சினிமா

பாலாவுக்கு மது மற்றும் போதை வஸ்து பழக்கம்! அரசியல் வாரிசுடன் தொடர்பு..அதிர்ச்சியளிக்கும...

Quick Share

இயக்குனர் பாலாவும், முத்துமலரும் விவாகரத்து பெற்ற நிலையில் அவர்களுக்கு இடையில் அரசியல் வாரிசு வர என்ன காரணம் என்ற தகவல் கசிந்துள்ளது.

முத்துமலருக்கும் அவருடன் கல்லூரியில் படித்த அரசியல் தலைவரின் மகனுக்கும் இடையே மீண்டும் பழக்கம் ஏற்பட்ட இயக்குனர் பாலாதான் காரணமாம்.

பாலாவுக்கு மது மற்றும் போதை வஸ்து பயன்படுத்தும் பழக்கம் உள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகின்றது.அந்த பழக்கங்களால் பல நாள் இரவு பாலா வீட்டிற்கு செல்லவில்லையாம்

அவரை தேடி முத்துமலர் தான் வருவாராம். இப்படி போதையே கதி என்று பாலா இருந்ததால் தான், பஞ்சாயத்து பேச அந்த அரசியல் வாரிசை தொடர்பு முத்துமலர் கொண்டாராம்.

பஞ்சாயத்துக்கு அழைத்த நபர் கடைசியில் முத்துமலருடன் நெருக்கமாகிவிடவே அது பாலாவுக்கு பிடிக்கவில்லையாம். கணவன், மனைவி இடையே வேறு ஒருவர் வரவே, இனியும் சேர்ந்திருப்பது சரியில்லை என்று பிரிந்துவிட்டார்களாம்.

எல்லை மீறி கொச்சையாக நடக்கும் பிரபலங்கள்! முகம் சுளிக்க வைக்கும் நடத்தைகள்! bigboss அல்...

Quick Share

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களாக பல சர்ச்சையான விடயங்கள் நடந்து வருகிறது.

போட்டி என்பதனை தாண்டி, மாறி மாறி கருத்து மோதல்கள் மற்றும் தனிநபர் தாக்குதல்கள் என தொடர்ந்து இருப்பதாக ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

சில தினங்களுக்கு முன், நிரூப்பிடம் பேசும் அனிதா, கொச்சை வார்த்தைகளை பயன்படுத்தி இருந்தார்

இது தொடர்பான வீடியோக்கள், பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் அதிக விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது. பல குடும்பத்தினர் கண்டு களிக்கும் நிகழ்ச்சியில் இப்படியான வார்த்தைகளை பயன்படுத்துவது அனைவருரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அனிதா மற்றும் இல்லை ஜூலியை பார்த்து நிரூப்பும் கூட கொச்சை வார்த்தை பயன்படுத்தி இருந்தார். அடிதடி, மோதல் என மற்ற அனைத்தையும் சகித்துக் கொள்ளலாம்.

ஆனால், இது போன்ற கொச்சை வார்த்தைகள் பேசுவது பற்றி, சிம்பு மற்றும் பிக்பாஸ் குழுவினர் நிச்சயம் நடவடிக்கை எடுத்து, இம்மாதிரியான வார்த்தைகள் பயன்படுத்துவதை தவிர்க்க வழி செய்ய வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

குறிப்பாக தமிழ் ரசிகர்கள் அதிகம் பார்ப்பதால் போட்டியாளர்கள் நடந்து கொள்ளும் விதம் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சினிமா விமர்சனம்; ‘ஹேய் சினாமிகா’முக்கோண காதல் கதை…

