கிரைம்

தொகுப்பாளரை கடத்தி சித்ரவதை செய்த பெண் தொழிலதிபர்!

Quick Share

தொலைக்காட்சி தொகுப்பாளர் பிரணவ் சிஸ்ட்லா என்ற இளைஞரை Hyderabad பெண் தொழிலதிபர் போகிரெட்டி திரிஷ்னா கடத்தி சித்திரவதை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 31 வயதான பெண் தொழிலதிபர் போகிரெட்டி திரிஷ்னா-வுக்கு(businesswoman Trisha Bhogireddy) திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டு இருந்த நிலையில், போகிரெட்டி திரிஷ்னா திருமண வரண் பார்க்கும் இணைய தளமான மேட்ரிமோனியல்(matrimonial website) பிரணவ் சிஸ்ட்லா என்ற இளைஞரின் புகைப்படத்தை பார்த்துள்ளார்.

அந்த இணையதளத்தில் இருந்த தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளரான பிரணவ் சிஸ்ட்லாவின்(TV Anchor Pranav Sistla) தொலைபேசி எண்ணை எடுத்து போகிரெட்டி திரிஷ்னா பேசி பழகி வந்துள்ளார்.

இதற்கிடையில் தொழில் முதலீட்டிற்காக போகிரெட்டி திரிஷ்னா 40 லட்சம் ரூபாயை பிரணவ் சிஸ்ட்லாவுக்கு வழங்கியுள்ளார்.

இதையடுத்து அந்த நம்பரை தொடர்பு கொள்ள முடியாததால் சந்தேகமடைந்த பெண் தொழிலதிபர் போகிரெட்டி திரிஷ்னா விசாரித்து பார்த்ததில், பிரணவ் பெயரில் மோசடி செய்தது சைத்தன்யா ரெட்டி என்பது தெரியவந்தது.

உடனே உண்மையான பிரணவ் சிஸ்ட்லாவை தொடர்பு கொண்டு நடந்த விஷயத்தை தெரிவித்து தொழிலதிபர் போகிரெட்டி திரிஷ்னா எச்சரித்துள்ளார், மேலும் தனது காதலையும் திருமண விருப்பத்தையும் தெரிவித்துள்ளார்.

ஆனால், பிரணவ் சிஸ்ட்லா தொழிலதிபர் போகிரெட்டி திரிஷ்னாவின் காதலையும், திருமண விருப்பத்தையும் ஏற்கவில்லை.

இதனால், ஆத்திரமடைந்த பெண் தொழிலதிபர் போகிரெட்டி திரிஷ்னா, தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளரான பிரணவ் சிஸ்ட்லாவின் காரில் காரில் ஏர்டேக் என்ற ட்ராக்கிங் சாதனத்தை பொருத்தி சில நாட்களாக அவரை கண்காணித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 10ம் திகதி தனது நிறுவன ஊழியர்களை கொண்டு பிரணவ் சிஸ்ட்லா கடத்தி போகிரெட்டி திரிஷ்னா சித்ரவதை செய்துள்ளார்.

இதையடுத்து அவரிடம் இருந்து தப்பிப்பதற்காக பெண் தொழிலதிபருடன் உறவில் இருப்பதாக சொல்லிவிட்டு அங்கிருந்து தப்பி வந்து பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளார்.

பிரணவ் சிஸ்ட்லா அளித்த புகாரின் பெயரில் போகிரெட்டி திரிஷ்னா மற்றும் கடத்தலில் ஈடுபட்ட நபர்களை கைது செய்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடத்தையில் சந்தேகம்: மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்!

