கிரைம்

40 பவுன் நகை… தேவையான சீர்வரிசை! திருமணம் ஆன ஒரு வருடத்தில் கழுத்தை நெரிக்கப்பட்டு இறந்...

Quick Share

தமிழகத்தில் இளம் பெண் ஒருவர் திருமணமான ஒரு வருடத்தில் உயிரிழந்த நிலையில், இது திட்டமிட்ட கொலை என்று பெற்றோர் பரபரப்பு புகார் கொடுத்துள்ளனர்.ர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுக்கா தாமோதரஹள்ளி ஊராட்சி, சாதி நாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த தம்பதி, வெண்ணிலா – முருகேசன்.

இவர்களின் மூத்த மகளான பவித்ரா(22)-வுக்கும் கரூர் மாவட்டம் வாங்கல் அருகே அக்ரஹாரம் என்ற பகுதியில் வசிக்கும் பிரகாஷ் குமார் என்ற பொறியாளருக்கு, கடந்த 14 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

பிரகாஷ்குமார் கரூரில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். பவித்ராவின் பெற்றோர் வெண்ணிலா, தாமோதரஹள்ளி என்ற அந்த ஊராட்சியின் தலைவராகச் செயல்பட்டு வருகின்றனர்.

பவித்ராவின் திருமணத்தின் போது, அவரின் பெற்றோர் 40 பவுன் நகை மற்றும் சீர்வரிசை செய்துள்ளனர். இந்நிலையில், மீண்டும், வரும் பொங்கல் திருநாளுக்கு ஒரு காரும் தங்க நகைகளும் வரதட்சணையாகக் கேட்டு, பவித்ராவை பிரகாஷ்குமார் மற்றும் அவரின் குடும்பத்தினர் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால், அவர் தன் பெற்றோரிடம் வந்து இது பற்றி கதறி அழுதுள்ளார். மிகுந்த வேதனையில் இருந்த பவித்ரா கடந்த 22 -ஆம் திகதி உள்ளூர் நேரப்படி பிற்பகல், 2 மணியளவில் கழுத்து நெரிக்கப்பட்டு இறந்து கிடந்தார்.

பவித்ராவின் கணவர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அந்தப் பெண்ணை கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்ததை தொடர்ந்து, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பிறகு, பவித்ராவின் கணவர் குடும்பத்தார், திடீரென அங்கிருந்து தலைமறைவாகிவிட்டனர்.

மேலும், அவர்கள் வசித்த வீட்டையும் பூட்டிவிட்டு ஊரை விட்டு வெளியேறி விட்டனர். பவித்ராவின் உடல் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்தபோது, இது குறித்து விசாரணை மேற்கொண்டு உறவினர்களுக்கும் அவரது பெற்றோருக்கும் தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அந்தத் தகவலின்பேரில், கிருஷ்ணகிரியில் இருந்து ஊர் மக்களுடன் திரண்டு வந்த பவித்திராவின் பெற்றோர், தனது மகள் இறப்பிற்கு நீதி வேண்டும் எனக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொலிசார் உரிய நடவடிக்கை கண்டிப்பாக எடுக்கப்படும் என்று கூறிய பின்னர் அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதையடுத்து, பவித்ராவின் உடல் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு, அவரது உடல், சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இது தொடர்பாகக் தலைமறைவாக உள்ள கணவர் பிரகாஷ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரை பொலிசார் தேடி வருகின்றனர்.

முதலிரவில் தான் கணவரைப் பற்றி உண்மை தெரிந்தது! அதன் பின் மாமியார் வீட்டில் நடந்த கொடுமை...

Quick Share

தமிழகத்தில் ஒட்டு மொத்த குடும்பத்தையும் தீர்த்து கட்டிய மருமகள் சம்பவத்தில் அடுத்தடுத்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை சவுகார்பேட்டையில் ஜெயமலா என்பவர் சொத்துக்காக மாமனார், மாமியார், கணவனை துப்பாக்கியால் துடி துடிக்க சுட்டு கொன்றார்.

இதையடுத்து ஜெயமலா உட்பட 3 பேரை பொலிசார் டெல்லியில் கைது செய்தனர்.

அப்போது நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில் ஜெயமலா தன்னுடைய மாமனார் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், கனவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதன் காரணமாகவும் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், தற்போது அவர் அளித்த முழு வாக்குமூலம் வெளியாகியுள்ளது.

