கிரைம்

‘தாங்கிக் கொள்ள முடியவில்லை’ – 4 வயது மகனை கொன்ற கொடூரத் தாயின் கடிதம்!

Quick Share

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் சுசானா சேத் (39). இவர் கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு வெங்கட்ராமன் என்பவருடன் திருமணமாகி 4 வயதில் ஒரு மகன் இருந்தான். தம்பதி இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில், கடந்த 6 ஆம் தேதி சுசானா சேத் தனது மகனுடன் கோவாவில் உள்ள பிரபலமான ஒரு தனியார் ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளார். இதனையடுத்து, அவர் கடந்த 8 ஆம் தேதி காலை ஓட்டல் அறையை காலி செய்துவிட்டு வாடகை கார் மூலம் பெங்களூருக்குச் சென்றுள்ளார். அதன் பின்னர், சுசானா சேத் இருந்த அறையை சுத்தம் செய்ய பராமரிப்பு ஊழியர் அறைக்கு வந்துள்ளார். அப்போது அங்கு, ரத்தக் கறைகள் படிந்த ஆடைகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், இந்த சம்பவம் குறித்து ஓட்டல் நிர்வாகத்திற்குத் தகவல் கொடுத்தார். 

இதில் சந்தேகமடைந்த ஓட்டல் நிர்வாகம், இந்த சம்பவம் குறித்து போலீஸ் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து ஓட்டலில் பதிவாகியிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார், சுசானா சேத் பயணித்த வாடகை கார் ஓட்டுநரிடம் தொடர்புகொண்டு அருகே உள்ள போலீஸ் நிலையத்திற்கு காரை கொண்டு வருமாறு போலீசார் கூறியுள்ளனர். அதன்படி, கார் ஓட்டுநர் ஓட்டி வந்த காரை ஜமங்கலா போலீசார் சோதனை நடத்தினர். அப்போது காரில் இருந்த சூட்கேசில் சுசானா சேத்தின் 4 வயது மகன் பிணமாகக் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சுசானா சேத் தனது மகனைக் கொன்று உடலை சூட்கேசில் அடைத்து காரில் எடுத்துச் சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் சுசானா சேத் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

அந்த விசாரணையில், சுசானா சேத்துக்கும் அவரது கணவரான வெங்கட்ராமனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அவர்கள் இருவரும் விவாகரத்து வழங்கக் கோரி பெங்களூர் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு விசாரணையில், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று வெங்கட்ராமன், தனது மகனிடம் பேச அனுமதி அளித்து இருந்தது. அதன்படி, கடந்த 7 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வெங்கட்ராமன் தனது மகனிடம் பேச, சுசானா சேத்தின் செல்போனுக்கு வீடியோ காலில் அழைத்து பேசிய போது மகனிடம் போனை கொடுக்காமல் மறுத்துள்ளார். 

அப்போது, அவரது மகன் தனது தந்தையிடம் பேச வேண்டும் என்று கூறி அடம்பிடித்து அழுது கொண்டிருந்துள்ளான். இந்த நிலையில், கணவர் மீது இருந்த அதிருப்தியிலும், மகன் அவரிடம் பேச வேண்டும் என்று அடம் பிடித்ததாலும் கோபத்தின் உச்சியில் இருந்த சுசானா சேத், தனது மகனைக் கொல்ல திட்டமிட்டு தனது மகனுக்கு அளவுக்கு அதிகமாக இருமல் மருந்து கொடுத்து, அவன் மயங்கியதும் மூச்சைத் திணறடித்து கொலை செய்திருக்கிறார் என்று தெரியவந்தது.

இந்த நிலையில், தனது மகனை கொலை செய்துவிட்டு சுசானா சேத் தன் கண் மையால் எழுதியிருந்த கடித்ததை போலீசார் மீட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுசானா சேத் எழுதிய அந்த கடிதத்தில், ‘நீதிமன்றமும், ஒரு பக்கம் எனது கணவரும், மகனை தான் வைத்துக்கொள்ள முடியாமல் அழுத்தம் கொடுக்கின்றனர். இனிமேலும், இதனை தாங்கிக்கொள்ள முடியவில்லை. என் முன்னாள் கணவர் ஒரு வன்முறையாளர். தவறான பழக்கங்களை என் மகனுக்கு கற்பித்தார். ஒரு நாள் கூட அவரிடம் மகனை விடுவதற்கு எனக்கு ஒப்புதல் இல்லை’ என்று எழுதியிருந்ததாக கூறப்படுகிறது.

