கிரைம்

யாழ். ரில்கோ விடுதியில் போதை விருந்து!

Quick Share

யாழ்ப்பாண நகர பகுதியில் அமைந்துள்ள ரில்கோ ஹோட்டலில் கடந்த 4ஆம் திகதி இரவு “DJ night” எனும் பெயரில் போதை விருந்து கொண்டாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த விருந்து கொழும்பை சேர்ந்த Events by Shuttle Vibe எனும் நிறுவனத்தின் பெயரில் சிலர் , சமூக வலைத்தளங்களின் ஊடாக அழைப்பு விடுத்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது.அன்றைய தினம் அங்கு வந்த சிலர் தாம் கொண்டு வந்திருந்த கஞ்சா , ஐஸ் போன்ற போதை பொருளையும் நுகர தொடங்கியுள்ளனர். ஹோட்டலில் மதுபானம் மாத்திரமே வழங்கப்பட்டதாகவும், ஆனாலும் அங்கு வந்த பலரும் தம் வசம் உயிர்கொல்லி போதைப்பொருளை வைத்திருந்ததாக விருந்தில் கலந்து கொண்ட சிலர் தெரிவித்தனர்.இந்நிலையில் தென்பகுதிகளில் சமூக வலைத்தளங்கள் ஊடாக இவ்வாறான போதை விருந்துக்கு அழைப்பு விடுப்பவர்களுக்கு எதிராகவும் , விருந்து கலந்து கொண்டவர்களுக்கு எதிராகவும் பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மணப்பெண் தேடிய இளைஞருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

Quick Share

திருமணத்திற்காக மணப்பெண் தேடிய இளைஞரிடம், மணப்பெண் போல நடித்து ரூ.46 லட்சம் ஏமாற்றி மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மூலகுளத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (33). இவர் சென்னையில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரின் திருமணத்திற்காக மணப்பெண் வேண்டி, அனைத்து விபரங்களையும் புதுச்சேரியில் உள்ள தனியார் திருமண தகவல் மையத்தில் கொடுத்து வைத்திருந்தார்.

இதன் பின், 2 மாதங்கள் கழித்து இங்கிலாந்தில் இருந்து போன் கால் மூலம் அழைப்பு வந்துள்ளது. அப்போது அதில் பேசிய பெண் ஒருவர், “நான் தமிழக மாவட்டம் கரூரை சேர்ந்தவர். நாங்கள் குடும்பத்துடன் இங்கிலாந்தில் வசித்து வருகிறோம். நான் இங்கு பிரபல நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறேன்.

எனக்கும் மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். உங்களது விபரங்கள் திருமண தகவல் மையத்திலிருந்து எனக்கு கிடைத்தது” என்று பேசினார். இதனை தொடர்ந்து இருவரும் வாட்ஸ் அப்பிலும் பேசி வந்துள்ளனர்.

பின்பு, தொடர்ந்து பேசிய அந்த பெண் பல்வேறு குடும்ப புகைப்படங்களை அனுப்பியுள்ளார். மேலும், “என்னுடைய மாமா இங்கு கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்து பெரிய நிறுவனத்தினை நடத்தி வருகிறார். அதில் நல்ல வருமானம் கிடைக்கும். உங்களுக்கு வேண்டுமானால் சொல்லுங்கள், கற்றுத்தருகிறேன்” எனக் கூறியுள்ளார்.

இதன் பிறகு, ராமகிருஷ்ணன் பெயரிலேயே பைனான்ஸ் மற்றும் பிட் மார்ட் ஆகிய நிறுவனங்களில் கணக்கு தொடங்கி முதலீடு செய்ய கூறியுள்ளனர். இதனால், கடந்த மாதத்தில் ரூ.46 லட்சத்தை பல்வேறு தவணைகளில் செலுத்தியுள்ளார்.