அதில், திருமணம் முடிந்த முதலிரவிலே கனவர் மனநிலை சரியில்லாதவர் என்பதை அறிந்தவுடன் மிகவும் கவலையடைந்தேன்.

இருப்பினும் எப்படியோ இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்தேன். என் மாமியார் வீட்டை சேர்ந்த உறவினர்கள் 2 பேர் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தனர்.

நான் உடை மாற்றும்போதும், குளிக்கும்போதும் ரகசியமாக பார்த்து ரசித்தனர். ஒருநாள் நான் குளிக்கும்போது என்னை ரகசியமாக ஒளிந்து பார்த்ததை நான் பார்த்துட்டேன்.

இதுகுறித்து கணவனிடம் கூறினேன். ஆனால் அதை அவர் கண்டுக்கவே இல்லை. பின்னர் எனது கணவர் கண்முன்னாடியே எனக்கு பாலியல் கொடுமைகள் அரங்கேறின.

இதை எனது மாமியாரிடம் சொன்னேன். இதெல்லாம் கூட்டு குடும்பத்தில் சகஜம் என்று சொல்லிவிட்டார். 4 கோடி ஜீவனாம்சம் கேட்டேன். ஆனால், 25 லட்சத்தை மட்டும்தான் தருவதாக சொன்னார்கள்.

இதுதான் ஆத்திரம் வந்தது. என்னை அசிங்கமாக பேசினார்கள். இதன் காரணமாக கொலை செய்ய முடிவு செய்தோம்.. என் தம்பிகள் என்னை வெளியில் காத்திருக்க சொன்னார்கள்.

ஆனால், நான் எனது கணவர் குடும்பம் துடித்து சாவதை நேரில் பார்க்கணும், சந்தோஷப்படணும் என்று சொன்னேன்.. அதன் பின்பு தான் இந்த கொலை நடந்தது என்று கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தில், ஜெயமாலாவின் தம்பி கைலாஷ் அவருக்கு தெரிந்த ஒய்வு பெற்ற விமான படை அதிகாரியிடம் இருந்து கைத்துப்பாக்கியை வாங்கி ஒத்திகை பார்த்துள்ளார்.

சத்தம் அவ்வளவாக வெளியே வராத துப்பாக்கியை தெரிவு செய்தும், அதன் பின்துப்பாக்கி சுடும் பயிற்சியும் எடுத்துள்ளனர்.

காதல் மனைவியை அழைத்துச் சென்று கணவன் செய்த கொடூர கொலை! 5 ஆண்டுகளுக்கு பின் தெரிந்த திடு...

Quick Share

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2013-ஆம் ஆண்டில் Meghashree என்பவர் பெங்களூருவின் Bommanahalli-வில் Begur பகுதியில் இருக்கும் கல்லூரி ஒன்றில் படித்து வந்துள்ளார்.

அப்போது அவருக்கு தனது நண்பர்களான உஷா மற்றும் ரம்யாவின் உறவினரின் மகனாக இருந்த சுவாமி என்பவர் அறிமுகமாகியுள்ளார்.

இவர்களின் நட்பு நாளைடைவில் காதலாக மாறியுள்ளது. இதைத் தொடர்ந்து Meghashree ஆடை தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.

சுவாமி தபாவில் வேலை செய்து வந்தார். இதையடுத்து இவர்கள் இருவரும் கடந்த 2014-ஆம் ஆண்டு Rajarajeshwarinagar-ல் இருக்கும் கோவில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டனர்.

அதன் பின் இவர்கள் பெங்களூருவின் Byadarahalli பகுதியில் வாடகை வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் பெங்களூருவில் பொருளாதார நெருக்கடி காரண்மாக இருவருமே வாழ்க்கை நடத்துவது சிரமாமாக இருந்துள்ளது.

இதையடுத்து இவர்கள் இருவரும், மைசூருவில் உள்ள கலாஸ்தவாடிக்கு மாறியுள்ளனர். ஆனால், அங்கு இருவருக்குமே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் இருவரும் பிரிந்து செல்ல முடிவு செய்தனர். அதன் படி காவல்நிலையத்திற்கு சென்றனர். இதைத் தொடர்ந்து Meghashree தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்ற நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது குறித்து பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 2015-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22-ஆம் திகதி சுவாமி மனைவியை தொலைப்பேசியில் அழைத்துள்ளார்.