Quick Share

சென்னை அடுத்த கொரட்டூர் சிவலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (42). இவருக்கு சியமளாதேவி (36) என்ற பெண்ணுடன் திருமணம் ஆகி 14 மற்றும் 9 வயது என இரண்டு மகன்கள் உள்ளனர். சுரேஷ் அந்தப் பகுதியில் மளிகை கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் அவரது மளிகை கடையில் போதிய வருமானம் கிடைக்காத காரணத்தினாலும், நிதி பற்றாக்குறை காரணத்தினாலும் அந்த கடையை மூடும் நிலைமைக்கு சுரேஷை தள்ளியது. அதனால் அவர், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தான் நடத்தி வந்த மளிகை கடையை நிரந்தரமாக மூடியுள்ளார்.

இதனையடுத்து, குடும்ப செலவுகளுக்காக சுரேஷின் மனைவி சியாமளாதேவி, தனது வீட்டின் அருகே உள்ள இ – சேவை மையத்தில் கடந்த 10 நாட்களாக வேலை பார்த்து வந்துள்ளார். இதனிடையே, சியாமளாதேவியின் நடத்தையில் சுரேஷ் சந்தேகம் அடைந்துள்ளார். இந்த சந்தேகத்தின் அடிப்படையில் சுரேஷ், தனது மனைவி சியாமளா தேவியிடம் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் வழக்கம்போல், சுரேஷுக்கும் அவருக்கு மனைவி சியாமளாதேவிக்கும் இந்த விவகாரம் தொடர்பாக நேற்று (08-02-24) வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இவர்களுக்குள் ஏற்பட்ட இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் தகராறாக முற்றியது. இதில், ஆத்திரமடைந்த சுரேஷ் தனது மனைவி சியாமளாதேவியை படுக்கை அறைக்கு அழைத்துச் சென்று அங்கிருந்த கத்தியை எடுத்து அவரை சரமாரியாக குத்தியுள்ளார். இதில், படுகாயமடைந்த சியாமளாதேவி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதன் பிறகு சுரேஷ், சியாமளாதேவியின் உடலை வீட்டிலேயே விட்டுவிட்டு வீட்டை வெளியே பூட்டி தப்பித்து ஓடி உள்ளார். இதனையடுத்து, இந்த வீட்டின் மற்றொரு அறையில் உறங்கிக் கொண்டிருந்த அவர்களது இரு மகன்களும் தனது தாய் உயிரிழந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து வீட்டின் உள்புறத்தை வேகமாகத் தட்டி உள்ளனர்.

இவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வீட்டை உடைத்து பார்த்துள்ளனர். அப்போது சியாமளாதேவி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்துள்ளார். உடனடியாக, இந்த சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர் கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உயிரிழந்த சியாமளா தேவியின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும், தலைமறைவான சுரேஷை போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். இதையடுத்து, சுரேஷின் உறவினர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், தலைமறைவாகயிருந்த சுரேஷை, போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கணவருடன் வாக்குவாதம்: 2 சிறுவர்களுடன் ஒரே அறையில் உறவுகொண்ட 38 வயது பெண் கைது!

Quick Share

அமெரிக்காவில் திருமணமான பெண்ணொருவர் இரு சிறுவர்களுடன் உறவுகொண்டதாக கைது செய்யப்பட்டார். Minnesota மாகாணத்தில் கடந்த ஜனவரி 14ஆம் திகதி, Allison Schardin (38) என்ற பெண் ஹொட்டல் ஒன்றில் தனது கணவருடன் தங்கியிருந்துள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் Schardin கோபத்தில் அறையில் இருந்து வெளியேறியுள்ளார்.

அதே ஹொட்டலில் தங்கியிருந்த இரண்டு சிறுவர்களை சந்தித்த அவர் தன்னைப் பற்றியும், கணவரிடம் சண்டையிட்டது குறித்தும் அவர்களிடம் புலம்பியுள்ளார்.

அத்துடன் சிறுவர்களிடம் பாலியல் தொடர்பாகவும் பேசியுள்ளார். அதன் பின்னர் அங்கிருந்து சென்ற Schardin, சிறுவர்களுக்கு குறுந்தகவல் அனுப்பியுள்ளார்.