மோசமான கவர்ச்சியில் நடிகை கேத்ரின் தெரசா!

Quick Share

நடிகை கேத்ரின் தெரசா மெட்ராஸ் படம் மூலமாக பிரபலம் ஆனவர். அவர் அதன் பிறகு ஏராளமான சின்ன ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து இருக்கிறார்.

பெற்ற மகளை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்த தந்தை கைது!

Quick Share

மராட்டிய மாநிலம் நவுகார்க் நகரில் 14 வயது சிறுமி தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். சில நாட்களூக்கு முன்பு அந்த சிறுமி வீட்டில் தனியாக இருந்திருக்கிறார். அந்த சமயத்தை பயன்படுத்திய தந்தை சிறுமியை அழைத்து தவறாக நடத்து கொள்ள முயன்று இருக்கிறார். ஆனால் சிறுமி அதற்கு மறுப்பு தெரிவித்தார். இதனையடுத்து சிறுமியை தந்தை அடித்து துன்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.

இச்சம்பவம் பற்றி யாரிடம் சொல்ல கூடாது என்று சிறுமியை மிரட்டியுள்ளார். சிறுமியும் இச்சம்பவம் பற்றி யாரிடமும் தெரிவிக்காமல் மறைத்திருக்கிறார். இதனையடுத்து சிறுமியின் தந்தை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.இந்நிலையில், தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அக்காவிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதை தொடர்ந்து சிறுமியின் அக்கா அருகில் உள்ள நவுகார்க் போலீஸ் நிலையத்திற்கு சிறுமியுடன் சென்று சம்பவம் பற்றி புகார் அளித்துள்ளார். சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமியின் தந்தையை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அரைகுறையாக ஆடை அணிந்த மனைவியை கழுத்தை அறுத்து கொன்ற காதல் கணவன்!

Quick Share

இந்திய மாநிலம் கர்நாடகாவில் அரைகுறையாக ஆடை அணிந்ததால், இளைஞர் ஒருவர் தனது காதல் மனைவியின் கழுத்தை அறுத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் ஹாசன் மாவட்டம் அரிசிகெரேவின் ராம்புரா கிராமத்தைச் சேர்ந்தவர் ஜீவன் (25). இவரும் ஜோதி (22) என்ற பெண்ணும் காதலித்து வந்ததைத் தொடர்ந்து, இருவரும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர்.

கணவன் – மனைவிக்குள் உடை விடயத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. ஜோதி மார்டன் உடைகளை அணிந்து வந்துள்ளார். ஆனால், அவர் அரைகுறையாக ஆடை அணிவதாக ஜீவன் அவருடன் சண்டையிட்டுள்ளார்.எனினும், ஜோதி அவரது பேச்சை கேட்காமல் மாடர்ன் உடைகளை அணிந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில், நேற்று முன் தினம் ஜோதி தனது கணவருக்கு பிடிக்காத வகையில் ஆடையணிந்து வெளியே கிளம்பியுள்ளார்.அதனை ஜீவன் கண்டித்தும் ஜோதி அதை பொருட்படுத்தவில்லை. அதன் பின்னர் ஜோதியை இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்வதாக கூறி ஜீவன் கூறி வெளியே கூட்டி சென்றுள்ளார்.அவர் வனப்பகுதிக்கு மனைவியை அழைத்துச் சென்று சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஜோதியின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து ஜோதியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்ததுடன் தப்பியோடிய ஜீவனை தேடி வருகின்றனர்.

பெற்ற மகளை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்த தந்தை கைது!

Quick Share

மராட்டிய மாநிலம் நவுகார்க் நகரில் 14 வயது சிறுமி தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். சில நாட்களூக்கு முன்பு அந்த சிறுமி வீட்டில் தனியாக இருந்திருக்கிறார். அந்த சமயத்தை பயன்படுத்திய தந்தை சிறுமியை அழைத்து தவறாக நடத்து கொள்ள முயன்று இருக்கிறார். ஆனால் சிறுமி அதற்கு மறுப்பு தெரிவித்தார். இதனையடுத்து சிறுமியை தந்தை அடித்து துன்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.

இச்சம்பவம் பற்றி யாரிடம் சொல்ல கூடாது என்று சிறுமியை மிரட்டியுள்ளார். சிறுமியும் இச்சம்பவம் பற்றி யாரிடமும் தெரிவிக்காமல் மறைத்திருக்கிறார். இதனையடுத்து சிறுமியின் தந்தை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.

