சினிமா

ரகசியத்தை உடைத்த விக்கி – திருமண தேதி அறிவிப்பு.

Quick Share

 ‘நானும் ரவுடிதான்’ படத்திலிருந்து நயன்தாராவுக்கும் விக்னேஷ்சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. அதற்கு பிறகு இருவரும் தாங்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வந்தனர்.

இந்நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘யாரெல்லாம் 22-2-22 தேதியில் திருமணம் செய்துகொள்ள போகிறீர்கள், நான் இந்த தேதியை மிஸ் செய்ய விரும்பவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.

கண்டுகொள்ளாத சினிமாத்துறை..கேட்பாரற்று பேருந்து நிலையத்தில் தூங்கும் ரங்கம்மா பாட்டி!

Quick Share

சிவாஜி, எம்ஜிஆர் காலத்தில் அவர்களுக்கு சமையல் செய்து கொடுத்து அவர்களின் செல்லப்பிள்ளையாக இருந்தவர் தான் கே ஆர் ரங்கம்மா. சமீபத்தில் வடிவேலும் பல படங்களில் காமெடி காட்சிகளில் நடித்து பிரபலமானார். அவர் கேட்பாரற்று பீச்சில் பிச்சை எடுப்பதாக செய்திகள் வெளியாகியது.

அது பொய்யான தகவல் என்று சமீபத்திய ஒரு புகைப்படம் காட்டியுள்ளது. உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே என்ற பாடல் வரிதான் ரங்கம்மாவின் கொள்கையாம். அப்படி படங்கள் இல்லாவிட்டால் கைப்பையில் வைத்திருக்கும் மினி வியாபாரத்தை மேற்கொள்வாராம்.

அதன் மூலம் 300ல் இருந்து 400 வரை வருமானம் பெறுவதாக சமீபத்தில் அவரை பார்த்தவர்கள் கூறியுள்ளனர். 13 பிள்ளைகளை பெற்று அனைவரையும் நல்ல இடத்திற்கு கொண்டு வந்த ரங்கம்மா சமீபத்தில் பேருந்து நிலையத்தில் படுத்து தூங்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

யாரும் கண்டுகொள்ளாமல் சினிமாவை சேர்ந்த பலர் இப்படி போகும் நிலையை பார்த்திருப்போம். அதில் ரங்கம்மாவும் சேர்ந்துள்ளார். சினிமாத்துறையினர் யாராவது இவருக்கு உதவுவார்களா?..

வலிமை டிக்கெட் விலை ரூ.1000: மௌனம் காக்கும் அஜித் – காவல்துறையில் புகாரளித்த ரசிக...

Quick Share

வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படம் வரும் பொங்கல் அன்று அதாவது ஜனவரி 13 ஆம் தேதி வெளியாக உள்ளது. சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பின் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் தியேட்டரில் வெளியாக உள்ளதால் அஜித் ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் உள்ளனர்.

ஆனால் கோவையில் உள்ள தியேட்டர் ஓனர்கள் அஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளனர். அதன்படி அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படம் நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அந்த வகையில் கோயம்புத்தூரில் மட்டும் சுமார் 50 திரையரங்குகளில் வலிமை படம் வெளியாக உள்ளதாம்.

இந்நிலையில் கோவையில் உள்ள தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் திரையரங்க விநியோகஸ்தர்கள் வலிமை படத்தின் ஒரு டிக்கெட் விலை சுமார் 1000 ரூபாய் என நிர்ணயம் செய்துள்ளார்களாம். அதுமட்டுமல்ல படம் வெளியாவதற்கு முதல் நாளே அதாவது ஜனவரி 12 ஆம் தேதி இரவு சட்டவிரோதமாக நைட் ஷோ ஒளிபரப்பவும் முடிவு செய்துள்ளார்களாம்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கோயம்புத்தூர் அஜித் ரசிகர்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். குறிப்பிட்ட தொகையை தான் கட்டணமாக வசூலிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியும் அதிக தொகைக்கு டிக்கெட் விற்பனை செய்வது அநியாயம் என அஜித் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