அதில் கணவருடன் சண்டையிட்டதால் உங்கள் அறையில் தங்கிக் கொள்ளலாமா எனக் கேட்டுவிட்டு அவர்கள் தங்கியிருந்த அறைக்கு சென்றுள்ளார்.

பின்னர் அவர்களிடம் உரையாடிய Schardin, இருவருடனும் உறவு கொண்டுள்ளார். ஆனால் தாங்கள் வற்புறுத்தப்பட்டதாக சிறுவர்கள் புகார் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து பொலிஸார் Schardin-ஐ கைது செய்தனர். விசாரணையில் சிறுவர்களுடன் உறவு வைத்துக் கொண்டதை அவர் ஒப்புக்கொண்டார்.

இந்த நிலையில் Schardin நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். அவரது வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.

விடுமுறைக்கு வந்த சிறுமியை தவறான பாதைக்கு உட்படுத்திய அத்தை!

Quick Share

சென்னையில் சிறுமியை மிரட்டி பாலியல் தொழிலுக்கு உட்படுத்திய சிறுமியின் அத்தை உள்ளிட்ட மூன்று பெண்களை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அவருக்கு மருத்துவர்கள் செய்த சோதனைகளின் அடிப்படையில் அச்சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதும், சிறுமி கர்ப்பமாக இருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து கோயம்பேடு காவல் நிலையத்திற்கு மருத்துவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் சம்பந்தப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கடந்தாண்டு காலாண்டு தேர்வு விடுமுறையில் அத்தை வீட்டிற்கு வந்திருந்த சிறுமியை அத்தை மற்றும் மூன்று பெண்கள் சேர்ந்து பாலியல் தொழிலுக்கு உட்படுத்தியுள்ளனர். அதனைத் தொடர்ந்து சிறுமி கர்ப்பம் ஆனது தெரியவந்தது. இந்த கொடூர சம்பவத்தை தொடர்ந்து சிறுமியை பாலியல் தொழிலுக்கு உட்படுத்திய சிறுமியின் அத்தை மற்றும் மூன்று பெண்களை கோயம்பேடு காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

பெண்களை ஆபாசமாக படம் பிடித்த ராணுவ வீரர்: செல்போனை பார்த்து அதிர்ந்துபோன போலீசார்!

Quick Share

திருச்சியில் பெண்களை ஆபாசமாகப் படம் பிடித்து செல்போனில் வைத்திருந்ததாக ராணுவ வீரர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். திருச்சி லால்குடி பகுதியைச் சேர்ந்தவர் ஜெய பாலாஜி. இவர் குஜராத் மாநிலம் மீரட் நகரில் ராணுவ வீரராகப் பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு ஜெய பாலாஜி வந்திருந்த நிலையில், பெண்கள் சிலரை ஆபாசமாகப் படம் எடுத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து போலீசாருக்கு சிலர் புகார் அளித்திருந்தனர்.

அந்த புகாரின் அடிப்படையில் ராணுவ வீரர் ஜெய பாலாஜியை பிடித்த போலீசார் அவருடைய செல்போனை வாங்கிப் பார்த்தனர். அதில் பல பெண்களின் ஆபாசப் படங்கள் இருந்தது போலீஸாருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது. கைது செய்யப்பட்ட அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ராணுவ வீரர் ஜெய பாலாஜியின் மனைவி சென்னையில் காவல்துறையில் பணிபுரிகிறார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

விடுமுறைக்கு வந்த சிறுமியை தவறான பாதைக்கு உட்படுத்திய அத்தை!