Quick Share

நடிகர்: துல்கர் சல்மான்  நடிகை: அதிதி ராவ் ஹைதரி  டைரக்ஷன்: பிருந்தா  இசை :கோவிந்த் வசந்தா  ஒளிப்பதிவு : பிரீத்தா ஜெயராமன்சதா நச்சரிக்கும் கணவரை பிரிய வேறொரு பெண்ணிடம் உதவி கேட்கிறார் மனைவி. பிரிவு சாத்தியமானதா இல்லை மீண்டும் அன்பே பேரன்பே என்றானதா என முக்கோண காதல் கதை ஒன்லைனில் வந்திருக்கிறது ஹே சினாமிகா.மார்ச் 07, 07:04 PMநடன இயக்குனர் பிருந்தா டைரக்டு செய்துள்ள படம். துல்கர் சல்மானும் அதிதி ராவும் காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர். ஒரு கட்டத்தில் சதா பேசிக்கொண்டும் பிறருக்கு அறிவுரை வழங்கி கொண்டும் இருக்கும் துல்கர் சல்மானின் குணாதிசயம் அதிதிராவுக்கு பிடிக்காமல் போகிறது. அவரிடம் இருந்து விலக முடிவு செய்து வெளியூர் செல்கிறார். அங்கும் துல்கர் சல்மான் வந்து விடுகிறார். எனவே ஆண்களையே பிடிக்காத மனநல ஆலோசகர் காஜல் அகர்வாலை அணுகி கணவரை தன்னிடம் இருந்து பிரிக்க உதவி கேட்கிறார். காஜலும் சம்மதிக்கிறார். துல்கர் சல்மானும் அதிதியும் பிரிந்தார்களா? என்பது மீதி கதை. 
துல்கர் சல்மான் வெகுளியாகவும் புத்திகூர்மை உள்ளவராகவும் வந்து கவர்கிறார். மனைவிக்கு பிடிக்காத அவரது குணாதிசயமே மக்கள் கொண்டாடும் அளவுக்கு உயர்த்துவது ஈர்க்கிறது. மனைவிமேல் அதீத அன்பு வைப்பதும் பிறகு அவராலேயே உடைந்துபோய் கலங்குவதுமாய் கதாபாத்திரத்தை இன்னும் வலுவாக்கி இருக்கிறார். அதிதிராவ் இளைமை பொலிவோடு வசீகரிக்கிறார். கணவரிடம் இருந்து விலக வகுக்கும் வியூகங்கள் சுவாரஸ்யமானவை. பிரிய முடிவு எடுத்த பிறகு கணவரோடு காஜல் நெருக்கம் காட்டுவதை பார்த்து அதிதி ஆத்திரப்படுவது கதாபாத்திர வடிமைப்பை குழப்பமாக்குகிறது. 
கிளைமாக்சில் அழுது உருக வைக்கிறார். காஜல் அகர்வால் வழக்கமான துறுதுறு நடிப்பால் கவர்கிறார். காதல் உணர்வுகளையும் உயிரோட்டமாக வெளிப்படுத்துகிறார். யோகி பாபு, விஜய், நட்சத்திரா ஆகியோரும் உள்ளனர். ஆரம்பத்தில் மெதுவாக நகரும் கதை போகபோக விறுவிறுப்புக்கு மாறுகிறது. திருமணமான இளம் தம்பதியின் காதல், நெருக்கம், பிரிவை மையப்படுத்தி உணர்வுப்பூர்மான திரைக்கதையில் காட்சிகளை இளமையாகவும் உயிரோட்டமாகவும் நகர்த்தி தேர்ந்த இயக்குனராக கவனம் பெறுகிறார் பிருந்தா. பிரித்தா ஜெயராமின் கேமரா காட்சிகளை அழகாக்கி இருக்கிறது. கோவிந்த் வசந்தா இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்.

பீஸ்ட் படத்தில் நடிகர் விஜய் பாடிய “ஜாலியோ ஜிம்கானா” பாடலின் ரிலீஸ் தேதி அறிவிப்புR...

Quick Share

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகரில் ஒருவராக திகழும் விஜய் ‘மாஸ்டர்’ திரைப்படத்திற்கு பிறகு நடித்துள்ள திரைப்படம் ‘பீஸ்ட்’. இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இந்த திரைப்படத்தை இயக்கி உள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். இயக்குனர் செல்வராகவன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்திற்கு  அனிருத் இசையமைத்துள்ளார். காதல், நகைச்சுவை மற்றும் அதிரடி சண்டைக் காட்சிகளுடன் தயாராகி உள்ள ‘பீஸ்ட்’ திரைப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். 
சமீபத்தில் ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்கின. ‘பீஸ்ட்’ திரைப்படம் வரும் ம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் பீஸ்ட் படத்தில் நடிகர் விஜய் பாடியுள்ள பாடலான “ஜாலியோ ஜிம்கானா” வரும் 19ஆம் தேதி (சனிக்கிழமை) வெளியிடப்படும் என அத்திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பீஸ்ட் திரைப்படத்தில் ஏற்கனவே முதல் பாடலாக “அரபிக்குத்து” வெளியான நிலையில் தற்போது இரண்டாம் பாடலாக “ஜாலியோ ஜிம்கானா” வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

சிரஞ்சீவி நடிக்கும் திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான்!