பொதுவாக ஒரு டாப் நடிகரின் படம் வெளியானால் முதல் நாள் முதல் ஷோ காட்சிகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பது வழக்கம் தான். ஆனால் இந்த அளவிற்கு அதிக கட்டணம் இதுவரை வசூலித்ததில்லை. நடிகர் அஜித்திற்கு வெறித்தனமான ரசிகர்கள் உள்ளனர் அதனால் என்ன விலை சொன்னாலும் கேள்வி கேட்காமல் டிக்கெட்ட வாங்கி செல்வார்கள் என திரையரங்க உரிமையாளர்கள் நினைத்து விட்டார்கள் போல.

இப்படி கோடி கோடியாக கொள்ளை அடிக்க நினைக்கும் தியேட்டர்களை எதிர்த்து தல அஜித் கேள்வி கேட்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் சிறிதளவு கூட அதை கண்டுகொள்ளாத அஜித் மட்டுமில்லாமல் எந்த ஹீரோவாக இருந்தாலும் சம்பளத்தில் கை வைத்து விடுவார்கள் என்ற பயத்தில் இந்த விஷயத்தில் ஒதுங்கி விடுவார்களாம்.

2021ம் ஆண்டில் பட்டய கிளப்புன படங்கள் இதோ.

Quick Share

கடந்த ஆண்டு கொரானா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வெளியில் செல்ல முடியாத சூழல் உருவானது. இதன் காரணமாக திரையரங்குகளும் மூடப்பட்டது. அதன் பிறகு மக்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது படங்களின் வருகையே. ஊரடங்கு முடிவு பெற்று திரையரங்குகளும் திறக்கப்பட்டது. இதன் வரிசையில் மக்கள் பெரிதும் எதிர்ப்பார்க்கபட்ட படங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மாஸ்டர்

விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் மாஸ்டர். பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு பிறகு வெளியான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் பேசப்பட்டது. எக்ஸ் பி பிலிம் கிரியேட்டர்ஸ் தயாரிப்பில் பெரும் நட்சத்திர பட்டாளம் நடித்த இந்த திரைப்படம் ஜனவரி 13ஆம் தேதி வெளியானது. ஊரடங்கிற்கு பிறகு திரையரங்குகளில் வெளியான முதல் பெரிய திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

நெஞ்சம் மறப்பதில்லை

எஸ்.ஜே.சூர்யா, நந்திதா, ரெஜினா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை. 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை போன்ற படங்களை இயக்கிய செல்வராகவன் மீது பெரிய எதிர்ப்பார்ப்புக்கு பிறகு வெளிவந்த திரைப்படம் இது. ரசிகர்கள் மத்தியில் பெரிதாக பேசப்பட்ட இந்த திரைப்படம் வருமான ரீதியாக அதிக வசூல் அள்ளவில்லை. இருப்பினும் இப்படம் மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த இப்படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. இப்படம் மார்ச் 5ஆம் தேதி வெளியானது.

சுல்தான்

கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, லால் நடிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் சுல்தான். ரெமோ திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு பாக்யராஜ் கண்ணன் இயக்கிய இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக பெரிதும் பேசப்படவில்லை என்றாலும் வசூல் ரீதியாக பெரும் வெற்றிப்பெற்றது. கன்னட, தெலுங்கு படங்களுக்கு பிறகு ராஷ்மிகா மந்தனா தமிழில் நடித்த முதல் திரைப்படம் என்பதாலேயே பெரிய எதிர்ப்பார்ப்பு கூடியது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்த இந்த திரைப்படம் ஏப்ரல் 2 ஆம் தேதி வெளியானது.