Quick Share

சென்னையில் சிறுமியை மிரட்டி பாலியல் தொழிலுக்கு உட்படுத்திய சிறுமியின் அத்தை உள்ளிட்ட மூன்று பெண்களை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அவருக்கு மருத்துவர்கள் செய்த சோதனைகளின் அடிப்படையில் அச்சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதும், சிறுமி கர்ப்பமாக இருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து கோயம்பேடு காவல் நிலையத்திற்கு மருத்துவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் சம்பந்தப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கடந்தாண்டு காலாண்டு தேர்வு விடுமுறையில் அத்தை வீட்டிற்கு வந்திருந்த சிறுமியை அத்தை மற்றும் மூன்று பெண்கள் சேர்ந்து பாலியல் தொழிலுக்கு உட்படுத்தியுள்ளனர். அதனைத் தொடர்ந்து சிறுமி கர்ப்பம் ஆனது தெரியவந்தது. இந்த கொடூர சம்பவத்தை தொடர்ந்து சிறுமியை பாலியல் தொழிலுக்கு உட்படுத்திய சிறுமியின் அத்தை மற்றும் மூன்று பெண்களை கோயம்பேடு காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

தந்தையின் தலையை வெட்டி சமூக ஊடகத்தில் காணொளியாக வெளியிட்ட கொடூரன்!

Quick Share

அமெரிக்காவில் நபர் ஒருவர் சொந்த தந்தையின் தலையை வெட்டி சமூக ஊடகத்தில் காணொளியாக வெளியிட்டுள்ளதுடன் அரசியல் பேசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்புடைய நபரை கைது செய்துள்ளதுடன், அந்த காணொளியும் இணையத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. 32 வயதான ஜஸ்டின் மோன் பென்சில்வேனியாவில் அவரது 68 வயது தந்தை மைக்கேல் மோனை கொலை செய்த சில மணிநேரங்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டார்.

அவர் மீது முதல் நிலை கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளது. சம்பவத்தின் போது ஜஸ்டின் மோனின் தாயாரே 911 இலக்கத்திற்கு தொடர்புகொண்டு உதவி கோரியுள்ளார்.

தமது கணவரின் துண்டிக்கப்பட்ட தலை குடியிருப்பில் காணப்படுவதாக அவர் பொலிசாரிடம் குறிப்பிட்டுள்ளார். மதியம் 2 மணி வரையில் தாம் அந்த குடியிருப்பில் இருந்ததாகவும், அதன் பின்னர் வெளியே சென்றுவிட்டு திரும்பிய நிலையில் இந்த கோர சம்பவம் கண்ணில் பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார், தலையற்ற நிலையில் சடலத்தை மீட்டுள்ளதுடன், வாள் மற்றும் சமையலறை கத்தி ஒன்றையும் கண்டெடுத்துள்ளனர்.

அத்துடன், 20 ஆண்டுகள் அரசாங்க ஊழியராக பணியாற்றிய தமது தந்தை ஒரு தேசதுரோகி என்றும், அமெரிக்கா மிக மோசமாக சீரழிந்துள்ளதாகவும் காணொளியில் பதிவு செய்துள்ளார்.

ஜனாதிபதி ஜோ பைடன் உள்ளிட்டவர்களை கடுமையாக விமர்சித்துள்ள அவர், பெடரல் தொழிலாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பெடரல் சட்ட அமலாக்கத் துறையினரைத் தாக்க அமெரிக்கர்களை அவர் வலியுறுத்தியுள்ளார்.

விடுதி அறையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த இளம்பெண்.

Quick Share

இந்திய மாநிலம் மஹாராஷ்டிராவில் இளம்பெண்ணொருவர் தனது காதலரால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. புனே மாவட்டம் பிம்ப்ரி சிஞ்சவாத் நகரில் உள்ள ஹொட்டல் ஒன்றுக்கு, கடந்த 25ஆம் திகதி ரிஷாப் நிகாம், வந்தனா திவிவேதி என்ற ஜோடி அறை எடுத்து தங்கியுள்ளது.