Quick Share

மலையாளத்தில் பிருத்விராஜ் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடித்து வெளியான திரைப்படம் ‘லூசிபர்’. இந்த திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் சிரஞ்சீவி நடிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு ‘காட்பாதர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. 

இந்த திரைப்படத்தை தமிழ் இயக்குனர் மோகன் ராஜா இயக்குகிறார். மேலும் நடிகை நயன்தாரா இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். தமன் இசையமைக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த நிலையில் காட்பாதர் திரைப்படத்தில் நடிகர் சிரஞ்சீவியுடன் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் இணைந்து நடிப்பதாக சிரஞ்சீவி தெரிவித்துள்ளார். படப்பிடிப்பு தளத்திற்கு வந்த சல்மான்கானுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்ற புகைப்படத்தை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் சிரஞ்சீவி பகிர்ந்துள்ளார்.
மேலும் அந்த பதிவில் அவர், ‘காட்பாதர் திரைப்படத்திற்கு சல்மான்கானை வரவேற்கிறேன். உங்கள் வருகை அனைவரையும் ஆற்றல்படுத்தியுள்ளது. மேலும் உற்சாகம் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது. உங்களுடன் திரையைப் பகிர்வது மிகுந்த மகிழ்ச்சி. உங்கள் இருப்பு பார்வையாளர்களுக்கு மாயாஜால அனுபவத்தை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை’ என்று கூறியுள்ளார். 
சிரஞ்சீவியுடன் சல்மான்கா் இணைந்து நடிப்பதால் இந்த திரைப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

9 வருட காத்திருப்பு முடிந்தது..”Single பயணி” அறிவித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

Quick Share

இயக்குனரும், நடிகர் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா, இறுதியாக காத்திருப்பு முடிந்தது என்று சமூக வலைத்தளத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது வைரலாகி வருகிறது.

சமீபத்தில் தனுஷ்-ஐஸ்வர்யா இவர்களின் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக அறிவித்திருந்தனர். பலர் இவர்களுக்கு ஆறுதலும் மனதைரியமும் அளித்து வந்தனர். இந்த பிரிவு அவருடைய ரசிகர்களையும் திரைதுறையினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இயக்குனர் ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை வைத்து 3 என்ற திரைப்படத்தையும், கௌதம் கார்த்திக்கை வைத்து வை ராஜா வை என்ற திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். சினிமா சண்டைக் கலைஞர்கள் குறித்த ஆவணப்படம் ஒன்றையும் அவர் எடுத்துள்ளார்.

ஐஸ்வர்யா-தனுஷ் திருமணம் உறவு முறிந்த பிறகு, ஐஸ்வர்யா தனது இயக்குனர் வேலையில் ஆர்வம் காட்டுவதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது. அதன்படி ஐஸ்வர்யா தனது மியூஸிக் ஆல்பம் வீடியோ வேலைகளை ஆரம்பித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இதற்கான பணிகள் ஹைதராபாத்தில் அவர் தொடங்கியிருந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில் இப்பாடல் உருவாகியுள்ளது. அன்கித் திவாரி இசையமைத்துள்ள இப்பாடலை தமிழில் அனிருத், மலையாளத்தில் ரஞ்சித் கோவிந்த், தெலுங்கில் சாகர், இந்தியில் அன்கித் திவாரி என பல கலைஞர்கள் பாடியுள்ளனர்.

இந்நிலையில், அவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தது வைரலாகி வருகிறது. அதில், இறுதியாக காத்திருப்பு முடிந்து, நீண்ட 9 வருட இடைவேளைக்குப் பிறகு தமிழில் எனது முதல் சிங்கிள் பயணி நாளை வெளியாகிறது.. உங்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருக்கமுடியவில்லை என்று பகிர்ந்திருக்கிறார். இந்த பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற கூகுள் குட்டப்பா டிரைலர்!

