கடலூர்

இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமை! காதலனுடன் சென்ற இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் ..

Quick Share

கடலுரை சேர்ந்த இளம் பெண் தனது ஆண் நண்பருடன் தனியாக சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த கும்பகோணத்தை சேர்ந்த சதீஷ்(19 வயது), சபரி என்கிற கிஷோர் (19) உள்ளிட்ட 3 பேர் இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்

இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் திருப்பாதிரிப்புலியூர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் விசாரணை மேற்கொண்ட திருப்பாதிரிப்புலியூர் போலீசார் பாலியல் வன்கொடுமை செய்த மூன்று பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 
மேலும் அந்த பெண்ணின் ஆண் நண்பரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.  ஆண் நண்பருடன் சென்ற இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கஷாயம் வைத்து 5 மாத கருவை கொன்ற மாமியார்!

Quick Share

கஷாயம் வைத்தே ஒரு பெண்ணின் வாழ்வை பாழாக்கி உள்ளார் மாமியார்.. இந்த கொடுமை கடலூரில் நடந்துள்ளது..! கடலூர் திருப்பாதிரிப்புலியூர் முத்தையா நகரை சேர்ந்தவர் சரவணன்.. ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கும் நெய்வேலியை சேர்ந்த நர்மதா என்பவருக்கும் கடந்த வருடம் மே மாதம் கல்யாணம் ஆகியுள்ளது.. நர்மதாவுக்கு 29 வயதாகிறது.. இவர் வன அலுவலராக பணி புரிபவர்.. கல்யாணத்தின்போது, பெண்ணின் பெற்றோர் நிறைய சீர்வரிசை பொருட்களை தந்துள்ளனர்.

வரதட்சணை

ஆனாலும், இன்னும் வேண்டும் என்று நச்சரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் கணவனும், மாமியாரும்.. 25 பவுன் நகையும், ரூ.5 லட்சமும் கூடுதல் வரதட்சணையாக வாங்கி வரும்படி கேட்டு நர்மதாவை மாமியார் கொடுமைப்படுத்தி வந்துள்ளதாகவும் தெரிகிறது. இந்நிலையில் நர்மதா கர்ப்பமானார்… 5 மாத கர்ப்பிணியாக இருந்தபோதும் கொடுமைகள் தொடர்ந்துள்ளது.. சம்பவத்தன்று, மாமியார் கஷாயம் வைத்து, அதில் விஷத்தை கலந்து நர்மதாவுக்கு தந்துள்ளனர்.. இதில் கர்ப்பம் கலைந்துவிட்டது.

கஷாயம்

இதற்கு மேல் பொறுக்க முடியாமல், நர்மதா திருப்பாதிரிப்புலியூர் போலீசில் புகார் கொடுத்தார்… அதன்பேரில் சரவணன், மற்றும் அவரின் தாய் மல்லிகா, இவரது மகள்கள் ரேவதி, கவிதா என்கிற பூரணி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, மல்லிகா, சரவணனை கைது செய்தனர்.. கணவனும், மாமியாரும் இப்போது ஜெயிலில் உள்ளனர்.. நாத்தனார்கள் 2 பேரும் தலைமறைவாக உள்ளதால் அவர்களை தேடி வருகிறார்கள்

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி!

Quick Share

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் குச்சிப்பாளையம் காலனி தெருவை சேர்ந்தவர் இளையராஜா(வயது 42). இவர், சென்னையில் உள்ள பிரபல தனியார் ஓட்டலில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.
இவருடைய மனைவி அனிதா(35) இவரது சொந்த ஊர் தஞ்சை மாவட்டம் பந்தநல்லூர் அருகே உள்ள நெய்வாசல் ஆகும். இவர்களுக்கு அனுஹாசினி(10) என்ற மகளும், நிரஞ்சன்(7) என்ற மகனும் உள்ளனர். 

இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அனிதா குழந்தைகளுடன் நெய்வாசல் உள்ள தனது தாய் வீட்டில்  வசித்து வருகிறார். 
கடந்த சில நாட்களுக்கு முன்பு மனைவியை பார்ப்பதற்காக நெய்வாசலுக்கு வந்த இளையராஜா கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். அவருடைய உடல் அனிதா வீட்டின் பின்புறத்தில் கிடந்தது. 
இதுகுறித்து  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த பந்தநல்லூர் போலீசார்,  இளையராஜாவின் மனைவி அனிதாவிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணைமேற்கொண்டனர். 
இந்த விசாரணையின் மூலம் கள்ளக்காதல் விவகாரத்தில் இளையராஜா கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக அனிதா அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:- 
காட்டுமன்னார்கோவில் குச்சி பாளையத்தை சேர்ந்த இளையராஜாவின் சித்தப்பா மகன் ஜெயபால்(30) என்பவருக்கும், அனிதாவுக்கும் கடந்த சில ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. 
இந்த நிலையில் சம்பவத்தன்று அனிதா வீட்டுக்கு வந்த இளையராஜாவை ஜெயபால் மற்றும் அனிதா ஆகிய இருவரும் அம்மிக் கல்லால் சரமாரியாக தாக்கி கொலை செய்து உள்ளதாக போலீசார் தெரிவத்துள்ளார்.
இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அனிதாவை கைது செய்த பந்தநல்லூர் போலீசார், ஜெயபாலை வலைவீசி தேடி வருகின்றனர். 
கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியே கணவரை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

‘சுட சுட சாம்பார் செய்த தாய்’ ..சற்று நேரத்தில் பாத்திரத்தில் தவறி விழுந்த ...

