலமான இவருக்கு தற்போது 38 வயது ஆகிவிட்டது. இருந்தாலும் திருமணம் செய்து கொள்ளாமல் மீண்டும் திரைப்படங்களில் ஏதாவது வாய்ப்பு கிடைக்கும் என்று ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கிறார்.

வாணி போஜன் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த ஹீரோயின்களில் இவரும் ஒருவர். சீரியல்களில் மிகப் பிரபலமாக இருந்த இவருக்கு சினிமாவில் தற்போது ஏராளமான படங்கள் வரிசை கட்டி நிற்கிறது. ஆனால் அந்தப் படங்களில் பாதிக்குமேல் ரிலீசாகாமல் கிடப்பிலேயே கிடக்கிறது. தற்போது 33 வயதாகும் இவர் திருமணம் செய்து கொள்ளாமல் சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்று மும்முரமாக நடித்து வருகிறார்.

த்ரிஷா 38 வயதாகும் இவர் இன்னும் அதே இளமையுடன் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருகிறார். சில வருடங்களுக்கு முன் இவர் ஒரு தயாரிப்பாளரை காதலித்து நிச்சயதார்த்தமும் செய்து கொண்டார். பிறகு என்ன நடந்ததோ அந்த திருமணத்தை நிறுத்திவிட்டு தற்போது வரை வேறு திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்.

அனுஷ்கா செட்டி அருந்ததீ, பாகுபலி போன்ற திரைப்படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்த இவருக்கு தற்போது 40 வயது ஆகிவிட்டது. ஆனாலும் அவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஏன் என்று கேட்டால் என் மனதிற்கு பிடித்தவரை இன்னும் பார்க்கவில்லை என்று கூறுகிறார்.

விஜய் டிவியிலிருந்து விலகும் மாகாபா?

Quick Share

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் பெரும்பாலான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவர் மாகாபா ஆனந்த். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் விதத்தில் மாகாபாவின் நிகழ்ச்சிகள் இருக்கும். ஒரு நிகழ்ச்சியை ஆரம்பத்திலிருந்து இறுதிவரை ஆடியன்சுக்கு போஃர் அடிக்காமல் எடுத்து செல்வதில் மாகாபா வல்லவர்.

விஜய் டிவியிலிருந்து பல பிரபலங்கள் வெள்ளித்திரைக்கு சென்று சாதித்துள்ளனர். சந்தானம், சிவகார்த்திகேயன் போன்ற பல நடிகர்கள் விஜய் டிவியில் இருந்து வந்தவர்கள்தான். அந்த வகையில் மாகாபாவும் வானவராயன் வல்லவராயன் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

அதன்பிறகு மாகாபா சில படங்களில் நடித்தாலும் சின்னத்திரை அளவிற்கு வெள்ளித்திரையில் அவருக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் மீண்டும் விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இவரை மிகவும் பிரபலமாக்கியது விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தான்.

ஆரம்பத்தில் மாகாபாவும், பாவனாவும் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். இதனால் மாகாபா ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலமானார். அதன்பிறகு பிரியங்காவுடன் இணைந்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். இந்நிலையில் பிரியங்கா பிக் பாஸ் வீட்டிற்கு செல்ல பிரியங்கா தொகுத்து வழங்கிய ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியையும் மாகாபா தொகுத்து வழங்கினார்.

தற்போது விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருப்பவர் மாகாபா தான். ஆனால் இனிமேல் மாகாபா விஜய் டிவியில் எந்த நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குவது இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதைக் கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது மாகாபா தற்போது குடும்பத்துடன் தாய்லாந்து சுற்றுலா செல்ல இருக்கிறார்.

இதனால் ஸ்டார்ட் மியூசிக், சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளில் இருந்து சில வாரங்கள் விடுப்பு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. தாய்லாந்து சென்று வந்த பிறகு மாகாபா மீண்டும் இந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரைக்கும் இந்த இரண்டு நிகழ்ச்சிகளையும் பிரியங்கா தொகுத்து வழங்குவார் என கூறப்படுகிறது.

ஒருவழியா கல்யாணம் – விரைவில் நிதி அகர்வாலை கரம்பிடிக்கவிருக்கும் சிம்பு!

