சினிமா

இந்த படத்திற்காக ஊதியத்தை குறைத்து கொண்டேன் -எவ்ளோ தெரியுமா ??

Quick Share

சகுந்தலை புராண கதை சினிமா படமாக தயாராகிறது. இந்த படத்தில் சகுந்தலையாக நடிகை சமந்தா நடிக்கிறார். இந்த படம் நேரடியாக தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் தயாராகிறது. குணசேகர் இயக்குகிறார். இவர் ஏற்கனவே அனுஷ்கா நடித்து தமிழ், தெலுங்கில் வெளியான ருத்ரமா தேவி படத்தை இயக்கியவர். சகுந்தலை படத்தில் சகுந்தலா கதாபாத்திரத்தில் நடிக்க அனுஷ்கா, பூஜா ஹெக்டே ஆகியோர் பரிசீலிக்கப்பட்டனர். இறுதியில் சமந்தாவை ஒப்பந்தம் செய்தனர்.

இந்தப் படத்தில் நடிக்க சமந்தா ரூ.2.50 கோடி சம்பளம் வாங்குகிறார். இதற்கு முன்பு ரூ.3 கோடி வாங்கிய சமந்தா, சகுந்தலை படத்தில் தனது கதாபாத்திரம் பிரதானமாக இருப்பதாலும், தான் நடிக்கும் முதல் புராண படம் என்பதாலும் சம்பளத்தை ரூ.50 லட்சம் குறைத்து இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சமந்தாவுக்கு ஜோடியாக இளம் நடிகர் தேவ் மோகன் நடிக்கிறார்.

உச்சகட்ட கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ஜான்வி கபூர்!

Quick Share

தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடிய நடிகைகளில் ஒருவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் துபாயில் ஒரு உறவினர் திருமணத்திற்கு சென்ற அவர் திடீரென உயிரிழந்தார். இது இந்திய சினிமா ரசிகர்களுக்கு பெறும் அதிர்ச்சியை கொடுத்தது. அவர் இறந்ததில் இருந்து அவரது மகள்கள் மீது மக்களின் கவனம் அதிகம் இருந்தது.

ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் பாலிவுட் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகி நிறைய வெற்றிப் படங்கள் கொடுத்து வருகிறார்.

சில செம ஹிட் படமாகவும் அமைகிறது, அவர் தமிழிலும் விரைவில் அறிமுகமாக இருக்கிறார் என செய்திகள் வருகின்றன, ஆனால் எதுவும் உறுதியானது இல்லை.

இந்த நிலையில் பல நடிகைகள் மாலத்தீவுகளுக்கு சென்று வரும் நிலையில் நடிகை ஜான்வியும் சென்றுள்ளார். அங்கு அவர் நீச்சல் உடையில் எடுத்த பதிவிட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.

ஓட்டு போடா வராத நடிகர்கள் !! என்ன காரணம் தெரியுமா ??

Quick Share

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பான முறையில் நடைபெற்று முடிந்தது.
நேற்று காலை முதல் ரஜினி,கமல், சூர்யா,விஜய்,அஜித் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் வாக்குச்சாவடிக்கு வந்து, வாக்களித்து சென்றனர்.

நடிகர் தனுஷ் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா “தி க்ரே மேன்” ஹாலிவுட் திரைப்படத்திற்காக அமெரிக்காவில் இருப்பதால், அவர்களாலும் வாக்களிக்க வரமுடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் சுந்தர்.சி, சிவா, சமுத்திரக்கனி, ஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன்,லிங்குசாமி, கோவை சரளா, மீனா, விக்னேஷ் சிவன், செளந்தர்யா உள்ளிட்ட பிரபலங்களும் ஓட்டுப்போட வரவில்லை.

எனக்கு கல்யாணம் நடக்கல , வதந்திகளை நம்பவேண்டாம் – வேதனையில் கீர்த்தி சுரேஷ்.