அப்போது அவர், கடந்த காலத்தை மறந்து எதிர்காலத்தில் ஒன்றாக ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ்வோம் என்று கூறி, அவரை ஸ்ரீரங்கப்பட்டணத்தில் உள்ள ஒரு லாட்ஜுக்கு வரும்படி கூறியுள்ளார்.

அங்கு ஒரு நாள் இரவு முழுவதும் ஒன்றாக தங்கியுள்ளனர். அதன் பின் மார்ச் 23-ஆம் திகதி மாலை இருவரும் ஒன்றாக பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர்.

அதைத் தொடர்ந்து சுவாமி, நாம் திருப்பலபுராவுக்குச் செல்வோம் என்று அழைத்துள்ளார். அப்போது இருவரும் போகும் வழியில் சுவாமி பனகட்டா கேட் அருகே சென்ற போது மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, அங்கிருக்கும் கால்வாயில் வீசிவிட்டு தப்பியுள்ளார்

இதற்கிடையில், Meghashree தாயார் தன்னுட மகளை தேடியுள்ளார். ஆனால் கிடைக்கவில்லை, இந்த சமயத்தில் வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்த போது, சுவாமியின் வாக்காளர் அடையாள அட்டை கிடைக்க, அதில் இருக்கும் முகவரியை வைத்து, அவர் கடந்த மாதம் 14-ஆம் திகதி திருமலபுராவுக்குச் சென்றுள்ளார்.

அங்கு, அவரிடம் அவர் தனது மகளைப் பற்றி கிராமவாசிகளிடம் விசாரித்தபோது, தன்னுடைய மகள் இங்கு இல்லை என்பது தெரியவர, அவர் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், அவர் தன்னுடைய மகள் கொலை செய்யப்பட்டதாகவும், குறித்த கிராமத்தில் வசிக்கும் சிலர் தன்னிடம் கூறியதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இதை அறிந்த ஒரு சில சமூக அமைப்புகளும், இது ஒரு கெளவுர கொலை என்பது போல், சுவாமியை உடனடியாக கைது செய்யப்படும் போராட்டங்கள் நடத்தினர்.

தற்போது இறுதியாக சுவாமியை பொலிசார் கைது செய்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தில் காவலில் வைத்துள்ளனர்.

இருப்பினும் தற்போது வரை மனைவியின் உடல் கண்டுபிடிக்கப்படவில்லை, பொலிசார் இது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

13 வயது சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் போலீஸ்

Quick Share

13 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் சந்தியா உள்ளிட்ட 8 பேர் ஏற்கனவே வண்ணாரப் பேட்டை அனைத்து மகளிர் நிலைய போலீசாரால் கைது செய்யப்பட்டு இருந்தனர்.இந்த வழக்கில் 9வதாக கைது செய்யப்பட்ட ராசேந்திரன் என்பவர், காவல் ஆய்வாளராக இருக்கும் தனது நண்பர் புகழேந்தியுடன் சேர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்திருந்ததாக வாக்குமூலம் அளித்திருந்தார்.

அதன்பேரில் காவல் ஆய்வாளர் புகழேந்தி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்

தந்தையை கொன்றுவிட்டு மகன் கூறிய அதிர்ச்சி காரணம்!

Quick Share

ஜார்கண்ட் மாநிலத்தில் வேலை கிடைக்காத விரக்தியில் இளைஞர் ஒருவர் வேலை பெறுவதற்காக தனது தந்தையை கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டத்தின் பர்ககனா பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணா ராம். இவர் சென்ட்ரல் கோல் ஃபீல்ட்ஸ் லிமிடெட் (சி.சி.எல்) என்ற நிலக்கரி நிறுவனத்தில் பாதுகாவலராக பணியாற்றி வருகிறார்.

இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் 35 வயதாகும் அவரது மூத்த மகன் வேலையின்றி தவித்து வந்துள்ளார். அவரது தந்தை பணிபுரியும் (சி.சி.எல்) என்ற நிலக்கரி நிறுவனத்தை பொறுத்தவரை அந்த நிறுவன ஊழியர்கள் யாரேனும் உயிரிழந்தால் அவரது குடும்பத்தினரின் ஒருவருக்கு வேலை வழங்கப்படும்.