மண்டேலா

யோகி பாபு, ஷீலா நடிப்பில் மடோன் அஷ்வின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் மண்டேலா. குறும்பட இயக்குனர் மடோன் இயக்கிய இந்த திரைபடத்தின் டிரைலர் வெளியானதிலிருந்து பெரிய எதிர்பார்பை உருவாக்கியது. இந்த படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் வெற்றிப்பெற்றது. சமூக கருத்தை வைத்து பேசப்பட்ட இந்தப்படம் நல்ல தாக்கத்தை உருவாக்கியது. ஒய் நாட் ஸ்டுடியோஸ், ரிலையன்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட் தயாரித்த இந்த திரைப்படம் ஏப்ரல் 4ஆம் தேதி வெளியானது.

கர்ணன்

தனுஷ், ரஜிஷா விஜயன், லால் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் கர்ணன். பரியேறும் பெருமாள் திரைப்படத்தை இயக்கி பெரிய தாக்கத்தை உருவாக்கிய மாரி செல்வராஜின் கர்ணன் திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து பெரிய எதிர்ப்பார்ப்பை கிளப்பியது. இந்த படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் வெற்றிப்பெற்றது. வி கிரியேஷன்ஸ் தயாரித்த இந்த திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியானது.

ஜகமே தந்திரம்

தனுஷ், ஜோஜு ஜார்ஜ், ஐஷ்வர்யா லெ‌ஷ்மி நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஜகமே தந்திரம். கர்ணன் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட திரைப்படம் இது. விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட படமாக இருக்கிறது. பீட்சா, ஜிகிர்தண்டா படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இந்த படத்தை இயக்கி இருந்தார். ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரித்த இந்த திரைப்படம் ஜூன் 18ஆம் தேதி வெளியானது.

சார்ப்பட்டா பரம்பரை

ஆர்யா, துசரா விஜயன், கலையரசன் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான திரைப்படம் சார்ப்பட்டா பரம்பரை. மெட்ராஸ், கபாலி, காலா படங்களை இயக்கி பெரும் சலசலப்பை உருவாக்கிய பா.ரஞ்சித் இந்த படத்தை அவருடைய சொந்த தயாரிப்பில் உருவாக்கினார். பல எதிர்ப்பார்ப்புக்கு பிறகு வெளியான இப்படம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. குத்துசண்டையை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டது. நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்த இந்த படம் ஜுலை 22 ஆம் தேதி வெளியானது.

ருத்ர தாண்டவம்

ரிச்சர்ட் ரிஷி, கவ்தம் வாசுதேவ், தர்ஷா நடிப்பில் மோகன் ஜி இயக்கத்தில் வெளியான திரைப்படம் ருத்ர தாண்டவம். திரெளபதி திரைப்படத்தை இயக்கி பலருடைய கவனத்தை ஈர்த்த இயக்குனர் மோகன் இயக்கிய இந்த படம், ஆரம்பத்திலிருந்து பெரும் எதிர்பார்ப்பையும் விவாதத்தையும் உருவாக்கியது. ஜி.எம்.பிலிம்ஸ் கார்ப்பரேஷன் மற்றும் 7ஜி பிலிம்ஸ் இணைந்து தயாரித்த இந்த படம் அக்டோபர் 1 ஆம் தேதி வெளியானது.

டாக்டர்

சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகனன், வினய் நடிப்பில் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் டாக்டர். கோலமாவு கோகிலா திரைப்படத்தை இயக்கி ரசிகர்களை கொண்டாட்டத்தில் மூழ்கடித்த இயக்குனர் நெல்சனும் சிவாவும் இணைந்ததிலிருந்து இப்படம் பெரிய ஆர்வத்தை தூண்டியது. இந்த படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் வசூலை குவித்தது. சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்த இந்த படம் அக்டோபர் 9 ஆம் தேதி வெளியானது.

ஜெய்பீம்

சூர்யா, ரஜிஷா விஜயன், லிஜோமோல் ஜோஷ் நடிப்பில் டி ஜே ஞானவேல் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஜெய்பீம். சூர்யா நடித்த சூரரைப்போற்று வெற்றியை தொடர்ந்து பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட திரைப்படம் இது. இந்த படம் உருவாக்கிய தாக்கம் பெரிய விவாதத்தை உருவாக்கியது. 2டி எண்டெர்டெய்ன்மெண்ட் தயாரித்த இந்த படம் நவம்பர் 2 ஆம் தேதி வெளியானது.