இந்நிலையில், தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அக்காவிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதை தொடர்ந்து சிறுமியின் அக்கா அருகில் உள்ள நவுகார்க் போலீஸ் நிலையத்திற்கு சிறுமியுடன் சென்று சம்பவம் பற்றி புகார் அளித்துள்ளார். சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமியின் தந்தையை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிறிஸ்மஸ் பரிசுக்காக அக்காவை சுட்டுக்கொன்ற சிறுவர்கள்!

Quick Share

அமெரிக்காவில் கிறிஸ்மஸ் பரிசுகள் தொடர்பான பிரச்சினையால் தனது சகோதரியை சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டில் இரு பதின்ம வயது சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தனது 10 மாத குழந்தையுடன் இருந்த 23 வயது சகோதரியை 14 வயதான சகோதரர் நெஞ்சில் சுட்டுக் கொன்றிருப்பதாக புளோரிடா மாநில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து அந்த சகோதரரை 15 வயதான மூத்த சகோதரர் வயிற்றில் சுட்டுள்ளார்.

கிறிஸ்மஸ் பண்டிகையில் யாருக்கு அதிக பரிசுப் பொருள் கிடைத்திருக்கிறது என்ற விவாதத்தால் ஏற்பட்ட மோதலை அடுத்தே இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

இதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் 14 வயது சகோதரர் சிகிச்சை முடிந்து விடுவிக்கப்பட்ட பின்னர் தடுப்புக்காவலில் வைக்கப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்டிருக்கும் 15 வயது சகோதரர் மீது கொலை முயற்சியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கேரளாவை உலுக்கும் வரதட்சணை கொடுமை: பெண் தூக்கிட்டு தற்கொலை!

Quick Share

75 சவரன் நகை கொடுத்தும் கணவரின் குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணை கேட்டதால் பெண் ஒருவர் விபரீத முடிவு எடுத்துள்ளார். இந்திய மாநிலமான கேரளா, பத்தனம்திட்டா மாவட்டம் திருவல்லம் அருகே உள்ள வண்டித்தனம் பகுதியை சேர்ந்தவர் சஹானா ஷாஜி. இந்த பெண்ணிற்கும் கட்டக்கடா பகுதியை சேர்ந்த நவ்பல் என்ற இளைஞருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்து, 2 வயதில் குழந்தை உள்ளது.

இதில், சஹானா ஷாஜியின் குடும்பத்தினர் திருமணத்தின் போதே 75 சவரன் நகைகள் வரதட்சணையாக கொடுத்துள்ளனர். இந்நிலையில், கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர் நவ்பல்லும், மாமியார் சுமிதாவும் சஹானாவை துன்புறுத்தி வந்துள்ளனர்.

இதனையடுத்து, கணவர் மற்றும் மாமியாரின் டார்ச்சரால் சஹானா தனது தாயார் வீட்டிற்கு குழந்தையுடன் வந்துள்ளார். இந்நிலையில், மனைவி சஹானாவை சந்திக்க கணவர் நவ்பல் வண்டித்தனத்திற்கு வந்துள்ளார்.

அவர், தனது சகோதரரின் குழந்தைக்கு பிறந்தநாள் என்பதால் அதில் கலந்து கொள்ள மனைவியை அழைக்க வந்துள்ளார். ஆனால்,மனைவி சஹானா வரமுடியாது என்றதால் அவரை தாக்கிவிட்டு குழந்தையை தூக்கிவிட்டு கணவர் சென்றுள்ளார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த சஹானா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அறிந்த பொலிஸார் விரைந்து வந்து சஹானாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னாள் காதலனை பழிவாங்க இளம்பெண் செய்த செயல்!

Quick Share

இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில் முன்னாள் காதலனை பழி வாங்க, இளம்பெண்ணொருவர் கஞ்சா வழக்கில் சிக்க வைத்ததால் கைது செய்யப்பட்டார். தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் சட்டம் படித்து வருபவர் ஷ்ரவன். இவருக்கு முன்னாள் காதலியான ரிங்கி திடீரென போன் செய்து நேரில் சந்திக்க அழைத்துள்ளார்.

ஒரே கல்லூரியில் படிக்கும் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக 6 மாதங்களுக்கு முன்பே பிரிந்த நிலையில், ”உன்னிடம் சிறிது நேரம் மனம் விட்டு பேச வேண்டும் வா” எனக் கூறியதால் ஷ்ரவன் நம்பி அவர் கூறிய பார்க்கிங் பகுதிக்கு சென்றுள்ளார்.

