சினிமா

கத்ரீனா கல்யாணத்தில் இவ்வளவு பிரம்மாண்டமா? திருமணத்தை ஒளிபரப்ப ரூ. 100 கோடி..

Quick Share

பாலிவுட் சினிமா பிரபலங்கள் ஒவ்வொருவரின் திருமணமும் படு பிரம்மாண்டமாக நடக்கும். அப்படி நிறைய நடிகைகளின் திருமணத்தை நாம் பார்த்திருப்போம்.

இப்போது பாலிவுட்டின் முன்னணி நடிகையான கத்ரீனா கைப்பின் திருமணம் நடிகர் விக்கி கௌஷலுடன் நடக்க இருக்கிறது.

ஜெய்பூரில் மிகவும் சீக்ரெட்டாக ஏனெனில் அவர்களது திருமணம் குறித்த எந்த தகவலும் அவ்வளவு எளிதாக வெளியே வருவதில்லை. அப்படி நமக்கு கசிந்த தகவல்களே ரசிகர்களுக்கு பிரம்மிப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமணத்திற்காக ஜெய்ப்பூரில் இவர்கள் தங்க இருக்கும் அறை மட்டும் ஒரு இரவுக்கு ரூ. 75 லட்சமாம், கத்ரீனாவுக்கு போடப்படும் Sojat மெஹந்தி மட்டுமே ரூ. 1 லட்சத்திற்கு இருக்குமாம்.

அதேபோல் இவர்களது திருமணத்தை ஒளிபரப்ப பிரபல OTT தளம் ரூ. 100 கோடிக்கு பேசியிருப்பதாக கூறப்படுகிறது.

முன்னாள் காதலியின் திருமணம் – அழைப்பிதழ் கொடுக்காத காதலி- வருத்தத்தில் சல்மான்.

Quick Share

ராஜஸ்தானில் நடக்கும் நடிகை கத்ரீனா கைஃபின் திருமணத்திற்கு சல்மான் தரப்பில் செய்யப்படும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃபும், நடிகர் விக்கி கௌஷலும் காதலித்து வந்த நிலையில் காதலை வீட்டில் சொல்லி பெற்றோரின் ஆசியுடன் டிசம்பர் 9ம் தேதி திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார்கள்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் இருக்கும் சொகுசு ரிசார்ட்டில் அவர்களின் திருமணம் நடக்கிறது. இதற்காக 120 பேருக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்வுக்கு கத்ரீனா கைஃபின் முன்னாள் காதலரான பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு அழைப்பிதழ் கொடுக்கவில்லை.

ஆனால் ஜெய்பூரில் நடக்கும் கத்ரீனாவின் திருமணத்திற்கு சல்மான் கானின் பாதுகாவலரான ஷேராவின் குழு தான் பாதுகாப்பு அளிக்கப் போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

திருமண நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து ஷேராவின் டைகர் செக்யூரிட்டி குழுவுடன் சந்திப்பு நடந்ததில் திருமணத்திற்கு வரும் யாரும் செல்போன் பயன்படுத்தக் கூடாது, செல்ஃபி எடுக்கக் கூடாது என்று ஏகப்பட்ட விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது.

கத்ரீனா கைஃப் தற்போது சல்மான்கானுடன் சேர்ந்து டைகர் 3 படத்தில் நடித்து வந்தார். திருமணம் முடிந்த பிறகு மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் அழைக்காவிட்டாலும் தன்னுடைய பாதுகாவலர் குழுவை முன்னாள் காதலி திருமணத்திற்கு கொடுக்க பெரிய மனது வேண்டும் என சல்மான்கானின் ரசிகர்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

வெத்து சீன் போட்ட நடிகர் – ஆரம்பத்திலேயே திமிர் பேச்சு: சர்ச்சையில் சிக்கிய அஸ்வ...