அண்ணாத்த

ரஜினிகாந்த், நயந்தாரா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சிவா இயக்கத்தில் வெளியான திரைப்படம் அண்ணாத்த. பெரும் பொருட்செலவில் உருவான இந்த திரைப்படத்தில் நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. கலவையான விமர்சனங்கள் பெற்றாலும் வசூல் ரீதியாக இப்படம் வெற்றி பெற்றது. சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படம் நவம்பர் 4ஆம் தேதி வெளியானது.

மாநாடு

சிலம்பரசன், எஸ் ஜே சூர்யா கூட்டணியில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான திரைப்படம் மாநாடு. பல தடங்களுக்கு பிறகு வெளிவருமா? வராதா? என்று கடைசி நிமிடம் வரை பரபரப்பை இப்படம் ஏற்படுத்தியது. புதுவித முயற்சியை கையாண்ட வெங்கட் பிரபுக்கு வெற்றி கிடைத்தது. வி ஹவுஸ் புரடெக்‌ஷன்ஸ் உருவாக்கிய இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் நவம்பர் 25 ஆம் தேதி வெளியானது.

லட்ச, லட்சமாக பணம் – ரசிகர்களிடம் மதுபானங்களை அறிமுகப்படுத்தும் நடிகைகள்.

Quick Share

சமீப காலமாக பிரபல நடிகைகள் அனைவரும் திரைப்படங்களில் நடிப்பதோடு விளம்பர படங்களில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதில் முன்னணி நடிகைகளாக இருக்கும் நயன்தாரா, சமந்தா, த்ரிஷா போன்றோரும் பிரபல நிறுவனங்களின் விளம்பரங்களில் நடித்துள்ளனர்.

ஆனால் தற்போது ராய் லக்ஷ்மி, பூஜா ஹெக்டே, ஹன்சிகா மோட்வானி, காஜல் அகர்வால் போன்ற நடிகைகள் சில குறிப்பிட்ட நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு தங்கள் சோஷியல் மீடியாவில் விளம்பரம் செய்கின்றனர்.

அதாவது வெளிநாட்டு கம்பெனிகளின் மதுபான வகைகளை ரசிகர்களிடம் அவர்கள் அறிமுகப்படுத்தி வருகின்றனர்.அப்படி அறிமுகப்படுத்துவது மட்டும் இல்லாமல் அந்த மதுபானத்தை எப்படி குடிக்க வேண்டும் என்றும் ரசிகர்களுக்கு சொல்லிக் கொடுக்கின்றனர். இதை எந்த வயதில் இருப்பவர்கள் அருந்த வேண்டும் என்றும் விளக்கம் கொடுக்கின்றனர்.

மேலும் இதனால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும், மிகவும் நல்லது என்றெல்லாம் தங்கள் சோஷியல் மீடியாவில் போஸ்ட் செய்கின்றனர். அவர்கள் குறிப்பிடும் அந்த மதுபான வகைகள் அனைத்தும் இந்தியாவில் ஏற்கனவே தடை செய்யப்பட்டவை.

அதைப்பற்றி தெரிந்து இருந்தும் கூட இந்த நடிகைகள் பணத்துக்காக இப்படி ஒரு விளம்பரத்தை செய்து வருகின்றனர். இந்த நடிகைகளுக்கு ஒரு திரைப்படத்தில் நடிக்கும் பொழுது கிடைக்கும் சம்பளத்தை விட இது போன்று விளம்பரம் செய்வதால் ஏராளமான பணம் கிடைக்கின்றது.

இதனால் லட்ச, லட்சமாக பணத்தை வாங்கிக்கொண்டு அந்த நடிகைகள், தங்கள் ரசிகர்களிடம் இந்த மதுபான வகைகளை அறிமுகப்படுத்தி வருகின்றனர். அவர்களின் இந்த விளம்பரத்தை சோசியல் மீடியாவில் பார்த்த பலரும் அவர்களை கண்டபடி திட்டி தீர்க்கின்றனர்.