இரண்டு நாட்களாக பல்வேறு இடங்களை அந்த ஜோடி பகலில் சுற்றிவிட்டு அறைக்கு திரும்பியுள்ளது. சனிக்கிழமை இரவு 10 மணியளவில், வந்தனாவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு நிகாம் அங்கிருந்து தப்பியுள்ளார்.இதனையடுத்து தனது அறையில் சடலமாக வந்தனா கிடந்தது குறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவரின் சடலத்தைக் கைப்பற்றிய பொலிஸார், CCTV காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.அப்போது நிகாம் வெளியேறிய காட்சிகள் தெரிய வந்துள்ளது. அதன் பின்னர் தப்பியோடிய அவரை பொலிஸார் கைது செய்து, அவரிடம் இருந்து துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். முதற்கட்ட விசாரணையில், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த நிகாம் தனது காதலி வந்தனாவின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்துள்ளார்.இதனால் அவரை கொலை திட்டமிட்டு துப்பாக்கியுடன் அறைக்கு சென்றுள்ளார் என தெரிய வந்துள்ளது. மேலும், IT ஊழியரான வந்தனா திவிவேதி 10 ஆண்டுகளாக நிகாமை காதலித்து வந்துள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளது.

தனது சுயநலத்துக்காக மற்றொரு பெண்ணை கொலை செய்த இளம்பெண்!

Quick Share

தான் புது வாழ்வைத் துவக்குவதற்காக மற்றொரு பெண்ணைக் கொலை செய்த இளம்பெண், தான் கொலை செய்த பெண்ணின் மேலாடையை அணிந்துகொண்டு, அவரது கைப்பையையும் சுமந்து செல்லும்போது பொலிசாரிடம் சிக்கினார். 2022ஆம் ஆண்டு, ஆகத்து மாதம், தெற்கு ஜேர்மனியில் கார் ஒன்றில் அழகிய இளம்பெண் ஒருவரின் உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அது ஷாராபான் (Sharaban K, 23) என்னும் பெண்ணுடைய உடல் என அவரது பெற்றோரால் அடையாளம் காட்டப்பட்டது.

Ingolstadt என்ற இடத்தில், மெர்சிடிஸ் காரில் கண்டுபிடிக்கப்பட்ட ஷாராபான் என்னும் அந்தப் பெண் ஈராக் நாட்டவர் ஆவார். அவர் ஜேர்மனியின் Munich நகரில் வாழ்ந்துவந்தார்.

திகைத்துப்போயிருக்க, உடற்கூறு ஆய்வு சில அதிர்ச்சியளிக்கும் இரகசியங்களை வெளிப்படுத்தியது. இறந்த பெண்ணின் உடலில் குத்தப்பட்டிருந்த டாட்டூக்கள் சந்தேகத்தை உருவாக்கின.

கடைசியில், அந்த உடல் ஷாராபானுடையதே அல்ல. அது, கதீஜா (Khadidja O, 23) என்னும் அழகுக்கலை நிபுணருடைய உடல் என்பது தெரியவந்தது. அல்ஜீரியா நாட்டு இளம்பெண்ணான கதீஜா, ஜேர்மனியிலுள்ள Heilbronn என்ற இடத்தில் வாழ்ந்துவந்துள்ளார்.

பொலிசாரின் தீவிர விசாரணையில், கொல்லப்பட்டது கதீஜா என்னும் பெண் என்றும், ஷாராபான் உயிருடன் இருக்கிறார், கதீஜாவைக் கொன்றதே ஷாராபான்தான் என்பதும் தெரியவந்ததால் கடும் அதிர்ச்சி ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து, பவேரிய பொலிசாரால் Sheqir K (23) என்பவரும், ஷாராபானும் கைது செய்யப்பட்டார்கள். தொடர் விசாரணையில், கட்டுப்பாடான தனது ஈராக்கிய குடும்பத்தைவிட்டு தப்பித் தலைமறைவாக விரும்பிய ஷாராபான், தன்னைப் போலவே காணப்படும் வேறொரு இளம்பெண்ணைக் கொலை செய்துவிட்டு தன் காதலனான Sheqirஉடன் தலைமறைவாகிவிட திட்டமிட்டது தெரியவந்தது.