ஆனால், இவருடைய கணக்கில் உள்ள பணத்தை நேரடியாக வேறொரு கணக்கிற்கு மாற்றியுள்ளனர். இவருடைய கணக்கில் பணம் இல்லாததை உணர்ந்த ராமகிருஷ்ணன் ஏமாற்று விட்டோம் என்பதையறிந்து இணைய வழி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக ஆய்வாளர்கள் கீர்த்தி மற்றும் கார்த்திகேயன் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

நெல்லையில் கொடூரம்; பட்டியலின இளைஞர்கள் மீது சிறுநீர் கழிப்பு சித்ரவதை!

Quick Share

அக்.30 அன்று இரவு தொடங்கிய ஏழு மணியின் போது நெல்லை தச்சநல்லூரை ஒட்டியுள்ள மணிமூர்த்தீஸ்வரத்தை சேர்ந்த இளைஞர்களான மனோஜ் அவரது நண்பர் மாரியப்பன் இருவரும் இயற்கை உபாதையைக் கழித்துவிட்டு அருகிலுள்ள ஆற்றில் குளித்துவிட்டு வருவதற்காகச் சென்றிருக்கிறார்கள்.

நெல்லையின் ஸ்ரீபுரத்திலுள்ள தனியார் கேபிள் டி.வி. ஒன்றில் பணிபுரிகிற மனோஜ் மணிமூர்த்தீஸ்வரத்திலுள்ள தன் மாமா வீட்டில் தங்கியபடி கேபிள் வேலைக்குப் போய் வந்திருக்கிறார். பைக்கில் சென்ற இருவரும் ஆற்றுப் படுகை பக்கமுள்ள சுடலை கோயிலில் பைக்கை நிறுத்திவிட்டு இயற்கை உபாதையை கழித்துவிட்டு இருவரும் பைக் பக்கம் வரும்போது அந்தப் பக்கமாய் மது அருந்திக் கொண்டிருந்த நான்கு வாலிபர்கள் இவர்களைப் பார்த்ததும், கடுப்பானார்கள். ”என்னலேய்… நாங்க சரக்கடிக்கிறப்ப தைரியமா இந்தப் பக்கம் வாறீக” என்று அதட்டலாய் பேசியவர்கள், அவர்களிடம் நீங்க என்ன ஜாதி என்று கேட்டு மிரட்டியிருக்கிறார்கள். அவர்கள் பட்டியலின சமூகம் சார்ந்த இளைஞர்கள் என்று தெரிந்ததும் நான்கு பேர்களும் இரண்டு பேரைக் கொடூரமாகத் தாக்கியிருக்கிறார்கள்.

வலி பொறுக்கமாட்டாதவர்கள் கதறிய போது மிரட்டியவர்கள் அவர்களை தாங்கள் வைத்திருந்த கத்தியைக் காட்டி கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டியிருக்கிறார்கள். இதனால் இருவரும் பீதியில் கோழிக்குஞ்சு போல் சுருண்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவன் மனோஜின் சட்டைப் பையைத் துளாவியவன், ‘என்னலேய் பணமில்லாம வந்துறுக்கீக’ என வெறியானவர்கள் பக்கத்தில் கிடந்த கம்பை எடுத்து மனோஜையும் மாரியப்பனையும் கண்மண் தெரியாமல் முதுகு, நெற்றிப்பொட்டு, உடம்பு முழுக்க தாக்கியதில் அவர்கள் இருவரின் உடல் முழுக்கக் காயங்கள். இதில் மாரியப்பனின் இடது தோள்பட்டையில் கடுமையான அடி விழுந்திருக்கிறது. மனோஜை கம்பால் தாக்கியதில் அவரின் வலது கண்ணில் காயம். உடல் முழுக்க இருவருக்கும் வீக்கம்.