Quick Share

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், மறைந்த நடிகை சாவித்திரி வாழ்க்கை கதையான ‘மகாநடி’ படத்தில் நடித்து தேசிய விருது பெற்றார். தற்போது ரஜினியுடன் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். நடிகை கீர்த்தி சுரேசுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து தகவல்கள் பரவி வருகின்றன.

இசையமைப்பாளர் அனிருத்துடன், கீர்த்தி சுரேஷ் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வெளியாகி இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்தன. பின்னர் இருவரும் நண்பர்கள்தான், அவர்களிடையே காதல் இல்லை என்று நெருக்கமானவர்கள் மறுத்தார்கள். பின்னர் கேரளாவை சேர்ந்த தொழிலதிபருடன், கீர்த்தி சுரேசுக்கு திருமணம் நிச்சயமாகி உள்ளதாக தகவல் பரவியது.

இதனையும் மறுத்த கீர்த்தி சுரேஷ், தனக்கு இப்போது திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை என்றார். இருப்பினும் அவர் குறித்து தொடர்ந்து திருமண வதந்திகள் பரவி வருகின்றன.

இதுகுறித்து சமீபத்திய பேட்டியில் கீர்த்தி சுரேஷ் கூறியதாவது: “எனக்கு திருமணம் நடக்க உள்ளதாக தொடர்ந்து வதந்திகள் பரவி வருவது அதிர்ச்சி அளிக்கிறது. சில இணைய தளங்களில் நான் திருமணம் செய்து கொண்டதாக 3, 4 தடவை செய்திகள் வந்துள்ளன. ஒவ்வொரு முறையும் வெவ்வேறு நபருடன் திருமணம் நடந்துள்ளதாக குறிப்பிட்டு உள்ளனர். இதுபோன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம். நான் திருமணம் செய்து கொள்ள இன்னும் காலம் இருக்கிறது” என்றார்.

சர்ச்சைகளில் சிக்காமல் இருக்க கர்ணன் படக்குழு எடுத்த அதிரடி முடிவு!

Quick Share

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். இதில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, லால், கவுரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பாக தாணு தயாரித்துள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 9-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

இதுவரை வெளியான இப்படத்தின் பாடல்களும், டீசரும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்ததோடு மட்டுமின்றி, சர்ச்சைகளிலும் சிக்கியது. குறிப்பாக பண்டாரத்தி என்ற பாடலால் உருவான சர்ச்சையால், அதனை மஞ்சனத்தி என மாற்றிவிட்டனர்.

படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் இதற்கு மேல் சர்ச்சைகளில் சிக்கிவிட வேண்டாம் என்பதற்காக, கர்ணன் படக்குழு அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளதாம். அதன்படி, படத்தின் டிரெய்லரை வெளியிட வேண்டாம் என முடிவு செய்துள்ளார்களாம்.

‘மாவீரன் பிள்ளை’ படத்தில் களமிறங்கும் வீரப்பன் மகள்.

Quick Share

தமிழக அதிரடிப் படையால் 2004-ல் சுட்டுக்கொல்லப்பட்ட சந்தன கடத்தல் வீரப்பனுக்கு வித்யாராணி, விஜயலட்சுமி என்று 2 மகள்கள் உள்ளனர். இதில் வித்யாராணி கடந்த வருடம் பா.ஜனதா கட்சியில் இணைந்தார். இளைய மகளான விஜயலட்சுமி சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி இருக்கிறார்.

விஜயலட்சுமி நடிக்கும் படத்துக்கு ‘மாவீரன் பிள்ளை’ என்று பெயர் வைத்துள்ளனர். இப்படத்தை இயக்கி உள்ள கே.என்.ஆர்.ராஜா, கதாநாயகனாகவும் நடித்துள்ளார். விஜயலட்சுமி தோற்றம் அடங்கிய பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். அதில் கையில் துப்பாக்கியுடன் போஸ் கொடுத்தபடி நிற்கிறார் விஜயலட்சுமி.