Quick Share

நடிகர் சிம்பு தனது வருங்கால மனைவியை தெரிவு செய்துவிட்டதாகவம், சிம்புவின் முடிவிற்கு தந்தை டி.ஆர் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வீட்டின் மூத்த பிள்ளையான சிம்பவிற்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஆனால் அவரது தம்பி மற்றும் தங்கைக்கு திருமணம் முடிந்துவிட்டதால் சிம்புவின் பெற்றோர்கள் கவலையில் இருக்கின்றனர்.

சிம்புவின் வாழ்க்கையில் காதல் என்பது நிலைக்காத ஒன்றாக இருக்கின்றது. ஆரம்பத்தில் இவரது காதல் தோல்வியை சந்தித்தது அனைவருக்கும் தெரிந்த விடயம்.

இந்நிலையில் சமீபத்தில் ஈஸ்வரன் படத்தில் தன்னுடன் நடித்த நிதி அகர்வாலை சிம்பு காதலிப்பதாகவும், சிம்பு வீட்டில் தான் குறித்த நடிகை தங்கியிருப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால் இதனை மறுத்து நிதி அகர்வால் விளக்கம் அளித்தார்.

நிதி அகர்வால் விளக்கத்தினையும் மீறி, இவர்கள் இருவரும் லிவ் இன் முறைப்படி வாழ்வதாக தற்போது கூறப்படுகின்றது. அதுமட்டுமின்றி வெந்து தணிந்தது காடு பட வேலை முடிந்ததும் இவர்கள் திருமணம் நடக்கும் என்றும், நிதி அகர்வாலை மருமகளாக ஏற்றுக்கொள்ள டி.ஆர். சம்மதம் தெரிவித்துள்ளதாகவம் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

சிம்புவின் வாழ்க்கையில் காதல் வருவதும், போவதுமாக இருக்கும் நிலையில், இந்த காதலாவது திருமணத்தில் முடியுமா என்று ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

விஜய் ரசிகர்களால் முடங்கிய சிபிஎப்சி இணையதளம்!ஏன் தெரியுமா ?

Quick Share

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும், யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தில் இருந்து முதல் பாடலான ‘அரபிக்குத்து’ பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று,யூடியூப்பில் சாதனையும் படைத்தது . 
அதனை தொடர்ந்து அனிருத் இசையில் நடிகர் விஜய் பாடியிருக்கும் ‘ஜாலியோ ஜிம்கானா’ பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் பீஸ்ட் படத்திற்கு சிபிஎப்சி குழு இன்று யு/ஏ தணிக்கை சான்றிதழை வழங்கியதாக தகவல் வெளியாகியது. இதை தொடர்ந்து படத்தின் தணிக்கை சான்றிதழும் இணையத்தில் கசிந்தது. 
இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் பீஸ்ட் படத்தின் தணிக்கை சான்றிதழை விஜய் ரசிகர்கள் அதிகளவு தேடியதில் சிபிஎப்சி இணையதளம் முடங்கியது.

கார் விபத்தில் பிரபல நடிகை மரணம்! ஆண் நண்பரால் ஏற்பட்ட துயரம்

Quick Share

பிரபல தெலுங்கு நடிகை காயத்ரி டாலி ஹோலி கொண்டாட்டம் முடிந்து வீடு திரும்பிய போது கார் விபத்தில் உயிரிழந்தார்.

நடிகை காயத்ரி டாலி

பிரபல தெலுங்கு நடிகையான காயத்ரி டாலி(26) ” மேடம் சார் மேடம் அந்தே” என்ற வெப் சீரிஸில் நடித்து பிரபலமானவர். மேலும் இவர் ஜல்சா ராயுடு என்ற பிரபல யூடியூப் சேனலிலும் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். 

இந்நிலையில் கடந்த 18ம் தேதி ஆண் நண்பரான ரத்தோட் என்பவருடன் ஹைதராபாத்தில் ஹோலி பண்டிகையை கொண்டாடிவிட்டு கச்சிபோலிக்கு வந்து கொண்டிருந்தார்.காரை ரத்தோட் ஓட்டி வந்த நிலையில், கார் கட்டுப்பாட்டை இழந்து கார் டிவைடரில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவ இடத்தில் பலி

இந்த விபத்தில் பிரபல நடிகை காயத்ரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஆண் நண்பரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், காப்பாற்றமுடியாமல் அவரும் உயிரிழந்துள்ளார்.

இவர்கள் இருவர் மட்டுமின்றி, சாலையை கடந்து செல்ல முயன்ற பெண் பாதசாரி ஒருவரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் நடிகை இவ்வாறு ஆண் நண்பருடன் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் …குவியும் லைக்ஸ்! விவாகரத்துக்கு பிறகு தீயாய் பரவும் குடும்ப...