ஒன்றும் கிடைக்காததால் அவர்களை காது கூசுகிற வார்த்தைகளால் திட்டியவர்கள், அரையிருட்டு அழிச்சாட்டியத்திற்குப் பிறகு அடுத்த கொடூரமான கட்டத்திற்கு நகர்ந்த போதைக் கும்பல், மனோஜையும், மாரியப்பனையும் நிர்வாணப் படுத்தி சற்றும் கூட ஈவு இரக்கம் காட்டாமல் போதை வெறியில் இருவரின் முகத்தின் மீதும் சிறுநீர் கழித்து பஞ்சமாபாதகத்தை நடத்தியவர்கள், அவர்களின் செல்போனைப் பிடுங்கி உடனடியாக ‘அஞ்சாயிரம் பணம் குடுங்கல’ என்றதுடன் மனோஜின் கனரா வங்கி ஏ.டி.எம். கார்டையும் பிடுங்கிக் கொண்டார்கள்.

இந்த நேரத்தில் போதைக் கும்பல் நான்கு பேரின் நண்பர்கள் இரண்டு பேர் பைக்கில் அங்கு வர, அவர்களும் தங்கள் பங்கிற்கு அப்பாவிகளான மனோஜையும், மாரியப்பனையும் தாக்கியிருக்கிறார்கள். ”பணம் கொடுக்கலைன்னா ரெண்டு பேரும் உசுரோட இந்த எடத்தவிட்டுப் போவமுடியாதுலேய். எவனயாவது ஜி-பே’ல பணம் போடச் சொல்லுல’ என அடியும் மிரட்டலுமாய் கத்தியிருக்கிறார்கள். இதனால் பயந்து போன மாரியப்பன் செல்லில் தன் ஓனர் ராஜாவைத் தொடர்பு கொண்டு அழுதவர் நடந்தவைகளைச் சொல்லி ஐந்தாயிரம் பணம் மனோஜின் அக்கவுண்ட்டில் போடச் சொல்ல, அவரும் போட்டிருக்கிறார்.

கடைசியாய் அந்த கும்பலின் 2 பேர் பைக்கில் சென்று அவர்களின் ஏ.டி.எம். கார்டைக் கொண்டு பணம் எடுத்து வந்திருக்கிறார்கள். ஆனாலும் சித்ரவதை நள்ளிரவு வரை நீடித்திருக்கிறது. போனவர்கள் பணத்துடன் வந்த பிறகு, ஒடுங்கிக் கொண்டிருந்த மனோஜிடமும், மாரியப்பனிடமும், ‘நடந்தத வெளிய சொன்னீக கத்தியால குத்தி குடல வவுந்துறோம்ல’ என மிரட்டியிருக்கிறார்கள்.

இதற்கிடையே சமயம் பார்த்து கும்பலிடமிருந்து நிர்வாண நிலையில் தப்பித்த மனோஜூம் மாரியப்பனும் அரை நிர்வாணத்தில் ஊருக்கு வந்து உறவினர்களிடம் சொல்லி அழ, அரண்டு பதறிய ஊர்மக்கள் படுகாயமடைந்த அவர்கள் இருவரையும் பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்திருக்கிறார்கள். விடிந்ததும் விஷயம் வெடிகுண்டாய் வெடித்து நகரில் பிரளயத்தைக் கிளப்பியிருக்கிறது. அரக்கப் பறக்க அரசு மருத்துவமனை வந்த தச்சநல்லூர் போலீசார் சிகிச்சையில் இருந்தவர்களிடம் விசாரித்து புகாரைப் பெற்றவர்கள், வெறி கொண்ட கும்பலின் மீது வன்கொடுமை, வழிப்பறி, ஆயுதங்களால் தாக்குதல், அவமானப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு வெய்து விசாரணை நடத்தியவர்கள், ஆறு பேர்களைத் தங்களின் கஷ்டடிக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள்.

நாங்க உடல் உபாதையப் போக்கிட்டு குளிக்கப் போவ எங்க பைக் பக்கம் வந்த உடனேயே அந்தக் கும்பல் எங்கள சுத்திட்டாக. ஜாதியக் கேட்டுத் தெரிஞ்சதும் ரெண்டு பேர் கைகளையும் முறுக்கிக்கிட்டு எங்கள திமிறவுடாம கம்பால அடிச்சி கத்தியால கீறுனாக. கஞ்சாவோட மதுவையும் சேத்து அடிச்சிருக்காங்க. போதை, வெறி ஆறு பேர்ட்ட இருந்து எங்களால தப்பிக்க முடியாத நெலம. உடம்பெல்லாம் வீக்கம்’ என வேதனைப்பட்டனர். சிகிச்சையிலிருந்த மனோஜூம், மாரியப்பனும்.