மது ஒழிப்பு மற்றும் தண்ணீர், விவசாயிகள் பிரச்சினை பற்றிய போராட்டங்களை மையப்படுத்தி இந்தப் படம் தயாராகி உள்ளது. போராட்டங்களை முன்நின்று நடத்தும் போராளி கதாபாத்திரத்தில் விஜயலட்சுமி நடித்து இருக்கிறார். வீரப்பனின் மகள் நடிப்பதால் இப்படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.

முன்னாள் காதலியின் வழக்கால் -ஆர்யாவிற்கும், சயீஷாவிற்கும் இடையே பிரச்சினை.

Quick Share

ஆர்யா தன்னை ஏமாற்றினார் என்று இலங்கை பெண் கொடுத்த புகாரின் பெயரில் ஏற்பட்ட சர்ச்சையால் ஆர்யாவிற்கும், சயீஷாவிற்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆர்யா தன்னை காதலித்து திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி ரூ. 70 லட்சம் மோசடி செய்துவிட்டதாக ஜெர்மனியில் வேலை பார்க்கும் இலங்கையை சேர்ந்த விட்ஜா என்கிற பெண் புகார் அளித்தார்.

அவர் தன் புகாரில் கூறியிருந்ததாவது, நான் ஜெர்மனியில் வேலை செய்து வருகிறேன். நானும், ஆர்யாவும் மூன்று ஆண்டுகளாக காதலித்தோம். என்னை நிச்சயம் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்தார். என்னிடம் இருந்து ரூ. 70 லட்சம் வாங்கியிருக்கிறார் ஆர்யா.

பின்னர் அவர் என்னை திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார். என்னிம் இருந்து வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு நான் அவரிடம் கேட்டேன். கொரோனா வைரஸ் பிரச்சனையால் பட வாய்ப்புகள் இல்லாமல் நானே நெருக்கடியில் இருக்கிறேன் என்று கூறி ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்.

பண விஷயம் குறித்து கேட்டபோது ஆர்யாவின் அம்மா என்னை தகாத வார்த்தைகளால் திட்டினார். ஆர்யாவுக்கு பணம் கொடுத்ததற்கான ஆதாரங்கள் அனைத்தும் என்னிடம் இருக்கிறது.

பணத்தை திருப்பிக் கொடுக்காவிட்டால் புகார் அளிப்பேன் என்றேன். அதற்கு அவரோ, புகார் கொடுத்தால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டினார் என்றார்.

விட்ஜாவின் புகார் குறித்து ஆர்யா விளக்கம் எதுவும் அளிக்கவில்லை. இந்நிலையில் மோசடி விவகாரம் தொடர்பாக ஆர்யாவுக்கும், மனைவி சயீஷாவுக்கும் இடையே பெரிய பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக பேச்சு கிளம்பியது.

இந்நிலையில் தன் மனைவி புனித் ராஜ்குமாருடன் சேர்ந்து நடித்துள்ள யுவரத்னா கன்னட படம் இன்று தியேட்டர்களில் ரிலீஸாகியுள்ளதை முன்னிட்டு ட்விட்டரில் வாழ்த்தியுள்ளார் ஆர்யா. அதை பார்த்த சயீஷா நன்றி தெரிவித்துள்ளார்.

ஆர்யா, சயீஷாவின் ட்வீட்டுகளை பார்த்த ரசிகர்களோ, இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள். அவர்களுக்கு இடையே எந்த பிரச்சனையும் இல்லை. ஒற்றுமையாக வாழும் கணவன், மனைவியை பிரிக்க முயற்சி செய்ய வேண்டாம் என்று கூறியுள்ளனர்.

முன்னதாக சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா, சயீஷா ஜோடியாக நடித்த டெடி படம் ஓடிடியில் வெளியாகி பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. குட்டீஸ்கள் கொண்டாடும் படமாக டெடி அமைந்துவிட்டது.


தொடர்ந்து கொரோனவால் சிக்கும் பாலிவுட் நடிகர்கள்-இப்போ ஆலியா பட்!