Quick Share

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

அண்மையில் இசைஞானி இளையராஜாவின் ‘ராக் வித் ராஜா’ சென்னை தீவு திடலில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் தனது இரண்டு மகன்களுடன் தனுஷ் கலந்து கொண்டார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி படு வைரலானது.

இந்நிலையில் தனுஷ் பாணியில் மகள்களுடன் இருப்பதை போன்று ஐஸ்வர்யா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள பதிவு நெட்டிசன்களிடம் லைக்குகளை குவித்து வருகிறது.

விவாகரத்து அறிவிப்பிற்கு ஐஸ்வர்யா 

விவாகரத்து அறிவிப்பிற்கு பிறகு ஐஸ்வர்யா மியூசிக் ஆல்பம் இயக்கும் வேளைகளில் இறங்கினார்.

இந்நிலையில் ஐஸ்வர்யா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகன்களுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்

அதில், என்னுடைய வயிற்றில் குழந்தைகளை இருக்கும்போது உதைத்தீர்கள்.

இப்போது என்னை நீங்கள் முத்தமிடுவதை ரசிக்கிறேன். இந்த அன்பான ஆத்மாக்களை மகன்களாக பெற்றதற்கு கடவுளுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.

ட்விட்டரில் இருந்து தனுஷ் பெயரை நீக்கியவுடன் மகன்களுடன் இருப்பதை போன்று ஐஸ்வர்யா பகிர்ந்துள்ள உருக்கமான பதிவு இணையத்தில் லைக்குகளை குவித்து வருகிறது.

மிஷ்கின் இயக்கும் புதிய படத்தில் நடிகர் விஜய் சேதுபதி!

Quick Share

விஜய் சேதுபதி கதாநாயகனாக மட்டுமன்றி மற்ற நடிகர்கள் படங்களில் இமேஜ் பார்க்காமல் வில்லனாகவும் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் கடைசி விவசாயி படம் கடந்த மாதம் வெளியானது. கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் வில்லனாக நடித்து முடித்துள்ளார். விஜய் சேதுபதியின் இடம் பொருள் ஏவல், மாமனிதன் ஆகிய படங்கள் முடிந்து திரைக்கு வர தயாராக உள்ளன. 

இந்நிலையில், அடுத்து மிஷ்கின் இயக்கும் புதிய படத்தில் நடிக்க விஜய் சேதுபதியிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே மிஸ்கின் இயக்கி உள்ள பிசாசு 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதி நடித்து இருக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்ட பணிகள் நடக்கின்றன. 
இந்நிலையில் மீண்டும் புதிய படத்தில் இருவரும் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விடுதலை, யாதும் ஊரே யாவரும் கேளிர், காந்தி டாக்கீஸ் ஆகிய படங்களும் விஜய் சேதுபதியின் கைவசம் உள்ளன.

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் உக்ரைன் நடிகை !உக்ரைன் நாட்டை சேர்ந்த மாடல் அழகியும், ந...

Quick Share

நடிகர் சிவவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம்  ‘டாக்டர்’. தற்போது சிவகார்த்திகேயன் டான், அயலான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர் அனுதீப் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த திரைப்படத்திற்கு ‘எஸ்.கே 20’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து சுரேஷ் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இசையமைப்பாளர் தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்த நிலையில் எஸ்.கே 20 படத்தின் கதாநாயகி குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் ‘எஸ்.கே 20’ படத்தில் உக்ரைன் நாட்டை சேர்ந்த மாடல் அழகியும், நடிகையுமான மரியா ரியாபோஷாப்கா நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இவர் ஹாட்ஸ்டாரில் வெளியான ‘ஸ்பெஷல் ஆப்ஸ்’ இந்தி வெப் தொடரில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அந்த அறிவிப்பை பகிர்ந்து மரியா ரியாபோஷாப்காவிற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.

“கேரளத்தின் ரோல் மாடல் நீங்கள்” – எழுந்து நின்று வரவேற்ற மக்கள்

Quick Share

சித்திரம் பேசுதடி, தீபாவளி, அசல் உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகை பாவானாவை மக்கள் எழுந்து நின்று ஆரவாரத்தோடு கரவொலி எழுப்பி வரவேற்றுள்ளனர்.