நிகழ்வையறிந்து பதறிப்போன நெல்லை மாவட்ட சி.பி.எம்.மின் மாவட்ட செ.வான ஸ்ரீராம், மருத்துவமனை சென்று அவர்களின் நிலையைக் கண்டு அதிர்ந்தவர் நம்மிடம். ”ரெண்டு பேரும் வேலை முடிஞ்சி ஆத்துல குளிப்பதற்காகச் சென்றவர்களை ஜாதியைக் கேட்டு, பட்டியலினத்தைச் சேர்ந்தவங்கன்’னு சொன்னதும், சாதிவெறியில் அடிச்சி நிர்வாணப் படுத்தி தாக்கியதுமில்லாம, அவங்க முகத்தில் சிறுநீர் கழிச்சவங்க, கண்ணத் தொறங்கடான்னு சொல்லியும் சிறுநீர் கழிச்சி கொடூரப்படுத்திருக்காங்க. அவங்க கண்ணு ரெண்டும் வீங்கி இருக்கு. இது ஒரு மோசமான சம்பவம். மனித சமூகம் ஏற்றுக் கொள்ளாதது. தமிழ் சமூகத்திற்கே வெட்கக் கேடானது. இப்படிப்பட்ட குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை தரப்படவேண்டும்” என்றார் அழுத்தமான குரலில்.

இதனிடையே பட்டியலின இளைஞர்கள் மீது சிறுநீர் கழித்து கொடூரத் தக்குதல் நடத்தியதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டித்து நெல்லை ரயில்வே நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. மனித சமூகத்தின் விஷ ஒட்டுண்ணியான போதையும் வன்மமும் வேரறுக்கப்பட வேண்டிய வைரஸ்கள்.

இந்த சம்பவத்தை ஜீரணிக்க முடியாத அதிர்ச்சியில் இருக்கிறது நெல்லை.

ஒன்லைனில் வரன் பார்த்ததில் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்: மக்களே உஷார்!

Quick Share

ஒன்லைனில் திருமண தகவல் தளத்தில் அறிமுகமான நபரால், 2 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானதாக மும்பை பெண் ஒருவர் பொலிஸில் புகார் செய்திருக்கிறார். மும்பையை சேர்ந்த நவி என்ற இளம்பெண்ணிற்கு திருமண வரன் பார்க்கும் யோசனையில், முன்னணி மேட்ரிமோனியல் தளத்தில் அவரது குடும்பத்தினர் வரன்களை தேடியுள்ளனர்.

அப்போது சிங்கப்பூரில் வாழும் இந்தியர் ஒருவரின் தொடர்பு கிடைத்தது. பெரிய இடத்து வரன் என்று நினைத்து அந்த நபருடன் தொடர்பு கொண்டார்கள்.

மேற்படி சிங்கப்பூர் மாப்பிள்ளை மும்பை இளம்பெண்ணை தனிப்பட்ட முறையில் தொடர்புகொண்டு பேச ஆரம்பித்தார். திருமண ஏற்பாட்டுக்கும் ஒப்புக்கொண்டார்.

பிசினஸ் காரணமாக சில மாதங்கள் கழித்து திருமணம் என தள்ளிப்போட்டார். அத்தனையையும் அந்த இளம்பெண் நம்பினார்.

சிங்கப்பூர் வரன் மும்பை வந்தபோது அவரது அழைப்பின்பேரில் நேரில் சந்தித்தார். திருமண ஆசைகாட்டி இளம்பெண் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி இருக்கிறார். இப்படி 2020 டிசம்பரிலிருந்து 2023 மார்ச் வரை தொடர்ச்சியாக வற்புறுத்தி உறவு கொள்ளப்பட்டிருக்கிறார்.