Quick Share

விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டை வால் குருவி என்ற சீரியல் மூலம் நடிகராக அறிமுகமானவர் அஸ்வின். இந்த சீரியலில் தற்போது பிக்பாஸில் கலக்கிக் கொண்டிருக்கும் பவானி ரெட்டி அஸ்வினுக்கு ஜோடியாக நடித்தார்.

அந்த சீரியல் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பைப் பெறாததால் பாதியிலேயே அவசரமாக முடிக்கப்பட்டது. அதன் பிறகு அஸ்வினுக்கு நடிப்பதற்கு வேறு எந்த வாய்ப்பும் கிடைக்காத நிலையில் விஜய் டிவியில் பெரும் வரவேற்பை பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் அஸ்வினுக்கு சின்னத்திரையில் ஏகப்பட்ட ரசிகர் கூட்டம் உருவானது. அதிலும் பெண் ரசிகைகள் இவருக்கு ஏராளம் உண்டு. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிவாங்கி மற்றும் புகழுடன் சேர்ந்து அவர் செய்த அலப்பறைகள் ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது.

அதன்பிறகு ஆல்பம் பாடல்களில் நடித்து வந்த அஸ்வின் தற்போது சினிமாவிலும் நடிக்க ஆரம்பித்துள்ளார். என்ன சொல்ல போகிறாய் என்ற திரைப்படத்தில் அஸ்வின் ஹீரோவாக நடித்து வருகிறார். இதில் அவருடன் இணைந்து நடிகை தேஜா, குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்த படத்திற்கான டீசர் சமீபத்தில் வெளியாகி அனைவராலும் ரசிக்கப்பட்டது. சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது, இதில் கலந்து கொண்ட நடிகர் அஸ்வின் பேசிய பேச்சு தற்போது பரபரப்பாகியுள்ளது.

அஸ்வின் இந்த திரைப்படத்தில் நடிக்க ஆரம்பிக்கும் முன் சுமார் 40 கதைகளை கேட்டதாகவும், அந்த கதைகளை கேட்கும் பொழுது தான் தூங்கி விட்டதாகவும் தெரிவித்தார். அஸ்வினின் இந்த திமிரான பேச்சால் நெட்டிசன்கள் பலரும் கடுப்பாகி உள்ளனர்.

தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கும் பல நடிகர்களும் பந்தா ஏதும் இல்லாமல் எளிமையாக இருக்கும் பொழுது, நடிக்க ஆரம்பித்த முதல் படத்திலேயே அஸ்வின் இவ்வளவு பந்தா காட்டுவது அவரது ரசிகர்களை அதிர்ச்சியாக்கி உள்ளது. தற்போது அஸ்வின் பேசிய இந்தப் பேச்சு சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

ஆடிப்போன திரையுலகம் – வலிமை படத்திற்கு இத்தனை கோடி வியாபாரமா?

Quick Share

தமிழ் சினிமாவில் எப்போதும் கடும் போட்டி என்றால் விஜய்-அஜித்திற்கும் தான். இருவரும் ஆரம்பக்காலத்தில் தங்கள் படங்களுக்குள் ஒருவரை ஒருவர் தாக்கினர்.

தற்போது இவர்கள் நண்பர்கள் ஆனாலும், ரசிகர்களுக்குள் சண்டை இருந்துக்கொண்டே தான் உள்ளது. இந்நிலையில் வலிமை படம் விஜய்யின் அனைத்து பட தமிழக வியாபாரத்தையும் முந்தியதாக ஒரு தகவல் கிடைத்தது.

அதும் ஒரு சிலர் 90 கோடிக்கு வியாபாரம் ஆனதாக கூறினர். ஆனால், உண்மை அது இல்லை.

ரூ 65 கோடிகளுக்கு மேல் இப்படம் வியாபாரம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. அதோடு அஜித் திரைப்பயணத்தில் அதிக வியாபாரம் ஆன படம் இதுதான் என்றும் கூறப்படுகிறது.