இதனை தெரிந்துகொண்ட அவரது மூத்த மகன் தனது தந்தையை கொலை செய்துவிட்டு தனக்கு வேலை பெற முடிவு செய்துள்ளார். அதன்படி கடந்த புதன் கிழமை வேலை முடித்து வந்த தனது தந்தை அவரது மகன் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இது தொடர்பாக தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவரது மகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் வேலையில்லாததால் தனது தந்தை நிறுவனத்தில் வேலை பெறுவதற்காக தந்தையை கொலை செய்ததை அவரது மகன் ஒப்புக்கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கணவருடன் கஞ்சா.., நடிகை கைது ! பூதாகரமாக வெடித்த போதைப்பொருள் விவகாரம்..,

Quick Share

சமீபகாலமாக போதைப்பொருள் விவகாரம் பெரும் இந்திய திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஏற்கனவே பாலிவுட் நடிகை ரியோ சக்கரவர்த்தி மற்றும் கன்னட நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர்கள், நடிகைகள் உள்பட பல பிரபலங்களிடம் போதைப்பொருள் பயன்படுத்தும் கலாச்சாரம் பரவி வருவது குறித்து போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த விசாரணையில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட ஒருவரிடம் விசாரணை செய்து கொண்டிருந்தபோது பாலிவுட் காமெடி நடிகை பாரதிசிங் வீட்டில் கஞ்சா இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே பாரதிசிங் வீட்டில் போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்தனர்.

பாரதிசிங் வீட்டில் 86.5 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காமெடி நடிகை பாரதிசிங்கை அடுத்து அவரது கணவரும் கஞ்சா பயன்படுத்தியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரும் நேற்று கைது செய்யப்பட்டார். போதைப்பொருள் விவகாரத்தில் காமெடி நடிகை பாரதிசிங் தனது கணவருடன் கைது செய்யப்பட்டிருக்கும்
தகவல் பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த வலையில் பல பேர் பெயர்கள் வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

கமல் கட்சியில் உள்ள சினேகனுக்கு வந்த சிக்கல்.., கார் மோதியதால் ஏற்பட்ட விபத்து

Quick Share

பிக் பாஸ் சீசன் 1 போட்டியாளராக இருந்தவர் கவிஞர் சினேகன் தற்போது கமல் ஹாசன் கட்சியில் மும்முரமாக கட்சி பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன் சினேகன் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் என்ற பகுதியில் காரில் சென்ற போது கார் திடீரென இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த அருண்பாண்டியன் என்பவர் மீது மோதியது. இந்த
விபத்தில் அருண் பாண்டியனுக்கு படுகாயம் ஏற்பட்டதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இப்போது பாதிக்கப்பட்டவர் உயர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் தற்போது சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அருண்பாண்டியன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்போது காயமடைந்த அருண்பாண்டியன் உயிரிழந்துள்ளதால் சினேகனுக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சினேகன் மீது ஏற்கனவே கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல், விபத்து ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்து குறிப்பிடத்தக்கது.

கால்லூரி மாணவியை காதல் வலையில் வீழ்த்தி இளைஞன் செய்து வந்த மோசமான செயல்!

Quick Share

தமிழகத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் கல்லூரி மாணவிகளை ஆபாச படம் எடுத்து மிரட்டி வந்த நபரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவியின் தந்தை ஒருவர், அடையாறு பொலிஸ் துணை கமிஷனரிடம் புகார் ஒன்றை அளித்தார்.

அதில், கல்லூரியில் படிக்கும் எனது மகளிடம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் ஒரு வாலிபர் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகியுள்ளார்.

அதன் பின் இருவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில், குறித்த இளைஞன் என் மகளை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறியுள்ளான்.

இதை நம்பிய என் மகள் அவன் மீது கொண்ட காதலால், நிர்வாண புகைப்படத்தை அனுப்பியுள்ளார். இந்த புகைப்படத்தை வைத்துக் கொண்டு, அவன் இப்போது என் மகளை மிரட்டி வருகிறான்.