தமிழ், தெலுங்கு, கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் பாவனா. சில ஆண்டுகளுக்கு முன்பு கன்னட தயாரிப்பாளரை திருமணம் செய்து சினிமாவைவிட்டு ஒதுங்கினார். 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் ‘என்றெகாக்காக்கொரு பிரேமண்டார்ந்னு’ என்ற மலையாள படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

இந்நிலையில், கேரளாவில் தொடங்கி உள்ள சர்வதேச திரைப்பட விழாவில் பாவனா கவுரவிக்கப்பட்டு உள்ளார். விழா தொடங்கும் சில நிமிடங்கள் முன்பாக விழா அழைப்பிதழில் பாவனா பெயர் இல்லாத நிலையில் போராட்டத்தின் இன்னொரு பெண் வடிவமான பாவனாவை மேடைக்கு அழைக்கிறோம்” என்று அவரது பெயரை சொல்லி அழைத்தனர்.

உடனே கூட்டத்தினர் ஆரவாரத்தோடு கரவொலி எழுப்பினார்கள். மந்திரிகள் உட்பட மேடையில் இருந்த அனைவரும் எழுந்து நின்று பாவனாவுக்கு வரவேற்பு கொடுத்தனர்.

பின்னர் பாவனா குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். கேரள கலாசாரத் துறை மந்திரி ஷாஜி செரியன் பேசும்போது “கேரளத்தின் ரோல் மாடல் நீங்கள்” என்று பாவனாவை புகழ்ந்தார். இந்த வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. நடிகை பார்வதி இந்த வீடியோவை பகிர்ந்து, “வெல்கம் பேக் பாவனா. இந்த இடம் உனக்கானது” என்று குறிப்பிட்டு உள்ளார்

படுமோசமாக போஸ் எடுத்து புகைப்படங்களை வெளியிட்ட பிக்பாஸ் நடிகை..சிவானி!

Quick Share

சிவானி விஜய் டி.வி. விஜய் டிவியின் மூலம் திரையுலகிறகு  அறிமுகமானவர் . அதற்கு பின்பு கடைக்குட்டி சிங்கம் தொடரில் நடித்தார்.

அப்போதிருந்து, ஜீ தமிழ் தொடரில் இரட்டை ரோஜாவாக சிவானி பல சீரியல்களில் தோன்றினார்.

பின்னர், விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தோன்றும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது, இது பொதுமக்களிடையே மிகவும் பிரபலமானது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் சிவானி 98 நாட்களாக தாக்குப் பிடித்தார்.

தற்போது மாலத்தீவில் மிக மோசமான சூழ்நிலையில் இருக்கும் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெறுப்பேற்றி வருகிறார். மிக முக்கியமாக, ரம்பாவை மிஞ்சும் அளவிற்கு  தொடை தெரிவது போன்ற படங்களை வெளியிட்டு ரசிகர்களை அவர் பக்கம் திருப்பியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்த ஷிவானிக்கு தற்போது வரை அது ஒரு கனவாக தான் இருக்கிறதாம்.

கவர்ச்சி உடையில் தமன்னா!தங்கம் போன்று மின்னும் நிறம் கொண்ட அழகி தமன்னா….நீங்களே ...

Quick Share

தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம், மராத்தி மற்றும் இந்தி மொழிப் படங்களிலும் அவர் நடித்து வருகிறார். தற்போது தெலுங்கில் 5 படங்களிலும், இந்தியில் மூன்று படங்களிலும் நடித்து கொண்டிருக்கிறார்.
ஹோலி பண்டிகையையொட்டி தமன்னா புதிய உடை அணிந்து ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அழுக்கு படிந்த, கிழிந்த மற்றும் பாதங்களை முழுவதுமாக மூடக்கூடிய வகையில் வித்தியாசமான ஒரு பேண்ட் மற்றும் கவர்ச்சிகரமான உடை அணிந்திருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

‘ஹோலி பண்டிகையை கொண்டாட வேறு நல்ல உடை இல்லையா?’, ‘இப்படியா கவர்ச்சியாக உடை அணிந்து வருவதா?’ என்று வசை பாடுகிறார்கள். ‘கண்ணாடி போன்ற இந்த உடை உங்களுக்கு கச்சிதமாக இருக்கிறது’, என்று தமன்னாவுக்கு ஆதரவாகவும் சிலர் கருத்து பதிவிடுகிறார்கள்.




You cannot copy content of this Website