Quick Share

இந்தி திரையுலகின் பிரபல நடிகை ஆலியா பட் (28). இவர் மும்பையில், சஞ்சய் லீலா பன்சாலியின் கங்குபாய் கத்தியாவாடி என்ற படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். ஆலியா, தனது இன்ஸ்டாகிராமில் நள்ளிரவில் வெளியிட்ட செய்தியில், அனைவருக்கும் வணக்கம்.

எனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் உடனடியாக என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். வீட்டில் தங்கி சிகிச்சை பெறுவேன்.

என்னுடைய மருத்துவர்கள் அறிவுரையின்படி அனைத்துப் பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றி வருகிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் தன்னுடைய பதிவில், உங்களுடைய அன்பு மற்றும் ஆதரவுக்கு நன்றி என ரசிகர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார். பாதுகாப்புடன் இருங்கள் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இந்த விருதையும் விட்டுவைக்காத ரஜினி -மகிச்சியில் ரசிகர்கள்.

Quick Share

இந்திய திரைப்பட துறையின் மிக உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய திரைத்துறையில், வாழ்நாள் சாதனை புரிந்தவர்களுக்கு ஆண்டு தோறும், தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான 51ஆவது தாதாசாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய திரைத்துறையினருக்கு கிடைக்கும் கவுரவமாகவும், வாழ்நாள் அங்கீகாரமாகவும் இந்த விருது கருதப்படுகிறது. தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் போது, நடிகர் ர​ஜினிகாந்துக்கு இந்த விருது வழங்கப்படும். விருதுடன் சான்றிதழ் மற்றும் 10 லட்சம் ரூபாய் சன்மானமும் வழங்கப்படும். ஏற்கனவே ரஜினிக்கு பத்ம பூஷன், பத்ம விபூஷன் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் திரையுலகில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், மற்றும் இயக்குநர் கே.பாலச்சந்தருக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் தாதா சாகேப் விருதை பெறுகிறார். தாதாசாகேப் விருது கடந்த 1969ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்திய திரைப்படத் துறையின் தந்தை என கூறப்படும் தாதாசாகேப் பால்கேவின் பெயரில், திரைத்துறையில் சாதனை புரிந்தவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. கடந்தாண்டு இந்தி நடிகர் அமிதாப் பச்சனுக்கு தாதாசாகேப் விருது வழங்கப்பட்டது.

இதையடுத்து, தற்போது நடிகர் ரஜினிகாந்துக்கு தாதாசாகேப் விருது அறிவிக்கப்பட்டுள்ளது, ரசிகர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த அறிவிப்பினை தொடர்ந்து பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் எனப் பலரும் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் என்னை வாழ வைத்த தமிழ் மக்களுக்கும், ரசிகர்களுக்கும் இந்த விருதை சமர்ப்பிக்கிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியத் திரையுலகின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை எனக்கு வழங்கிய மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

என் நடிப்புத் திறமையை வெளிக்கொண்டுவந்த பேருந்து ஓட்டுநரான எனது நண்பன் ராஜ் பகதூருக்கும், வறுமையின் பிடியில் வாடியபோது என்னை நடிகனாக்க பல தியாகங்கள் செய்த சகோதரன் சத்யநாராயணாவிற்கும், என்னை திரையுலகிற்கு அறிமுகம் செய்து, இந்த ரஜினிகாந்தை உருவாக்கிய எனது இயக்குநர் பாலச்சந்தருக்கும், திரையுலக தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், ஊடகங்கள் மற்றும் என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கும், உலகெங்கிலும் உள்ள எனது ரசிக பெருமக்களுக்கும் இந்த விருதினை சமர்ப்பிக்கிறேன்.