ஷாராபான் கைது செய்யப்படும்போது, அவர் தான் கொலை செய்த கதீஜாவின் மேலாடையை அணிந்துகொண்டிருந்ததுடன், கதீஜாவின் கைப்பையையும் சுமந்துகொண்டு, தன்னை கதீஜா போல் காட்டிக்கொள்ள முயன்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்த இளைஞருக்கு நேர்ந்த கதி!

Quick Share

ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவில் எலி இறந்து கிடந்ததால் ஆடவர் ஒருவர் 75 மணி நேரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியை சேர்ந்த ராஜீவ் சுக்லா என்ற நபர் கடந்த 8ம் திகதி மும்பை வந்துள்ளார். ராஜீவ் சுக்லா அன்றிரவு உணவிற்காக ஆன்லைன் மூலம் உணவகம் ஒன்றில் சைவ உணவை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார்.

ஆனால் சாப்பாட்டில் சுவை வித்தியாசமாக இருப்பதை உணர்ந்த ராஜீவ் சுக்லா பார்சலில் வந்த உணவை பரிசோதித்து பார்த்துள்ளார், அப்போது அதில் இறந்த எலி ஒன்று கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

அத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜீவ் சுக்லா, கிட்டத்தட்ட 75 மணி நேரம் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றுள்ளார்.

இதனை தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக ராஜீவ் சுக்லா மும்பை நாக்பாடா காவல் நிலையத்தில் புகார் வழங்கியும் நடவடிக்கை எடுக்கப்படாததால், பாதிக்கப்பட்ட ராஜீவ் சுக்லா தன்னுடைய X தளத்தில் எலி இறந்து கிடந்த உணவு மற்றும் மருத்துவமனை கட்டண ரசீது ஆகியவற்றை பகிர்ந்து நீதி கேட்டுள்ளார்.

இந்த சம்பவம் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட (Barbeque Nation) உணவகம் ராஜீவ் சுக்லாவின் பதிவுக்கு பதிலளித்து பேசியுள்ளது.

அதில் வணக்கம் ராஜீவ் சுக்லா, நீங்கள் அடைந்த சிரமத்திற்கு வருந்துகிறோம், மும்பை அலுவலகத்தின் ஊழியர் பரேஷ், உங்களை தீர்வை நோக்கி அழைத்து செல்ல தொடர்பில் இருப்பார். உங்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளது.

மகளின் குழந்தையை கடத்தி ரூ.2 லட்சத்திற்கு விற்ற பாட்டி!

Quick Share

மகளின் ஆண் குழந்தையைக் கடத்தி 2 லட்ச ரூபாய்க்கு விற்ற மூதாட்டி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், கிரேட்டர் நொய்டாவில் ஷாபெரி பகுதியைச் சேர்ந்தவர் ஷிவாங்கி. இவர் கடந்த மே மாதம் தனது தாய் மீது பொலிசில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.

அந்த புகாரில் அவர், “என் ஆண் குழந்தையை கவனித்துக் கொள்வதற்காக என் தாய் எங்களுடைய வீட்டிற்கு வந்திருந்தார். இந்நிலயில், மே மாதம் 10 -ம் திகதி நானும், என் கணவரும் மருத்துவமனைக்குச் சென்றிருந்தோம். பின்னர், வீட்டிற்கு வந்து பார்த்த போது, எனது தாயும் குழந்தையும் காணவில்லை” என்று கூறியிருந்தார்.

பின்னர், இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பொலிசார் ஷிவாங்கியின் தாய் பபிதாவைக் கைது செய்து விசாரணை நடத்தினர். அபோது, குழந்தையை ஹாபூரில் உள்ள ஜமுனா என்ற பெண்ணின் உதவியுடன் ரூ.2 லட்சத்திற்கு விற்றதாக அவர் ஒப்புக் கொண்டார்.