இருந்தாலும் சம்பந்தப்பட்ட நடிகைகள் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து இதுபோன்ற செயலில் ஈடுபடுவது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சாதனை மேல் சாதனை படைக்கும் ‘மாநாடு’: ஆச்சரியத்தில் தமிழ் திரையுலகம்!

Quick Share

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகி வசூலில் சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கும் திரைப்படம் மாநாடு. இந்த படத்தில் சிம்பு, எஸ் ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். டைம் லூப் என்கிற வித்யாசமான கதை அமைப்பை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இத்திரைப்படம் தற்போது அனைவராலும் அதிகம் ரசிக்கப்பட்டு வருகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் சிம்புவுக்கு இப்படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நெகட்டிவ் ரோலில் நடித்துள்ள எஸ் ஜே சூர்யாவிற்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்த ஆண்டு வெளிவந்த திரைப்படங்களில் மாநாடு திரைப்படம் அதிக வசூலை பெற்று சாதனை புரிந்துள்ளது.

இப்படம் வெளியாகி ஒரு மாதத்துக்குள்ளாகவே 108 கோடி வரை லாபம் பார்த்துள்ளது. தமிழில் இந்த ஆண்டு மிகப்பெரிய வெற்றிபெற்ற மாஸ்டர், டாக்டர், அண்ணாத்த திரைப்படங்களின் வசூலை விட மாநாடு திரைப்படத்தின் வசூல் அதிகம். இந்த சாதனையை படக்குழுவினர் அனைவரும் தற்போது கொண்டாடி வருகின்றனர்.

அவர்களை மேலும் குஷிப்படுத்தும் விதமாக மாநாடு திரைப்படம் மற்றும் ஒரு சாதனையையும் தற்போது செய்துள்ளது. அதாவது மாநாடு திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமை பல கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது. இப்படம் கடந்த வாரம் சோனிக் லைவ் ஒடிடி தளத்தில் வெளியானது.

இதுவரை ஓடிடி யில் வெளியான திரைப்படங்கள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதே எதிர்பார்ப்புடன் மாநாடு திரைப்படமும் விளம்பரப்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது இப்படம் இதுவரை வெளியான அனைத்து படங்களின் சாதனைகளையும் முறியடித்து முன்னிலையில் உள்ளது.

மாநாடு படத்திற்கு திரையரங்குகளில் கிடைத்த வரவேற்பை போல் ஓடிடி யிலும் கிடைத்துள்ளது. இந்த ஆண்டு பல சாதனைகளை புரிந்த படமாக மாநாடு படம் மாஸ் காட்டுகிறது. இந்த செய்தியால் பட தயாரிப்பாளர் உட்பட, பட குழுவினர் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இது திரையுலகில் பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

அம்மாடியோவ் ! நடிகர் யோகி பாபுவின் முழு சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

Quick Share

தமிழ் சினிமாவின் தற்போதைய பிஸியான பிரபலங்களில் ஒருவர் யோகி பாபு.

ஆம், தற்போது யோகி பாபு நடிப்பில் வலிமை, பீஸ்ட், பன்னி குட்டி, அயலான், சலூன், கடைசி விவசாயி, பொம்மை நாயகி என பல படங்கள் இருக்கிறது.

கடந்த 2020ஆம் ஆண்டு மஞ்சு பார்கவி என்பவரை திருமணம் செய்து கொண்டார் யோகி பாபு.

சமீபத்தில், யோகி பாபு, மஞ்சு பார்கவி தம்பதியினருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில், நடிகர் யோகி பாபுவின் சொத்து மதிப்பு ரூ.40 கோடி என தகவல் கூறப்படுகிறது.

வாய் கூசாம பொய் சொல்லும் சூப்பர் ஸ்டார் – “தூத்துக்குடி வன்முறை குறித்து என...