Quick Share

மலையாளத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘ஆன்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25’. இப்படம் தமிழில் ரீமேக் ஆகிறது. ‘கூகுள் குட்டப்பா’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக லாஸ்லியா நடிக்கிறார். இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பதோடு, தர்ஷனின் தந்தை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

மேலும் நகைச்சுவை நடிகர் யோகிபாபு, பிராங்ஸ்டர் ராகுல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அறிமுக இயக்குனர்கள் சரவணன், சபரி ஆகியோர் இப்படத்தை இயக்கி உள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் விதமாக உருவாகி இருக்கும் ‘கூகுள் குட்டப்பா’ டிரைலர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

“இதெல்லாம் சிம்புவுக்கு புரியாது”அவதூறு பேசி வம்பில் சிக்கிய அனிதா… கொந்த...

Quick Share

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் சிம்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அனிதா கூறிய ஒரு கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 14 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில், தற்போது விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. கமல்ஹாசனை அடுத்து சிம்பு இந்த நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார் என்றும், இதுவரை இல்லாத வகையில் வித்தியாசமான பாணியில் அவர் போட்டியாளர்களை அன்புடன் அரவணைத்து, அதே நேரத்தில் கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டித்து தொகுத்து வழங்கி வருவதாக கருத்துக்கள் எழுந்து வருகிறது

இந்நிலையில் சிம்பு குறித்து சுருதியுடன் அனிதா பேசிய வீடியோ ஒன்று தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் அனிதா, “நீ பேசுனது ரொம்ப ஆழமான விஷயம் இதெல்லாம் சிம்புவுக்கு புரியாது. அவர் அதுபற்றி யோசிக்கவும் மாட்டார். ஏன்னா அவர் பிக்பாஸுக்கு புதுசு. கமல் சாருக்கு இதெல்லாம் புரிஞ்சிருக்கும். அவர் 5 சீசன் ஹோஸ்ட் பண்ணி இருக்கார்’ என்று கூறியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது சிம்பு ரசிகர்களிடயே மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். இதனால் இந்த வாரம் அனிதாவை வெளியேற்ற வேண்டும் என்று சிம்பு ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

இதேபோன்று தான் கடந்த சீசனில் ஆரியை சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அனிதாவை அதற்கு அடுத்த வாரமே ரசிகர்கள் வெளியேற்றினார்கள். அதே போல் தற்போது சிம்புவை குறித்து சர்ச்சைக்குரிய கருத்தினை கூறிய அனிதாவை இந்த வாரம் வெளியேற்றுவார்களா? என்ற கேள்வி எழும்பியுள்ளது

வெகுவிரைவில் சிம்பு – நிதி அகர்வால் திருமணம் !

Quick Share

நடிகர் சிம்புவின் வீட்டிற்கு அவரின் வருங்கால மனைவியான நடிகை நிதி அகர்வால் குடி பெயர்ந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சிலம்பரசன் என்கிற சிம்பு (39) இவரும், நடிகை நிதி அகர்வாலும் (28) சேர்ந்து கடந்த ஆண்டு ஈஸ்வரன் என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்தனர்.

படப்பிடிப்பின் இடையே முளைத்த காதல்

அப்போது படப்பிடிப்பில் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. தற்போது நிதி அகர்வால் தெலுங்கு திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் முடியும் நிலையில் அதன்பின்னர் சிம்புவுடன் அவருக்கு திருமணம் நடக்கவுள்ளது.

இதனிடையில் சென்னை தி.நகரில் உள்ள சிம்புவின் வீட்டிற்கு நிதி அகர்வால் ஏற்கனவே இடம்பெயர்ந்துவிட்டதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளது. சில மாதங்களாக இருவரும் ஒரே வீட்டில் தான் வசித்து வருகின்றனர்.