மேலும் சில பெண்களின் எண்களை வாங்கியுள்ளான். கடந்த சில வாரங்களாக மகளுடன் படிக்கும் தோழிகளின் செல்போன் எண்களுக்கு ஆபாச குறுந்தகவல்களை அனுப்பியுள்ளான்

அடிக்கடி எனது மகளின் நிர்வாணப் படத்தை சமூகவலைதளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, இது குறித்து வழக்கு பதிவு செய்த பொலிசார், விசாரணை மேற்கொண்ட போது, அந்த நபர் சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த அருண் கிறிஸ்டோபர் (25) என்பது தெரியவந்தது.

நேற்று முன்தினம் அவரை கைது செய்த பொலிசார், விசாரணை மேற்கொண்ட போது, அவர் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் பொறியியல் பட்டதாரி என்பதும், தற்போது தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தற்காலிக பணியாளராக வேலை செய்து வருவதும் தெரியவந்தது.

பொலிசார் அவரிடம் இருந்து, 2 செல்போன்கள், லேப்டாப், கம்ப்யூட்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்து, அவற்றை பரிசோதித்தனர். அப்போது, ஈஸி வால்ட், கிளவுட் ஆகிய ஆப்களில் நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவிகளின் புகைப்படங்கள், ஆபாச வீடியோக்களை மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது.

இச்சம்பவம் தொடர்பாக, பொலிஸ் துணை கமிஷனர் விக்ரம் கூறுகையில், கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்கள் முன்பின் தெரியாதவர்களிடம் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளம் மூலம் பழக வேண்டாம்.

தங்களுடைய புகைப்படங்களை எந்த காரணத்துக்காகவும் பகிர கூடாது. யாராவது போட்டோக்களை பகிர சொல்லி மிரட்டினால் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கும் படி கூறியுள்ளார்.

படுக்கை அறையில் மனைவியை குத்தி போட்டு கணவர் செய்த அதிர்ச்சி செயல் !!

Quick Share

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகேயுள்ள தாண்டாம்பாளையத்தைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணி. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியைச் சேர்ந்த சித்ரா என்பவருக்கும் பாலசுப்ரமணிக்கும் திருமணம் நடைபெற்றது.

கணவன் மனைவிக்கு இடையே வரும் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. தீபாவளி தினத்தன்று மனைவியின் வீட்டுக்கு வந்த பாலசுப்பிரமணி தகராறு செய்துள்ளார். பிறகு கணவர் வீட்டுக்கே சித்ரா வந்து தங்கியுள்ளார். கணவர், தன்னை இரவு முழுவதும் அடித்து துண்புறுத்தியதாக சித்ராவின் தாயார் மல்லிகாவிடம் தெரிவித்துள்ளார்.

சித்ராவின் தாய் மல்லிகா மீண்டும் செல்போனில் தொடர்பு கொண்ட போது பாலசுப்ரமணியம் பேசியுள்ளார் அப்போது உங்கள் மகள் கோயிலுக்கு சென்றுள்ளதாக வந்தவுடன் பேச சொல்கிறேன் என கூறியுள்ளார்
அடுத்த 2 நாட்களாக சித்ராவின் செல்போனுக்குத் தொடர்பு கொண்டும் பேச முடியாததல் சந்தேகமடைந்த மல்லிகா நேற்று தனது மகளைப் பார்ப்பதற்காக தாண்டாம்பாளையத்திற்கு வந்துள்ளார்.

வீடு பூட்டியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாய் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பூட்டையுடைத்து வீட்டினுள் சென்ற பார்த்த போது படுக்கையறையில் கத்தியால் குத்தப்பட்டு படுக்கை அறையில் மறைத்து வைத்தபடி அழுகிய நிலையில் சித்ரா இறந்து கிடந்துள்ளார்.

மகள் சடலத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த மல்லிகா சிவகிரி காவல்நிலையத்திற்கு புகார் தெரிவித்ததன் பேரில் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்தனர். சடலத்தைக் கைப்பற்றி காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தன் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு தலைமறைவாகிய பாலசுப்பிரமணியை போலீசார் தேடி வருகின்றனர்.

டேட்டிங் தளத்தில் சந்திப்பு… நண்பரை கொன்று உணவாக்கிய ஆசிரியர்: நடுங்க வைத்த சம்பவம்

Quick Share

ஜேர்மனியில் டேட்டிங் தளம் ஒன்றில் அறிமுகமான நபரை படுகொலை செய்து, உணவாக்கிய பாடசாலை ஆசிரியரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

பெர்லின் நகரில் அமைந்துள்ள பூங்கா ஒன்றில் மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், மோப்ப நாய்களின் உதவியுடன் பொலிசார் குற்றவாளியை கைது செய்துள்ளனர்.