Quick Share

ஸ்டெர்லைட் ஆலை வன்முறை குறித்து எனக்கு எதுவும் தெரியாது என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தில் தான் இந்த தகவலை ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். கடந்த 2018ஆம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. அதனை கட்டுக்குள் கொண்டுவர காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில் வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களை நடிகர் ரஜினிகாந்த் நேரடியாக தூத்துக்குடிக்கே சென்று பார்த்து ஆறுதல் தெரிவித்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டது பொதுமக்கள் அல்ல, சமூக விரோதிகள். ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது எப்படி சமூக விரோதிகள் உள்ளே புகுந்து வன்முறையை ஏற்படுத்த முயற்சி செய்தார்களோ அதேபோன்று, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்திலும் சமூக விரோதிகள் தான் வன்முறை செய்தனர் என பேட்டி கொடுத்தார்.

மேலும் போராட்டம் போராட்டம் என்றால் தமிழ்நாடே சுடுகாடு ஆகிவிடும் என ஆக்ரோஷமாக பேசினார். இந்நிலையில் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையத்தில் ஆஜரான நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் கூட ரஜினியை அழைத்து விசாரிக்க வேண்டும் என்று தொடர்ந்து பேசி வந்தனர்.

இது குறித்து ரஜினி நேரடியாக ஆஜராகி வன்முறை சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும்அதன்பிறகு, அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியது.

ஆனால், தனது உடல்நிலையை காரணம் காட்டி ரஜினிகாந்த் ஆஜராகாமல் தவிர்த்துவந்தார். இந்நிலையில், தனது தரப்பு விளக்கத்தை எழுத்து மூலமாக விசாரணை ஆணையத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் அனுப்பி வைத்துள்ளார்.

அதில் தூத்துக்குடி வன்முறை சம்பவம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது, தொலைக்காட்சி பார்த்தே துப்பாக்கிச் சூடு குறித்து விவரங்களை தெரிந்துக்கொண்டேன்.

சமூக விரோதிகள் பற்றியும் தனக்கு எதுவும் தெரியாது என்றும், அப்பாவி மக்கள் இதுபோன்று வன்முறையில் ஈடுபடமாட்டார்கள் என்ற காரணத்தினால் இது சமூக விரோதிகளின் செயலாக இருக்கலாம் என்று தான் கருதியதாக தெரிவித்துள்ளார்.

விரைவில் தமிழ் சினிமாவை விட்டு ஓடப்போகும் அஸ்வின் – புறக்கணிக்கும் தயாரிப்பாளர்...

Quick Share

தமிழ் சினிமாவின் அடுத்த சிவகார்த்திகேயன் என்றெல்லாம் பலரால் பேசப்பட்ட குக் வித் கோமாளி அஸ்வின் தற்போது சினிமாவில் இருப்பாரா என்பதே சந்தேகம் தான் என்கிற அளவுக்கு ஆகிவிட்டது அவரது நிலைமை. ஒரே ஒரு மேடை தான், டோட்டல் இமேஜும் கிளோஸ்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் இடையே பேராதரவை பெற்று தமிழ் சினிமாவின் அடுத்த சிவகார்த்திகேயன் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டவர் அஸ்வின். இவர் ஏகப்பட்ட மியூசிக் வீடியோ பண்ணியிருந்தாலும் ஹீரோவாக அவர் தமிழ் சினிமாவில் சாதிக்க நினைத்தார்.

அந்த நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்ற அவருக்கு கேட்காமலேயே பல பட வாய்ப்புகள் குவிந்தன. இவ்வளவு ஏன் ஒரே ஒரு தயாரிப்பு நிறுவனமே அவர் வைத்து மூன்று படங்கள் எடுக்க ரெடியானது. அட்வான்ஸ் கூட கொடுத்து ஓகே செய்து விட்டார்களாம்.

வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என்று சொல்லுவார்கள். ஆனால் எந்த இடத்தில் எப்படி பேச வேண்டுமோ அப்படிப் பேசினால் மட்டுமே அவர்கள் பிழைக்க முடியும் என்பது அஸ்வின் வாயிலாக நிரூபணம் ஆகி விட்டது. அதுவரை அஸ்வினை அழகன் பேரழகன் அனைவரையும் மதிக்கத் தெரிந்தவன், ஆகா ஓஹோ என்று புகழ்ந்து அவர்களே இப்போது அவரை கேலி கிண்டல் செய்யும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

அஸ்வின் ஹீரோவாக நடித்த என்ன சொல்ல போகிறாய் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசிய பேச்சும் அவரது நடவடிக்கைகளும் யாருக்குமே பிடிக்கவில்லை. இதனால் சமூக வலைதளங்களை அவரை திட்டியபடி கிண்டல் செய்த படியும் பதிவுகள் அரங்கேற தடுமாறி போன பின் உடனடியாக அனைவரிடமும் மன்னிப்பு கேட்கிறேன் என ஒரு வீடியோவை வெளியிட்டார்.

ஆனால் அதெல்லாம் வெறும் நடிப்புதான் என்று சொல்கிறது கோலிவுட் வட்டாரம். சமீபத்தில் கூட ஒரு இயக்குனரிடம் கதை கேட்க ஸ்டார் ஹோட்டலில் ரூம் போட சொல்லி தயாரிப்பாளரை செய்ததாகவும் ஒரு தகவல் கிடைத்துள்ளது. இதனால் அஸ்வினின் முதல் படம் வெளியீடு தள்ளிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் அஸ்வினை வைத்து படம் தயாரிக்க ஆசைப்பட்ட ஒரு தயாரிப்பு நிறுவனம் அஸ்வினின் இந்த நடவடிக்கைகளை பார்த்துவிட்டு இருந்த பட வாய்ப்பையும் பிடுங்கி கொண்டதாம். நாளுக்கு நாள் அவரை நம்பி அட்வான்ஸ் கொடுத்த தயாரிப்பாளர் அனைவருமே பின் வாங்குவதால் வருங்காலத்தில் சினிமாவில் நாம் தாக்குப்பிடிக்க முடியுமா? என்ற சந்தேகத்தில் கவலையில் இருக்கிறாராம் அஸ்வின்.

எனக்கு 20 கோடி வேணும் – ஊதியத்தை 3 மடங்கு உயர்த்திய சிம்பு!

Quick Share

வெங்கட் பிரபு இயக்கத்தில் புதுமையான மாறுபட்ட கதையம்சம் கொண்ட மாநாடு திரைப்படம் ரசிகர்களின் மிகப்பெரிய ஆதரவோடு அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்த படத்திற்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இப்படம் இதுவரை 100 கோடி வரை வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் இடம் பெற்று சாதனை படைத்துள்ளது. தமிழில் இந்த ஆண்டில் 100 கோடி வசூல் சாதனை புரிந்த மாஸ்டர், டாக்டர், அண்ணாத்தே போன்ற திரைப்படங்களின் வரிசையில் மாநாடும் தற்போது இணைந்துள்ளது.

படம் வெளியாகி 25 நாட்கள் கடந்த பிறகும் இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் மாநாடு படத்தில் சிறப்பாக நடித்த சிம்பு மற்றும் எஸ் ஜே சூர்யா இருவருக்கும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

இதன் காரணமாக சிம்பு தன்னுடைய சம்பளத்தை கணிசமாக உயர்த்தி உள்ளார். சிம்புவிடம் கால்ஷீட் கேட்டு தயாரிப்பாளர் லலித் அவரை அணுகியுள்ளார். அப்போது சிம்பு தனக்கு ஒரு படத்தில் நடிப்பதற்கு இருபது கோடி சம்பளம் வேண்டும் என்று கேட்டுள்ளார்.

இதைக் கேட்ட தயாரிப்பாளர் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளார். சிம்பு மாநாடு படத்திற்காக 6 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார். இப்போது மாநாடு திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தந்துள்ளது.

இது தவிர இப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகளுக்கு இது ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்துள்ளது. இதன் காரணமாக சிம்பு தன்னுடைய சம்பளத்தை இவ்வளவு அதிகபடுத்தியுள்ளார். சிம்புவை போல் மாநாடு திரைப்படத்தில் தன்னுடைய நடிப்பால் மிரட்டிய எஸ் ஜே சூர்யாவும் தன்னுடைய சம்பளத்தை 6 கோடியாக ஏற்றியுள்ளார்.