இதற்காக மும்பையில் மட்டுமன்றி சிங்கப்பூருக்கு வரவழைத்தும் பெண்ணோடு உல்லாசம் கண்டிருக்கிறார். இடையில் மும்பை பெண்ணுக்கு சந்தேகம் அதிகரித்தும் உஷாராகி நழுவ ஆரம்பித்திருக்கிறார்.

அப்போதுதான் அந்த ஆண் குறித்தான அழுத்தமான தகவல் ஏதும் தன்னிடம் இல்லை என்பதை பெண் உணர்ந்தார். அதே வேளையில் தனது அந்தரங்க படங்கள் வீடியோக்கள் என சூழ்ச்சி வலையில் சிக்கி இருப்பதும் அவருக்கு புரிந்தது.

அந்த பெண் பொலிஸில் புகார் செய்ததை தொடர்ந்து இப்போது மும்பை காவல்துறையில் வழக்கு பதிவு செய்து, சிங்கப்பூர் மாப்பிள்ளையை தேடி வருகிறார்.

மேலும் மாப்பிள்ளை மேட்ரிமோனியல் தளங்கள் வாயிலாக, பெண்களை வீழ்த்தி அனுபவிப்பதையே வேலையாக வைத்திருப்பதும் தெரிய வந்திருக்கிறது.

ஒன்லைனில் வரன் பார்த்ததில் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்: மக்களே உஷார்!

Quick Share

ஒன்லைனில் திருமண தகவல் தளத்தில் அறிமுகமான நபரால், 2 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானதாக மும்பை பெண் ஒருவர் பொலிஸில் புகார் செய்திருக்கிறார். மும்பையை சேர்ந்த நவி என்ற இளம்பெண்ணிற்கு திருமண வரன் பார்க்கும் யோசனையில், முன்னணி மேட்ரிமோனியல் தளத்தில் அவரது குடும்பத்தினர் வரன்களை தேடியுள்ளனர்.

அப்போது சிங்கப்பூரில் வாழும் இந்தியர் ஒருவரின் தொடர்பு கிடைத்தது. பெரிய இடத்து வரன் என்று நினைத்து அந்த நபருடன் தொடர்பு கொண்டார்கள்.மேற்படி சிங்கப்பூர் மாப்பிள்ளை மும்பை இளம்பெண்ணை தனிப்பட்ட முறையில் தொடர்புகொண்டு பேச ஆரம்பித்தார். திருமண ஏற்பாட்டுக்கும் ஒப்புக்கொண்டார்.பிசினஸ் காரணமாக சில மாதங்கள் கழித்து திருமணம் என தள்ளிப்போட்டார். அத்தனையையும் அந்த இளம்பெண் நம்பினார்.சிங்கப்பூர் வரன் மும்பை வந்தபோது அவரது அழைப்பின்பேரில் நேரில் சந்தித்தார். திருமண ஆசைகாட்டி இளம்பெண் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி இருக்கிறார். இப்படி 2020 டிசம்பரிலிருந்து 2023 மார்ச் வரை தொடர்ச்சியாக வற்புறுத்தி உறவு கொள்ளப்பட்டிருக்கிறார்.இதற்காக மும்பையில் மட்டுமன்றி சிங்கப்பூருக்கு வரவழைத்தும் பெண்ணோடு உல்லாசம் கண்டிருக்கிறார். இடையில் மும்பை பெண்ணுக்கு சந்தேகம் அதிகரித்தும் உஷாராகி நழுவ ஆரம்பித்திருக்கிறார்.அப்போதுதான் அந்த ஆண் குறித்தான அழுத்தமான தகவல் ஏதும் தன்னிடம் இல்லை என்பதை பெண் உணர்ந்தார். அதே வேளையில் தனது அந்தரங்க படங்கள் வீடியோக்கள் என சூழ்ச்சி வலையில் சிக்கி இருப்பதும் அவருக்கு புரிந்தது.அந்த பெண் பொலிஸில் புகார் செய்ததை தொடர்ந்து இப்போது மும்பை காவல்துறையில் வழக்கு பதிவு செய்து, சிங்கப்பூர் மாப்பிள்ளையை தேடி வருகிறார்.மேலும் மாப்பிள்ளை மேட்ரிமோனியல் தளங்கள் வாயிலாக, பெண்களை வீழ்த்தி அனுபவிப்பதையே வேலையாக வைத்திருப்பதும் தெரிய வந்திருக்கிறது.