விஜய்யின் பிகில் ரூ 75 கோடிகளுக்கு மேல் வியாபாரம் ஆகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

நடிகை காஜல் அகர்வாலின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா..ஷாக்கான ரசிகர்கள்.

Quick Share

நடிகை காஜல் அகர்வால் தென்னிந்திய திரையுலகில் ஒரு பிஸியான நடிகை. இவருக்கு கடந்த ஆண்டு கௌதம் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின் திரைப்படங்களில் நடிக்க கவனம் செலுத்தினார் காஜல். ஆனால், நடிகை காஜல் தீடீரென சிறுது காலம் திரையுலகில் இருந்து விலகப்போவதாக தகவல் வெளியானது.

நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதால் தான், படங்களில் இருந்து விலகியுள்ளார் என்றும் தகவல்கள் கூறப்பட்டது.

ஆனால் இதுவரை, இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலையும் நடிகை காஜல் அகர்வால் வெளியிடவில்லை.

இந்நிலையில், நடிகை காஜல் அகர்வாலின் சொத்து மதிப்பு குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகை காஜல் அகர்வால் சொத்து மதிப்பு ரூ. 86 கோடி தெரிவிக்கின்றனர்.

சிம்பு எடுத்துள்ள அதிரடி முடிவு: உற்சாகத்தில் ரசிகர்கள்!

Quick Share

சிம்பு சமீப காலமாக இவரது படங்கள் பெரிய அளவில் வரவேற்பு பெறாததால் பல தயாரிப்பாளர்களும் சிம்பு மீது கடும் கோபத்தில் இருந்தனர். ஆனால் அத்தனையும் மாநாடு என்ற ஒரே படம் திருப்பி போட்டு விட்டது என்று தான் கூற வேண்டும். தற்போது பல தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் சிம்புவை வைத்து படத்தை இயக்குவதற்கு முன் வந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் சிம்பு தனக்கு ஆரம்பத்தில் தன்னை தூக்கி விட்ட ஒரு சில இயக்குனர்கள் மட்டும் வாய்ப்பு கொடுத்து தற்போது வரை பல படங்களில் நடித்து வருகிறார்.

சிம்பு, கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு, கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தற்போது இதற்கான படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் மேலும் ராம் சிம்புவிடம் கதை கூற அதுவும் சிம்புவுக்கு பிடித்துப்போக தற்போது 3 படங்களில் தொடர்ந்து பிசியாக நடித்து வருகிறார்.

இதனால் தற்போது சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கும் நிலையில் தற்போது அவர்களுக்கு இரட்டிப்பு சந்தோஷமாக ஒரு செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது சிம்பு தற்போது 47 படங்கள் நடித்துள்ளார்.

தற்போது ஒரு சில படங்களில் நடித்தும் வருகிறார், கூடிய விரைவில் சிம்பு 50வது படத்தில் நடிக்கப்போகிறார். ஆனால் அதனை இயக்குபவர் யார் என எதிர்பார்த்த நிலையில் தற்போது சிம்புவே அவரது 50வது படத்திற்காக கதையும் திரைக்கதையும் எழுதி வருகிறார். அதனால் கூடிய விரைவில் சிம்புவின் 50வது படத்தை சிம்புவை இயக்கி நடிப்பார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

சிம்பு ஏற்கனவே வல்லவன் படத்தை திரைக்கதை மற்றும் இயக்கம் இரண்டிலும் கவனம் செலுத்தி மிகப்பெரிய வெற்றி படத்தை அவரது ரசிகர்கள் கொடுத்தார். பின்பு மன்மதன் படத்தில் திரைக்கதை பணியாற்றி உள்ளார். தற்போது நீண்ட வருடங்களுக்கு பிறகு சிம்பு மீண்டும் தான் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதால் தற்போது சிம்பு ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கின்றனர். மேலும் இந்த தகவல் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

எகிறிய மார்க்கெட் – ஒரு பாடலுக்கு நடனமாட கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிய சமந்தா!