அங்கு ரிங்கி அவரை சந்தித்து பேசிக் கொண்டிருந்தார். அச்சமயம் ரிங்கியின் நண்பர்கள் ஐவர் ஷ்ரவன் வந்த காரில் 40 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலத்தை போட்டுவிட்டு ஓடியுள்ளனர்.

பின்னர் அவர்கள் பொலிஸாருக்கு தகவல் அளித்ததன் பேரில் ஷ்ரவனின் காரை சோதனை செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மேலும், ஷ்ரவனை கைது செய்து விசாரணை நடத்தினர். அவர் ரிங்கி தன்னை போன் செய்து அழைத்தது முதல் காதல் விவகாரம் வரை விவரமாக கூறியுள்ளார்.

அதன் அடிப்படையில் ரிங்கியை பிடித்து விசாரித்தபோது முன்னாள் காதலனை பழி வாங்க கஞ்சா கடத்தல் பழியை சுமத்தியதாக ஒப்புக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து ரிங்கி மற்றும் அவரது ஐந்து நண்பர்களையும் பொலிஸார் கைது செய்தனர்.

வரதட்சணை கொடுக்காததால் மனைவியின் மூக்கை கடித்த கணவர்!

Quick Share

வரதட்சணை கொடுக்காததால் மனைவியின் மூக்கை, கணவர் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலமான உத்தரபிரதேசத்தில் உள்ள மகேஷ்பூர் பகுதியில் வரதட்சணை கொடுமையால் மனைவியின் மூக்கை கடித்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மகேஷ்பூரைச் சேர்ந்த அஜ்மி (22) என்பவர் தனது கணவர் குடும்பத்தில் உள்ள 6 பேர் மீது கசிபி கஞ்ச் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் அவர், வரதட்சணை கேட்டு தன்னை துன்புறுத்தியதாகவும், கணவர் எனது மூக்கை கடித்ததாகவும் கூறியுள்ளார். அந்த புகாரின் படி, மாமனார் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் அவர் தனது புகாரில், “எனக்கு திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் ஆகிய நிலையில் 5 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், கடந்த 15 -ம் திகதி வரதட்சணை கொடுக்கவில்லை எனக் கூறி என்னை எனது மாமியார் அடித்தார்.

எனது கணவர் என் மூக்கை கடித்து காயப்படுத்தினார். வரதட்சணையை காரணம் காட்டி பலமுறை வீட்டை விட்டு துரத்தியுள்ளனர். எப்போதெல்லாம் அவர்கள் துன்புறுத்துகிறார்களோ அப்போது ஊர் பஞ்சாயத்தை கூட்டி சமரசம் செய்து வைக்கப்பட்டது” என்று கூறியுள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.டி பெண் ஊழியர் கொலையில் அடுக்கடுக்கான அதிர்ச்சி தகவல்கள்!