ஜேர்மனியின் Pankow மாவட்டத்தில் பாடசாலை ஆசிரியராக பணியாற்றும் 41 வயது Stefan என்பவரையே பொலிசார் கைது செய்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை அதிகாரிகள் வெளியிட்ட தகவலில், ஸ்டீபன் மனித மாமிசம் உணவாக்குவது தொடர்பில் இணையத்தில் தகவல் சேகரித்துள்ளார்.

மேலும், ஆணுறுப்பு துண்டான பின்னர் ஒரு மனிதரால் உயிர் வாழ முடியுமா என்பது போன்ற தகவலையும் ஸ்டீபன் இணையத்தில் தேடியுள்ளார்.

செப்டம்பர் தொடக்கத்தில் 44 வயதான மின் ஊழியர் Stefan Trogisch என்பவர் காணாமல் போனதாக பொலிசாருக்கு புகார் கிடைத்துள்ளது.

இந்த நிலையில் நவம்பர் 8-ம் திகதி பூங்கா ஒன்றில், மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டது. மட்டுமின்றி, அந்த எலும்புகளை ஆய்வுக்கு உட்படுத்திய அதிகாரிகள், மனித மாமிசம் சாப்பிடுவர்கள் தொடர்பில் சந்தேகம் கொண்டனர்.

இந்த நிலையிலேயே மோப்ப நாய்களின் உதவியுடன் பாடசாலை ஆசிரியரான ஸ்டீபனின் குடியிருப்புக்குள் பொலிசார் புகுந்தனர்.

இந்த வழக்கு தொடர்பில் போதிய ஆதாரங்களை கைப்பற்றிய பொலிசார், அவரை உடனையே கைது செய்துள்ளனர்.

இருப்பினும், ஆதாரங்கள் மொத்தம் பாடசாலை ஆசிரியருக்கு எதிராக இருந்தாலும், விசாரணை அதிகாரிகளிடம் அவர் பேச மறுப்பதாக கூறப்படுகிறது.

74 வயதிலும் மாமனார் டார்ச்சர்… கணவன் மனநிலை சரியில்லாதவர்! ஒட்டு மொத்த குடும்பத்தை தீர்...

Quick Share

மருமகள் ஒருவர் மாமனார், கணவர் மற்றும் மாமியார் என ஒட்டு மொத்த குடும்பத்தையும் தீர்த்து கட்டிய சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை சவுகார்பேட்டையில் ஜெயமலா என்பவர் சொத்துக்காக மாமனார், மாமியார், கணவனை துப்பாக்கியால் துடி துடிக்க சுட்டு கொன்றார்.

இந்த கொலை சம்பவம் நடப்பதற்கு முன்பு, ஜெயமலா நீதிமன்றத்தில் 7 கோடி ரூபாய் ஜீவனாம்சம் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

ஆனால், அவர் மாமனாரோ ஒரு பைசா கூட தரமுடியாது என்று கூறிய நிலையில், மாமனார், மாமியார் மற்றும் கணவர் என மூன்று பேரையும் வீட்டிற்கே சென்று துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.

இதில் மாமனாரை மட்டும் காது வழியாகவும், மற்றவர்களை நெற்றிப்பொட்டிலும் சுட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் ஜெயமாலா அண்ணன் உட்பட 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆனால், ஜெயமாலா மட்டும் தப்பிவிட்டதால் பொலிசார் அவரை தேடி வந்தனர்.

இதற்கிடையில், ஜெயமாலா அண்ணன் பொலிசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் இந்த கொலைக்கான இரண்டு காரணங்கள் தெரியவந்தது.

அதில், ஒன்று, மருமகளுக்கு மாமனார் பாலியல் தொல்லை தந்து வந்துள்ளார். மாமனாருடன் சேர்த்து, வீட்டில் உள்ள சொந்தக்காரர்களும் அவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர். அவருடைய கணவர் ஷீத்தல் மனநிலை சரியில்லாதவர் என்பதால், அவர் இதை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார்.