இதனையடுத்து, தலைமறைவாக இருந்த ஜமுனாவை கைது செய்த பொலிசார் நடத்திய விசாரணையில், குழந்தை ஹாபூரைச் சேர்ந்த மருத்துவர் தீபக் தியாகியிடம் ஒப்படைக்கப்பட்டது தெரியவந்தது. அப்போது, தீபக்கை பிடித்து விசாரித்த போது அமர்வீர் என்ற நபருக்கு 2 லட்ச ரூபாய்க்கு விற்றதாக அவர் ஒப்புக்கொண்டார்.

இதன் பின்னர், எட்டு மாதங்களுக்கு பின்பு குழந்தை மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பொலிசார் கூறுகையில், “ஜமுனாவும், பபிதாவும் தலா ரூ. 50,000 பெற்றுள்ளனர். மருத்துவர் தீபக் தியாகி ரூ. 1 லட்சம் பெற்றுள்ளார்” என்றனர்.

இதனிடையே, கடவுள் என் பிரார்த்தனைகளைக் கேட்டு, என் குழந்தையைப் பாதுகாப்பாக மீட்டுக் கொடுத்துள்ளார் என ஷிவாங்கி கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

மகளின் குழந்தையை கடத்தி ரூ.2 லட்சத்திற்கு விற்ற பாட்டி!

Quick Share

மகளின் ஆண் குழந்தையைக் கடத்தி 2 லட்ச ரூபாய்க்கு விற்ற மூதாட்டி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், கிரேட்டர் நொய்டாவில் ஷாபெரி பகுதியைச் சேர்ந்தவர் ஷிவாங்கி. இவர் கடந்த மே மாதம் தனது தாய் மீது பொலிசில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.

அந்த புகாரில் அவர், “என் ஆண் குழந்தையை கவனித்துக் கொள்வதற்காக என் தாய் எங்களுடைய வீட்டிற்கு வந்திருந்தார். இந்நிலயில், மே மாதம் 10 -ம் திகதி நானும், என் கணவரும் மருத்துவமனைக்குச் சென்றிருந்தோம். பின்னர், வீட்டிற்கு வந்து பார்த்த போது, எனது தாயும் குழந்தையும் காணவில்லை” என்று கூறியிருந்தார்.

பின்னர், இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பொலிசார் ஷிவாங்கியின் தாய் பபிதாவைக் கைது செய்து விசாரணை நடத்தினர். அபோது, குழந்தையை ஹாபூரில் உள்ள ஜமுனா என்ற பெண்ணின் உதவியுடன் ரூ.2 லட்சத்திற்கு விற்றதாக அவர் ஒப்புக் கொண்டார்.

இதனையடுத்து, தலைமறைவாக இருந்த ஜமுனாவை கைது செய்த பொலிசார் நடத்திய விசாரணையில், குழந்தை ஹாபூரைச் சேர்ந்த மருத்துவர் தீபக் தியாகியிடம் ஒப்படைக்கப்பட்டது தெரியவந்தது. அப்போது, தீபக்கை பிடித்து விசாரித்த போது அமர்வீர் என்ற நபருக்கு 2 லட்ச ரூபாய்க்கு விற்றதாக அவர் ஒப்புக்கொண்டார்.

இதன் பின்னர், எட்டு மாதங்களுக்கு பின்பு குழந்தை மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பொலிசார் கூறுகையில், “ஜமுனாவும், பபிதாவும் தலா ரூ. 50,000 பெற்றுள்ளனர். மருத்துவர் தீபக் தியாகி ரூ. 1 லட்சம் பெற்றுள்ளார்” என்றனர்.

இதனிடையே, கடவுள் என் பிரார்த்தனைகளைக் கேட்டு, என் குழந்தையைப் பாதுகாப்பாக மீட்டுக் கொடுத்துள்ளார் என ஷிவாங்கி கண்ணீர் மல்க கூறியுள்ளார்.




You cannot copy content of this Website