Quick Share

நடிகைகள் பலரும் சமீபகாலமாக படங்களுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குவதை விட ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடிவிட்டு கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இதுவரை சன்னி லியோன் மட்டுமே ஒரு பாடலுக்கு பல கோடி சம்பளம் வாங்கி அனைத்து நடிகைகளையும் அண்ணாந்து பார்க்க வைத்தார்.

அதற்கு காரணம் சன்னி லியோன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினாலும் அந்த படத்திற்கு கிடைக்கும் வரவேற்பும், அதற்கான எதிர்பார்க்கும் தான் இவருக்கு கோடிக்கணக்கில் சம்பளம் கொடுப்பதற்கு காரணம். சன்னி லியோன் தமிழ் சினிமாவில் வடகறி எனும் படத்தில் கூட ஒரு கவர்ச்சி பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார்.

அதேபோல் தெலுங்கு சினிமாவிலும் ஒரு கவர்ச்சி பாடலுக்கு நடனமாடி கிட்டத்தட்ட 2 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி இருந்தார். தற்போது இதனை சமந்தாவும் பின்பற்றி வருகிறார். தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாக நடித்து வரும் சமந்தா தற்போது வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார்.

எப்போதும் நடிகைகள் பொருத்தவரை படத்தில் இன்னொரு கதாநாயகி இருந்தால் நடிக்க மாட்டார்கள். ஆனால் சமந்தா தற்போது காத்துவாக்குல 2 காதல் படத்தில் நயன்தாரா உடன் இணைந்து நடித்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.

சமந்தா, அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா படத்தில் சன்னிலியோன் போல் ஒரு கவர்ச்சி குத்தாட்ட பாடலுக்கு நடனமாடியுள்ளார். இப்பாடல் நடனம் ஆடுவதற்காக கிட்டத்தட்ட 1 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தெலுங்கில் சமந்தாவிற்கு ஏகப்பட்ட மார்க்கெட் இருப்பதால் சமந்தா ஒரு பாடலுக்கு நடனம் ஆடினாலும் அந்த படம் வெற்றி பெறும் என்ற குருட்டு நம்பிக்கையில் புஷ்பா படக்குழுவினர் நடனமாட வைத்ததாக கூறி வருகின்றனர்.

மேலும் அல்லு அர்ஜுன் நடிக்கும் இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி உள்ளது. அதனால் வசூலில் எந்த விதமான பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஒரு சில முன்னணி கதாநாயகிகள் உட்பட பல பிரபலங்களை நடிக்க வைத்து வருவதாக கூறி வருகின்றனர்.

அய்யோ பாவம் – விக்ரம் மற்றும் விஜய்யால் நடுத்தெருவுக்கு வந்த தயாரிப்பாளர்!

Quick Share

இந்த பிரபலம் ஆஸ்கர் என்ற மிகப்பெரிய விருதினை தன் அடையாளமாக கொண்டுள்ளார். ஆரம்பகாலங்களில் விநியோகஸ்தராக இருந்த விஜயகாந்தின் வானத்தைப்போல திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆனார். இவர் தயாரிப்புக்காக பல முன்னணி இயக்குனர்கள், நடிகர்கள் காத்திருப்பார்கள்.

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத தயாரிப்பாளர்களில் ஒருவரான ஆஸ்கர் ரவிச்சந்திரன், ஆரம்பத்தில் சிறிய பட்ஜெட்டில் படங்கள் தயாரித்து வெற்றி பெற்றார். பின்பு பெரிய பட்ஜெட்டில் படங்களை தயாரித்து அதிகம் லாபம் பெற்றார். ஜாக்கிசான் நடித்தப் படங்களை வாங்கி விநியோகித்து வந்தார். இவர் தமிழில் ரமணா, அந்நியன், ரெண்டு, தசாவதாரம், வாரணம் ஆயிரம், ஆனந்தத்தாண்டவம், மரியான், ஐ போன்ற படங்களைத் தயாரித்துள்ளார்.