வெகுவிரைவில் டும் டும் டும்

சிம்பு – நிதி அகர்வால் திருமணத்திற்கு இருவரின் குடும்பத்தாரும் பச்சைக்கொடி காட்டிவிட்ட நிலையில், இது தொடர்பான அறிவிப்பு நல்ல நாளில் விரைவில் வெளியிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பயங்கர டிரெண்டிங்கில் Balmain ” டீ-சர்ட்”! பிரபலங்கள் விரும்பி அணியும் இந்...

Quick Share

பிரபலங்கள் பலர் விரும்பி அணியும் ஆடையாக Balmain என்ற டீ-சர்ட் உள்ளது. 

தற்போது இது தான் பயங்கர டிரெண்டிங்கில் உள்ளது. 

இந்த டீஷர்டின் விலையை ரசிகர்கள் இணையத்தில் தேடி அதிர்ச்சி அடைந்து விட்டார்கள். ஏனென்றால், இந்த Balmain டீ சர்டின் விலை 557 டாலர். 

அதாவது இந்திய மதிப்பில் 45000 ரூபாய்.  இது இந்திய சினிமா உலகில் பல பிரபலங்களின் பிராண்ட் ஆகவும் இருக்கிறது.

அந்த வகையில் பாலிவுட் நட்சத்திரங்கள் ஷாருக்கான், சல்மான் கான், கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி, டோலிவுட் ஸ்டார் அல்லு அர்ஜுன், கோலிவுட்டில் சிம்பு, விக்னேஷ் சிவன், தனுஷ் என ஏராளமான நடிகர்களின் பேவரட்டாக உள்ளது. 

அப்படி என்ன இந்த டீசரில் ஸ்பெஷல் என்றால், அதனை தயாரிக்கும் Balmain என்கிற நிறுவனம் தான்.  

துபாயில் யுவனின் 25 ஆண்டு இசை நிகழ்ச்சி..!குவியும் ரசிகர் பட்டாளம் ….

Quick Share

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் யுவன் சங்கர் ராஜா. இவரது இசையில் பல பாடல்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியுள்ளது. யுவன் திரைத்துறைக்கு வந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. .
இந்நிலையில் இசையமைப்பாளர் யுவன் இசையமைப்பாளராக 25 ஆண்டு  இசைப்பயணத்தை  கொண்டாடும் வகையில் வருகிற மார்ச்  20ம் தேதி துபாயில் உள்ள ஜுபிலி பூங்காவில் நடைபெறவுள்ள ‘துபாய் எக்ஸ்போ’ கண்காட்சியில் பங்கேற்க உள்ளதாக டுவிட்டரில்  யுவன் பதிவிட்டுள்ளார் .இதனால் யுவன் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர் 

இயக்குனர்கள் தனுஷுடன் சேர்த்து படம் எடுக்க கூடாது -லதா ரஜினிகாந்த்! தனுஷை நிராகரித்த வெ...

Quick Share

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா கடந்த மாதம் ஜனவரியில் தங்களது சமூக வலைதள பக்கத்தில் தங்கள் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக அறிவித்தனர்.

அவர்களின் இந்த பிரிவு ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தனது மகள் ஐஸ்வர்யாவின் பிரிவை நினைத்து நடிகர் ரஜினிகாந்த் கடும் மன வேதனையில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள படங்கள் பெரிதும் வெற்றி பெறாத நிலையில் நடிகர் தனுஷ் பிரபல இயக்குநர் வெற்றிமாறனை தொடர்பு கொண்டு படம் எடுக்க அழைப்பு விடுத்ததாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் மகளை விட்டு பிரிந்த நடிகர் தனுஷுக்கு ஆப்பு வைக்க ரஜினிகாந்தின் மனைவி லதா அனைத்து தரப்பு இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்களிடம் அவருடன் இணைந்து படம் எடுக்க கூடாது என வற்புறுத்தி வருவதாக கூறப்படுகிறது.

இதனிடையே தற்போது வெற்றிமாறன் தனுஷுடன் அடுத்த படம் இயக்குவதை தள்ளிப்போடும் விதமாக தான் பிசியாக இருப்பதாக கூறி தட்டிக்கழித்து வருவதாகவும்,

இதனால் தனுஷ் தனது கரியரை நினைத்து மிகுந்த மன உளைச்சலில் இருந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.




You cannot copy content of this Website