இவர்களைப் போலவே படத்தின் ஹீரோயின் கல்யாணி பிரியதர்ஷனும் தன்னுடைய சம்பளத்தை இரண்டு கோடியாக ஏற்றியுள்ளார். ஒரு படத்தின் வெற்றி இவர்களை எல்லாம் எப்படி மாற்றி விட்டது என்று திரையுலகினர் பலரும் வியப்பில் உள்ளனர்.

4500 கோடி வசூலை வாரி குவித்த ‘ஸ்பைடர் மேன் நோ வே ஹோம்’!

Quick Share

எழுத்தாளர்கள் க்ரிஷ் மெக்கென்னா, எரிக் சோம்மர்ஸ் ஆகியோர் எழுதிய கதைகாளத்துடன் உருவான படம் ஸ்பைடர் மேன் நோ வே ஹோம். இப்படத்தை மார்வெல் மற்றும் சோனி தயாரித்து இருந்தார்கள். கடந்த பாகம் ஸ்பைடர் மேன் பார் பிரம் ஹோம் முடிந்த இடத்திலிருந்து படத்தின் கதை ஆரம்பிக்கிறது.

ஸ்பைடர் மேன் நோ வே ஹோம் திரைப்படத்தில் ஸ்பைடர்மேன் முந்தைய படங்களில் நடித்த டாம் ஹாலண்ட், ஜிண்டாயா, ஜேகப், மாரிஸா டோமீ உள்ளிட்ட பலரும் இந்தப் பாகத்திலும் நடித்துள்ளனர். இப்படத்தில் நடித்த நடிகர்கள், கிராபிக்ஸ் காட்சிகள், பின்னணி இசை எல்லாம் படத்தில் சிறப்பாக அமைந்திருப்பதால், இந்த வருடத்தின் சிறந்த சூப்பர் ஹீரோ படம் என்று பலரும் பாராட்டுகிறார்கள்.

இப்படத்தின் பல ட்ரைலர்கள் ஏற்கனவே வெளியான நிலையில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு குறையும் என கருதப்பட்டது. ஆனால் படத்தில் அடுத்தடுத்து ட்விஸ்ட் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்கள். இந்தியா முழுவதும் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் டிசம்பர் 16 ஆம் தேதி ஸ்பைடர் மேன் நோ வே ஹோம் திரைப்படம் வெளியானது.

அதிக எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் 1500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. இப்படம் வெளியான முதல் வாரத்தில் 2 மடங்கு கூடுதலாக, 4500 கோடி வசூலை வாரி குவித்துள்ளது. ஸ்பைடர் மேன் நோ வே ஹோம் படம் அமெரிக்காவில் மட்டும் 2,000 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல் வாரத்திலேயே அதிக வசூல் செய்த அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் இரண்டாவது இடத்தைப் பிடித்திருந்தது. தற்போது உலக அளவில் முதல் வாரத்தில் அதிக வசூல் செய்த மூன்றாவது படம் என்ற சாதனையை ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் படம் பெற்றுள்ளது.

பாம்பு கடி வாங்கிய சல்மான்கான்.. இப்போது எப்படி உள்ளார் தெரியுமா.

Quick Share

மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பையில் வசிக்கும்  நடிகர் சல்மான் கான் நேற்று அவரின் வீட்டிற்கு அருகே உள்ள அவரின் பண்ணை வீட்டில் தோட்டத்தில் வேலை செய்து கொண்டு இருக்கும் போது பாம்பு கடித்து விட்டதால் அங்கு இருந்தவர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர்.

இந்நிலையில் சல்மான் கானின் தந்தை கூறும் போது  தற்போது அவர் நன்றாக இருப்பதாகவும், வீட்டிற்கு செல்லலாம் என்று கூறியதால் நேற்று மருத்துவமனையில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.




You cannot copy content of this Website