இணுவிலில் 135 பவுண் நகைகள் திருட்டு!

Quick Share

யாழ்ப்பாணம் – இணுவில் பகுதியில் வீடொன்றில் 135 பவுணுக்கும் அதிகமான தங்க நகைகள் நேற்று திருட்டுப்போயுள்ளது. இணுவில், மஞ்சத்தடி பகுதியில் உள்ள வீடொன்றில் அந்தியேட்டி கிரியை நடைபெறவிருந்த நிலையிலேயே நகைகள் திருட்டுப் போயுள்ளன.

நேற்று அதிகாலை 3 மணியளவில் சமையல் வேலைகளுக்காக எழுந்த வீட்டார், சார்ஜ் போடுவதற்கு கையடக்கத் தொலைபேசியை தேடியபோது கைபேசி இருக்கவில்லை. அத்தோடு, வீட்டிலுள்ள அலுமாரியும் கதவு திறந்த நிலையில் காணப்பட்டுள்ளது.பின்னர், நகைகள் வைக்கப்பட்டுள்ள இடத்தை பார்த்தபோது அங்கிருந்த நகைகளும் திருட்டுப் போயுள்ளதை கண்டு வீட்டார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அந்த குடும்பத்தினருடன் தொடர்புடையவர் அல்லது இரகசியமாக நுழைந்த யாரோ ஒருவர் இந்த திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதன் அடிப்படையில் யாழ்ப்பாண பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினர் மற்றும் கோப்பாய் பொலிஸார் தொடர் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

பல்கலைக்கழக மாணவியிடம் ஆணுறுப்பை காட்டிவர் காணொளியில் சிக்கினார்!

Quick Share

தனிமையில் வீதியில் செல்லும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவியிடம் ஆணுறுப்பை காட்டி பாலியல் சேட்டையில் ஈடுபடும் நபர் தொடர்பான காணொளி வெளியாகியுள்ளது. பல்கலைக்கழக மாணவி ஒருவரால் எடுக்கப்பட்ட இந்த காணொளி வெளியாகி பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆத்திச்சூடி வீதியில் ஆணுறுப்பை காட்டியவாறு மோட்டார் சைக்கிளில் பல்கலைக்கழக மாணவியை பின்தொடர்ந்த நபரின் தகாத செயலை பல்கலைக்கழக மாணவி ஒருவர் துணிகரமாக காணொளியில் பதிவு செய்துள்ளார்.காணொளி எடுக்கப்படுவதை அவதானித்த குறித்த நபர் மோட்டார் சைக்கிளை திருப்பிக் கொண்டு செல்வதை காணொளியில் அவதானிக்க முடிகின்றது.யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவிகள் விரிவுரைகளை முடித்துவிட்டு, பல்கலைக்கழக விடுதிகளுக்கும் தங்குமிடத்துக்கும் நடந்து செல்லும்போதும் வரும்போதும், வீதியில் வருகின்ற ஒரு சிலர், அந்த மாணவிகளுக்கு ஆணுறுப்பை காட்டி பாலியல் சைகைகளை செய்கின்ற நிலைமை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.இவ்வாறான தகாத செயல்களை செய்யும் சிலர் கடந்த காலங்களில் கையும் மெய்யுமாக பிடிபட்டு பொதுமக்களினாலும் பல்கலைக்கழக மாணவர்களாலும் நையப்புடைக்கப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.இதுபோன்ற ஆபாச செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்கலைக்கழக மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மர்ம முறையில் இளைஞ்சன் பலி .