கணவர் மனநிலை பாதிக்கப்பட்டவர், உடல்நலம் பாதிக்கப்பட்டவர் என்பதை மறைத்தே இந்த திருமணம் நடந்துள்ளது. இதனால் ஜெயமலா மிகுந்த வேதனையில் இருந்த போது, அவருடைய 74 வயது மாமனார், பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதை எல்லாம் கூறி, ஜெயமால் அவர் வீட்டில் அழுதுள்ளார். அதன் பின்னரே அவர் குடும்பத்தை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். முதலில் சொத்து பிரச்சனைக்காக நடந்தது என்று கூறப்பட்ட நிலையில், தற்போது பாலியல் தொல்லையும் ஒரு காரணம் என்பது தெரியவந்தது.

பொலிசாரிடம் கடந்த ஒருவாரமாக சிக்காமல் இருந்த ஜெயமலா, வேறு மாநிலத்திற்கு தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்பட்டது.

இதையடுத்து பொலிசாருக்கு ஜெயமாலா உட்பட 3 பேர் டெல்லியில் உள்ள ஆக்ரா ரோட்டில் நடந்து கொண்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

அதன் பின் பொலிசார் அங்கு சென்றவுடன் ஜெயமலா தப்பி ஓட முயற்சிக்க, பொலிசார் ஜெயமலா உடன் இருந்த விலாஷ், ராஜி ஷிண்டே என மூன்று பேரையும் கைது செய்தனர்.

அவர்கள் விரைவில் தமிழகம் கொண்டுவரப்படுவார்கள் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.

4 ஆண்களை வைத்து பெண் செய்த காரியம்.., மாட்டிக்கொண்டதால் வெளியான உண்மை

Quick Share

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கணேஷ் நகரை சேர்ந்தவர் ஜெயகிருபா. இவரது வீட்டில் கடந்த 10-ம் தேதி அன்று திருமண அழைப்பிதழ் கொடுப்பது போல் 4 பேர் வந்துள்ளனர். வீட்டில் தனியாக இருந்த ஜெபகிருபாவிடம் கத்தியை காட்டி மிரட்டி, கை, கால்களை கட்டிப்போட்ட அந்த கும்பல் கழுத்தில் அணிந்திருந்த நகைகள் மற்றும் பீரோவில் இருந்த நகைகள் என மொத்தம் 35 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

பாதிக்கப்பட்டவர் போலீசார் வழக்கு பதிவு செய்து, அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி
விசாரணையை தொடங்கினர். அதில் நேரு நகர் பகுதியை சேர்ந்த கணேஷ்குமார் என்பவர் கொள்ளை நடந்த இடத்தை சுற்றி சந்தேகப்படும்படியாக சுற்றிதிரிந்ததைக் கண்டுபிடித்தனர்.

விசாரணையில் அவர் மூலமாக அருண்பாண்டியன் என்ற இளைஞனை கைது செய்தனர். விசாரித்த போது இந்த
கொள்ளைச்சம்பவத்துக்கு தலைவராக ஒரு பெண் ஒருவர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஜெயகிருபாவின் வீட்டின் அருகே வசிக்கும் அவரது தோழியான முத்துச்செல்வி என்பவர் இந்த கொள்ளை சம்பவத்திற்கு மூலையாய் செயல்பட்டது வெட்ட வெளிச்சத்திற்கு வந்தது.

பணத்தேவையால் முத்துச்செல்வி தவித்துக் கொண்டிருந்தபோது, தான் அடகு வைத்த நகைகளை மீட்டு வந்ததை ஜெயகிருபா அவரிடம் பெருமையாக கூறியுள்ளார். இதனையடுத்து அந்த நகைகளை எப்படியாவது கொள்ளையடித்து சமாளிக்கலாம் முத்துலட்சுமிக்கு யோசனை வந்துள்ளது. உடனே 4 நண்பர்களான அருண்பாண்டியன், கணேஷ்குமார், சோலைச்சாமி ஹரிஹரன் ஆகியோரை கொள்ளைத் திட்டத்திற்கு பயன்படுத்தி உள்ளார்.

முத்துச்செல்வியையும் 4 இளைஞர்களையும் காவல் துறையினர் கைது செய்தனர். கொள்ளையடித்த நகைகளையும், கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்திய ஒரு காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.




You cannot copy content of this Website