ஆஸ்கர் ரவிச்சந்திரன் ஐ படத்திற்காகவும், அதே நேரத்தில் மற்ற படங்கள் தயாரிக்கவும் ஒரு வங்கியிடம் பல கோடி கடன் பெற்றுள்ளார். கடன் இருக்கும்போது ஐ படம் வெளியானது. ரவிச்சந்திரன் பெரிதாக நம்பி இருந்த வேலாயுதம் படங்கள் எதிர்பார்த்த அளவு லாபத்தைத் தரவில்லை.

இதனால் அவர் வங்கியில் பெற்ற கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. வங்கியில் பெற்ற கடனை ஆஸ்கர் ரவிச்சந்திரனின் 150 கோடி சொத்துக்கள் ஏலத்துக்கு வருகிறது. ரவிச்சந்திரனின் கேகே நகரில் உள்ள அனைத்து சொத்துக்களும் ஏலத்துக்கு வருகிறதாம்.

சமீபத்தில் அந்நியன் படத்தை இயக்குனர் ஷங்கர், ரன்வீர் சிங்கை வைத்து ஹிந்தியில் ரீமேக் செய்ய உள்ளதாக அறிவித்தார். அதற்கு மறுப்பு தெரிவித்து அந்நியன் படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் கதை உரிமம் என்னிடம் தான் உள்ளது.

அந்நியன் படத்தின் ரீமேக்கை ஜாக்கிசானை வைத்து எடுக்க உள்ளதாக தெரிவித்தார். ஆஸ்கர் ரவிச்சந்திரன் இந்த நிதி நெருக்கடியில் அந்நியன் படத்தின் ரீமேக்கை எடுப்பாரா என்பது கேள்விக்குறிதான்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்தளித்த சன்னி லியோன்!

Quick Share

தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமான கவர்ச்சி நடிகை என்றால் சன்னி லியோன் தான் இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே ரசிகர்கள் பார்த்து விடுவார்கள். அந்த அளவிற்கு இவருடைய கவர்ச்சிக்காக ஏங்காத ரசிகர்களே கிடையாது. வடகறி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் சன்னி லியோன்.

இப்படத்திற்கு பிறகு இவர் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் படம் நடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் அதன் பிறகு இவருக்கு மற்ற மொழியில் மட்டுமே நடிப்பதற்கான வாய்ப்புகள் குவிந்தன. அதனால் மற்ற மொழியில் அதிகமான படங்களில் நடித்தார்.

படத்தில் நடிப்பது தாண்டி ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார். தற்போது இவருக்கு பல படங்களிலும் ஒரு சில காட்சிகளில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. தற்போது ரங்கீலா, சீராளன் மற்றும் கொட்டி கோபா போன்ற படங்களில் நடித்துள்ளார்.

நடிகைகள் எப்போதுமே அவர்களது சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வப்போது ஏதாவது ஒரு புகைப்படங்களை வெளியிடுவார்கள். அதிலும் ஒரு சில நடிகைகள் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவார்கள்.

அப்படி சமூக வலைதள பக்கத்தில் பல கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிட்ட நடிகை சன்னி லியோன் ஏராளமான ரசிகர்கள் அவரை சமூக வலைத்தள பக்கத்தை பின் தொடர்ந்து வருகின்றனர். ரொம்ப நாள் கழித்து சன்னிலியோன் நடத்தியுள்ள இந்த போட்டோ ஷூட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் காட்டுத் தீயாக பரவி வருகிறது.

“வயதானாலும் இளமை குறையவில்லை” – இணையத்தில் தீயாய் பரவும் தளபதியின் பு...