Quick Share

மட்டக்களப்பு – கரடியனாறு – புளுட்டுமானோடை பிரதேசத்தில் பாம்பு தீண்டி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் திருமணமான (24) வயதுடைய பாரதிபுரம் ஐயங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த மார்ட்டின் சில்வா காசுதன் என்பவரே இச்சம்பவத்தில் உயிரிழந்தவராவார்.தனது தொழிலின் நிமிர்த்தம் பண்ணை உரிமையாளர் ஒருவரின் மாடுகளை பராமரித்து கொண்டிருந்த போது வாந்தி மற்றும் மயக்கமடைந்த நிலையில் அருகில் உள்ளவர்களின் உதவியுடன் கரடியனாறு வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.கரடியனாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வேண்டுதலுக்கமைவாக அமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற ஏறாவூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நசீர் சடலத்தை பாவையிட்ட பின்னர் உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தும் படி சட்ட வைத்திய அதிகாரியிடம் பரிந்துரைத்தார்.விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அண்ணி, 2 குழந்தைகளை கொன்றுவிட்டு மைத்துனன் தப்பி ஓட்டம்

Quick Share

குடும்பத் தகராறு காரணமாக அண்ணி மற்றும் அவரது இரண்டு குழந்தைகளை துப்பாக்கியால் சுட்டு கொன்று மைத்துனன் தப்பி ஓடிய சம்பவத்தால் காவேரி மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.ஹாவேரி மாவட்டம் ஹனகல் தாலுக்கா யல்லூர் கிராமத்தில் குமார் கவுடா என்பவர் அவரது அண்ணனின் மனைவி மற்றும் இரு குழந்தைகளை கைத்துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்துள்ளார்.
கீதா (35), அவர்களது இரு குழந்தைகள் அகுல் (10), அங்கிதா (8) ஆகியோர் பலியானார்கள். இந்த கொடூர சம்பவத்தை அரங்கேற்றிய பின்னர் குமார் கவுடா தலைமறைவாகி விட்டார் குடும்பத் தகராறு காரணமாக இந்த சம்பவம் நடந்திருப்பதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது போலீசார் விரைந்து வந்து உடல்களை மீட்டு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் அந்த வீட்டில் இருந்த தடையங்களை சேகரித்து வருகின்றனர் ஆகிவிட்டது குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு இருப்பதாக போலீஸ் வட்டாரம் தெரிவிக்கிறது குற்றவாளியை பிடிக்க தீவிர தேர்தல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

தூத்துக்குடியை பரபரப்பாக்கிய காதல் தம்பதி கொலை சம்பவம்: சிறுவன் உட்பட 4 பேர் கைது!

Quick Share

காதல் திருமணம் செய்துகொண்ட மூன்றே நாளில் கணவன் மனைவியை வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவத்தில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி முருகேசன் நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வசந்தகுமாரின் மகன் மாரிசெல்வம்(22). இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். மாரிசெல்வமும் திருவிக நகரைச் சேர்ந்த முத்துராமலிங்கத்தின் மகள் கார்த்திகாவும் காதலித்து வந்துள்ளனர். ஆனால் இதற்குப் பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் கடந்த 30 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த பெண் வீட்டார் மாரிசெல்வத்தின் வீட்டிற்கு வந்து கோபத்துடன் பேசிவிட்டுச் சென்றுள்ளனர். இந்த நிலையில்தான் நேற்று இரவு மாரிசெல்வம் வீட்டிற்குள் வந்த மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் காதல் திருமணம் செய்து கொண்ட இருவரையும் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்றது. இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரது உடலையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், காதல் திருமணம் செய்து கொண்டதால், இருவரையும் பெண் வீட்டார் கூலிப்படையை ஏவி கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், பொருளாதார ரீதியாக மாரிசெல்வம் பின்தங்கி இருந்ததால், திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இக்கொலையை அரங்கேற்றியதாகத் தெரியவந்துள்ளது. 