என்னை வாழ்த்திய தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவரும், நண்பருமான மு.க.ஸ்டாலின், நண்பர் கமல்ஹாசன், மத்திய, மாநில அரசியல் தலைவர்களுக்கும், நண்பர்களுக்கும், திரையுலக நண்பர்களுக்கும், என்னுடைய நலம் விரும்பிகளுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று அதில் தெரிவித்துள்ளார்.

சின்ன வயதில் தங்கையுடன் விஜய் -இணையத்தை கலக்கும் புகைப்படம்.

Quick Share

தமிழ் திரையுலகில் முக்கிய நட்சத்திரம் தளபதி விஜய். இவர் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தளபதி விஜய் நடிக்கும் இப்படத்திற்கு இரு தினங்களுக்கு முன் தான் சன் நிறுவனத்தின் அலுவலகத்தில் பூஜை நடைபெற்று முடிந்தது.

இயக்குனர் எஸ்.ஏ.சி மற்றும் ஷோபனா சந்திரசேகர் அவர்களுக்கும் பிறந்தவர் தான், நடிகர் விஜய் என்பதை அனைவரும் அறிவோம்.

தளபதி விஜய்க்கு ஒரு தங்கை பிறந்தனையும், அவர் சிறு வயதிலேயே உடல்நல குறைவால் மரணமடைந்ததும் தெரிந்தது தான்.

இந்நிலையில் தளபதி விஜய் தனது அப்பா, அம்மா, மற்றும் தங்கையுடன் சிறு வயதில் எடுத்துக்கொண்ட குடும்ப புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

முதலில் உனது தாய், சகோதரியிடம் இதை கேள், அதன்பிறகு நானும் பதிவிடுகிறேன்-பிரியாமணி.

Quick Share

தமிழில் கண்களால் கைது செய் படத்தில் அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக வலம் வந்த பிரியாமணி பருத்தி வீரன் படத்தில் நடித்து தேசிய விருதை பெற்றார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கிய அவர் தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

தமிழில் ‘கொட்டேஷன் கேங்க்’ படத்திலும் தெலுங்கு, இந்தி, கன்னட படங்களிலும் நடிக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் பிரியாமணி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார். அதற்கு நிறைய வரவேற்பும், விமர்சனங்களும் கிளம்பின.

இதைப் பார்த்த ரசிகர் ஒருவர், நிர்வாண புகைப்படங்களை வெளியிடுங்கள் என்றார். இதனால் கோபமான பிரியாமணி முதலில் உனது தாய், சகோதரியிடம் இதை கேள், அதன்பிறகு நானும் பதிவிடுகிறேன் என்று சாடினார். பிரியாமணியின் பதில் வைரலாகி பரபரப்பானது. சரியான பதிலடி கொடுத்ததாக பிரியாமணியை வலைத்தளத்தில் பலர் பாராட்டியும் வருகிறார்கள்.

“விரைவில் திருமணம்” – உறுதி செய்த விஷ்ணு விஷால்!

Quick Share

‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர், விஷ்ணு விஷால். ‘பலே பாண்டியா,’ ‘ராட்சசன்,’ ‘முண்டாசுப்பட்டி’ உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். இவர், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ரமேஷ்குடவாலாவின் மகன். சில வருடங்களுக்கு முன்பு நடிகர் கே.நட்ராஜின் மகளை திருமணம் செய்து, பின்னர் விவாகரத்து செய்தார்.

அதைத்தொடர்ந்து சில நடிகைகளுடன் இவரை இணைத்து கிசுகிசுக்கள் வெளிவந்தன. இதனிடையே, பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை காதலிப்பதாக விஷ்ணு விஷால் தெரிவித்தார். கடந்தாண்டு இவர்கள் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

இந்நிலையில், ஜுவாலா கட்டாவுடன் திருமணம் எப்போது என்பது குறித்து நடிகர் விஷ்ணு விஷால் சமீபத்திய பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார். அதன்படி ஏப்ரல் மாதம் இறுதியில் நடைபெறும் என தெரிவித்துள்ளார். தேதியை விரைவில் அறிவிக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.




You cannot copy content of this Website