Quick Share

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவரது நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அதனால் தொடர்ந்து பல இயக்குனர்களும் விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்கி விட வேண்டும் என தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர்.

ஆனால் நடிகர் விஜய் நெல்சன் திலீப்குமார் ஏக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். நாளுக்கு நாள் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. தெலுங்கு ஹிந்தி என அணைத்து மொழி நடிகர்களும் இப்படத்தில் நடித்துள்ளனர்.தொடர்ந்து இப்படத்தின் பற்றிய அப்டேட் படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர்.

சமீபத்தில் பீஸ்ட் படத்தில் யோகி பாபு நடிப்பதாக தகவல் வெளியாகியது. மேலும் செல்வராகவன் இப்படத்தில் வில்லனாக நடிப்பதாகவும் தகவல் வெளியானது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் சென்னையில் பெரிய செட் போட்டு பாடல் காட்சியை எடுத்து வருகின்றனர்.

தற்போது விஜய் வைத்து சில சண்டை காட்சிகள் எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் சமீபத்தில் பீஸ்ட் படத்தின் நூறாவது நாள் வெற்றிகரமாக கொண்டாடப்பட்டதை படத்தின் இயக்குனர் நெல்சன் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

தற்போது விஜய் ஷூட்டிங் முடித்துவிட்டு கடற்கரை அறையில் புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார். தற்போதைய இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் விஜய் வயதானாலும் இளமை மாறாமல் உள்ளார் என கூறி வருகின்றனர். மேலும் இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கட்டுக்கடங்காத கவர்ச்சியால் ரசிகர்களை கட்டிப்போட்ட பூனம் பாஜ்வா!

Quick Share

தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் ஒரு ரவுண்ட் அடித்து வந்த Hot அழகியான பூனம் பாஜ்வாவை சேவல் படம் மூலம் தமிழுக்கு இறக்குமதி செய்தார் இயக்குநர் ஹரி. அதன் பின்னர் தெனாவெட்டு, அரண்மனை 2, கச்சேரி ஆரம்பம் என எல்லா கேரக்டர் வரை இறங்கி பார்த்துவிட்டார்.

பூனம் பாஜ்வாவின் வழுவழுப்பான தேகத்தில் பல இளைஞர்கள் குடி புகுந்து விட்டார்கள். எப்போதுமே மார்கெட்டில் இருக்கும் நடிகைகளின் புகைப்படங்களை விட மார்கெட்டில் இல்லாத நடிகைகளின் புகைப்படங்களுக்கு தான் Likes ஜாஸ்தி. இப்போது தனது சூடான படங்களுடன் களம் இறங்கியிருக்கிறார் நடிகை பூனம் பாஜ்வா

சொல்லிக்கொள்ளும் அளவுக்கு படங்கள் இல்லை என்றாலும் ரசிகர்களின் கண்களை காயபோடுவதில்லை. இந்நிலையில் வழக்கமாக தொப்புளை அதிகமாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வந்தவர், தற்போது அரைகுறை ஆடையுடன் Structureஐ காட்டி இளசுகளை சூடேற்றி விடுகிறார்.

ஷாக் ஆகாதிங்க – இவருக்கு இவ்ளோ சொத்து இருக்கா – மொத்தம் எத்தனை கோடி தெரியுமா?

Quick Share

தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான நடிகர் அருண் விஜய், என்னை அறிந்தால் படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இருந்து நீங்க இடத்தை பிடித்துவிட்டார்.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தடம், குற்றம் 23, என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார்.

மேலும் தற்போது அறிவழகன் இயக்கத்தில் உருவாகியுள்ள பார்டர் படத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார்.

எதிர்பார்ப்புக்குரிய இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் நடிகர் அருண் விஜய்யின் சொத்து மதிப்பு குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி, நடிகர் அருண் விஜய்யின் முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 80 கோடி என்று தெரிவிக்கின்றனர்.




You cannot copy content of this Website