தலைமறைவாக உள்ளவர்களை பிடிக்க போலீசார் மூன்று தனிப்படை அமைத்துள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் பெண்ணின் தந்தை முத்துராமலிங்கம் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் தூத்துக்குடியை சேர்ந்த இசக்கி ராஜா, மாரியப்பன், ராஜபாண்டி, ஒரு சிறுவன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பிரபல தமிழ் தொழிலதிபர் வீட்டில் கணக்கில் காட்டப்படாத நகைகள்!

Quick Share

தமிழ் திரையுலகின் பிரபல தயாரிப்பாளரும், பிரபல தொழிலதிபருமான அபிராமி ராமநாதனை வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரிப்பதற்காக அழைத்துச் சென்றுள்ளனர். தமிழகத்தில் அமைச்சர்கள் உள்பட பல்வேறு நபர்களுக்கு தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர். அந்த சோதனை இன்றும் நடைபெற்று வருகிறது.

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வீடு, அலுவலகம், கல்லூரி ஆகிய இடங்களில் சோதனை நடந்தது. அதுமட்டுமல்லாமல், பல்வேறு தனியார் நிறுவனங்களிலும் சோதனை நடைபெற்றது.

அந்த வகையில், நேற்று பிரபல தொழிலதிபர் அபிராமி ராமநாதனின் அலுவலகத்தில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது. மேலும், அவருடைய வீடு மற்றும் தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

அதுமட்டுமல்லாமல், அவருடைய மேலாளர் மோகன் வீட்டிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அபிராமி ராமநாதனின் வீட்டில் கணக்கில் காட்டப்படாத நகைகள் கைப்பற்றப்பட்டன. அவை குறித்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தொழிலதிபர் அபிராமி ராமநாதனை விசாரணை செய்வதற்காக வருமானவரித்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். இவர், வருமான வரி ஏய்ப்பு செய்துள்ளாரா என்பது விசாரணையின் முடிவின் போதே தெரியும்.

தூத்துக்குடி கொலை வழக்கில் மேலும் இருவர் சரண்!

Quick Share

தூத்துக்குடி முருகேசன் நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வசந்தகுமாரின் மகன் மாரிசெல்வம்(22). இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். மாரிசெல்வமும், திருவிக நகரைச் சேர்ந்த பால் வியாபாரியான முத்துராமலிங்கத்தின் மகள் கார்த்திகாவும் காதலித்து வந்துள்ளனர். ஆனால் இதற்குப் பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் கடந்த 30 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த பெண்வீட்டார் மாரிசெல்வத்தின் வீட்டிற்கு வந்து கோபத்துடன் பேசிவிட்டுச் சென்றுள்ளனர். இந்த நிலையில்தான் நேற்று முன்தினம்(2.11.2023) இரவு மாரிசெல்வம் வீட்டிற்குள் வந்த மர்ம கும்பல், காதல் திருமணம் செய்துகொண்ட இருவரைச் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்றது. இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இருவரது உடலையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், காதல் திருமணம் செய்து கொண்டதால் இருவரையும் பெண்வீட்டார் ஆட்களை ஏவி கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், பொருளாதார ரீதியாக மாரிசெல்வம் பின்தங்கி இருந்ததால், திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இக்கொலையை அரங்கேற்றியதை போலீசார் கண்டுபிடித்தனர்.

தலைமறைவாக உள்ளவர்களைப் பிடிக்க 3 தனிப்படைகளை அமைத்துத் தேடி வந்த போலீசார், நேற்று கார்த்திகாவின் தந்தை முத்துராமலிங்கத்தை கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து நேற்று இரவு ஒரு சிறார் உள்பட மூன்று பேரையும் போலீசார் கைது செய்த நிலையில் இன்று கருப்பசாமி, பரத் ஆகிய இருவரும் வள்ளியூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர். காதல் தம்பதியினர் கொல்லப்பட்ட வழக்கில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் தொடர்புடையவர்கள் குறித்து போலீசார் தேடி வருகின்றனர்.




You cannot copy content of this Website