Quick Share

செங்கல்பட்டில் ஐடி பெண் ஊழியர் ஒருவர் கை கால்கள் கட்டப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர் திருநம்பி என தெரியவந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் நாவலூர் அடுத்துள்ள பகுதி பொன்மார். அங்குள்ள வேதகிரி நகரில் இளம்பெண் ஒருவர் கொடூரமாக எரிக்கப்பட்ட நிலையில் கிடப்பதாக தாழம்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பெண்ணை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பெண்ணை சோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். அங்கிருந்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த பெண் மதுரையை சேர்ந்தவர் என்பது தெரிந்தது. கண்ணகி நகர்ப் பகுதியில் உள்ள சித்தப்பா வீட்டில் தங்கியிருந்த அப்பெண் ஒரு பிரபல ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.காதல் விவகாரத்தில் பெண் இறந்திருக்கலாம் என என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தொடர்ந்திருக்கும் நிலையில் வெற்றிமாறன் என்ற நபரை முதற்கட்டமாக கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் வெற்றிமாறன் திருநம்பி என தெரியவந்துள்ளது. அவரது இயற்பெயர் பாண்டி மகேஸ்வரி என்பதும் தெரியவந்துள்ளது.எட்டு மாதத்திற்கு முன்பு மதுரையிலிருந்து சென்னை வந்த அப்பெண் பெருங்குடியில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அதேபோல வெற்றிமாறன் என்ற திருநம்பிக்கும் அப்பெண்ணிற்கு படிக்கும் போதே இருவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. சென்னையிலும் நட்பாக பழகி வந்துள்ளனர். அவர் திருநம்பி என்பதால் அவரை அப்பெண் உதாசீனம் செய்ததாக தெரியவந்துள்ளது.பிறந்தநாள் பரிசு கொடுக்க இருப்பதாக திருநம்பி அப்பெண்ணை இருசக்கர வாகனத்தில் பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளார். பிறகு புதர் பகுதிக்குச் அழைத்துச் சென்ற வெற்றிமாறன் கை, கால்களை சங்கிலியால் கட்டி பூட்டிய பிறகு கண்களைக் கட்டி அவரின் கழுத்தை அறுத்துவிட்டு பெட்ரோல் ஊற்றி கொடூரமாக எரித்துள்ளார்.சாலை ஓரத்திலேயே இருந்த புதர் பகுதியில் இருந்து சத்தம் வருவதை பார்த்த வாகன ஓட்டிகள் இருவர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பிறகு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அங்குவந்து எரிந்த நிலையில் இருந்த பெண் மீது துண்டை போர்த்தி 108 ஆம்புலன்ஸ்க்கு தூக்கி சென்றனர். அப்பொழுது அப்பெண் மரணத்தின் தருவாயில் ஒரு தொடர்பு எண்ணை கொடுத்துள்ளார். அந்த தொடர்பு எண்ணை வைத்து விசாரணை செய்ததில் வெற்றிமாறன் என்ற பாண்டி மகேஸ்வரி இந்த கொலையை செய்தது போலீசாருக்கு தெரியவந்து கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை புறநகர் பகுதியில் நடந்த இந்த கொடூரக்கொலை சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யூடியூப் வீடியோ பார்த்து 5ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை

Quick Share

யூடியூப் வீடியோ பார்த்து 5ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம், ஹமிர்பூர் நகரத்தை சேர்ந்தவர்கள் அவதேஸ் சாஹூ – ரூபி தம்பதியினர். இவர்களுக்கு நிகில் என்ற 11 வயது மகனும் ஒரு மகளும் உள்ளனர். 5ஆம் வகுப்பு படித்து வந்த நிகில், வீட்டில் தனியாக இருக்கும்போது செல்போன் பார்த்துள்ளான். ‘தூக்குமாட்டிக்கொண்டு அதில் இருந்து தப்பித்து எப்படி உயிருடன் வருவது’ என்ற வீடியோவை நிகில் பார்த்துள்ளான். இதற்காக தாயின் துப்பட்டாவை கொண்டு தூக்கிட்டபோது, துரதிஷ்டவசமாக அவர் உயிரிழந்தார்.

வரதட்சணை கொடுக்காத விரக்தி.., மனைவியின் மூக்கை கடித்த கணவர்

Quick Share

வரதட்சணை கொடுக்காததால் மனைவியின் மூக்கை, கணவர் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனைவி புகார்

இந்திய மாநிலமான உத்தரபிரதேசத்தில் உள்ள மகேஷ்பூர் பகுதியில் வரதட்சணை கொடுமையால் மனைவியின் மூக்கை கடித்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மகேஷ்பூரைச் சேர்ந்த அஜ்மி (22) என்பவர் தனது கணவர் குடும்பத்தில் உள்ள 6 பேர் மீது கசிபி கஞ்ச் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் அவர், வரதட்சணை கேட்டு தன்னை துன்புறுத்தியதாகவும், கணவர் எனது மூக்கை கடித்ததாகவும் கூறியுள்ளார். அந்த புகாரின் படி, மாமனார் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கணவரின் செயல்

மேலும் அவர் தனது புகாரில், “எனக்கு திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் ஆகிய நிலையில் 5 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், கடந்த 15 -ம் திகதி வரதட்சணை கொடுக்கவில்லை எனக் கூறி என்னை எனது மாமியார் அடித்தார்.எனது கணவர் என் மூக்கை கடித்து காயப்படுத்தினார். வரதட்சணையை காரணம் காட்டி பலமுறை வீட்டை விட்டு துரத்தியுள்ளனர். எப்போதெல்லாம் அவர்கள் துன்புறுத்துகிறார்களோ அப்போது ஊர் பஞ்சாயத்தை கூட்டி சமரசம் செய்து வைக்கப்பட்டது” என்று கூறியுள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.       




You cannot copy content of this Website