Quick Share

சுட சுட சாம்பார் பாத்திரத்தில் தவறி விழுந்த ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம், தாழநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் -தனலட்சுமி தம்பதியினர். இந்த தம்பதிக்கு கிரிஷ் என்ற மகனும், கிருபாஸ்ரீ என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த 26ம் தேதி மணிகண்டன் வயலில் வேலை பார்ப்பவர்களுக்குச் சேர்ந்து மதிய உணவு தயாரிக்க வேண்டும் என மனைவியிடம் கூறியுள்ளார். இதையடுத்து தனலட்சுமி மதிய உணவிற்குச் சூடாக சாம்பார் மற்றும் சாதம் தயார் செய்து சமையல் அறையில் வைத்திருந்தார்.

பின்னர் குழந்தை கிருபாஸ்ரீக்காக அடுப்பில் பால் காய்ச்சிக் கொண்டிருந்தார். அப்போது சமையல் அறையிலிருந்த குழந்தை அங்கிருந்த சாம்பார் பாத்திரத்தின் மூடியை இழுத்தபோது எதிர்பாராத விதமாக தவறி பாத்திரத்திற்குள்ளேயே விழுந்தது.

சில நிமிடத்திலேயே நடந்த இந்த சம்பவத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தனலட்சுமி குழந்தையை சாம்பார் பாத்திரத்திலிருந்து உடனே தூக்கினார். அப்போது குழந்தையின் உடல் முழுவதும் வெந்து போயிருந்தது. பிறகு அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காகப் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு சிகிச்சைப் பெற்று வந்த குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நிர்வாண நிலையில் 36 வயது பெண் இறந்து கிடந்த கொடூரம்..

Quick Share

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த புவனகிரி கடை வீதியில் ஒரு தனியார் நிதி நிறுவனம் உள்ளது.. இந்த நிறுவனத்தின் மாடிப்படிக்கட்டில் ஒரு பெண்ணின் பிணம் கிடப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் சென்று பார்த்ததில் அந்த பெண்ணின் உடல் நிர்வாணமாக உடல் அழுகி போய் கிடந்தது.

பின்னர், சடலத்தை மீட்டு விசாரணையை ஆரம்பித்தனர். சம்பந்தப்பட்ட பெண் புதுச்சேரி மாநிலம் திருபுவனையை
சேர்ந்த சத்யா என்பது தெரியவந்தது.. சத்யாவுக்கு 36 வயசாகிறது. கணவன் பெயர் ராஜேந்திரன் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது.

சத்யாவை நிர்வாண நிலையில் கொன்றார்கள் என்ற சந்தேகம் வலுத்தது. சிசிடிவி கேமிரா அதனால், அந்த
நிதி நிறுவனத்தில் இருந்த சிசிடிவி கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் கடந்த 29-ந்தேதி இரவு 7 மணிக்கு சத்யா அந்த மாடியில் செல்வது பதிவாகி இருந்தது. சத்யாவுடன் இன்னொருவரும் சென்றார்.

முரசொலி மாறன் 29 என அடையாளம் காணப்பட்டார். புவனகிரியில் ஒரு கம்ப்யூட்டர் சென்டரில் வேலை பார்க்கிறார்.அவர்தான் சத்யவை மாடிக்கு அழைத்து செல்வது பதிவாகி இருந்தது. இரவு 10 மணி அளவில் முரசொலிமாறன் மட்டும் தனியாக கீழே இறங்கி வந்ததும் தெரிந்தது. கொலை இதனால் அவர்தான் சத்யாவை கொன்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்பட்டனர்.

பிறகு, முரசொலி மாறனை பிடிக்க ஒரு தனிப்படை அமைக்கப்பட்டது. தேடுதல் வேட்டைக்கு பிறகு முரசொலி மாறன் அவினாசியில் பதுங்கி இருப்பது தெரியவரவும், அங்கு சென்று அவரை கைது செய்ய போலீசார் விரைந்தனர்..

போலீசார் வருகிறார்கள் என்பதை தெரிந்து கொண்ட முரசொலி மாறனோ, திடீரென தற்கொலைக்கு முயன்றார்.. அதாவது தன்னுடைய காதில் பால்டாயில் விஷத்தை ஊற்றி கொண்டார். அதை பார்த்த போலீசார் அவரை மீட்டு அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் முரசொலி மாறனிடம் விசாரணை நடந்தது.. அப்போது
அவர் வாக்குமூலத்தில் சொன்னதாவது:

இருவரும் ஒரு நூல் கம்பெனியில் வேலைபார்த்தோம். நட்பு உருவானது காதலானது.. அடிக்கடி தனிமையில்
சந்தித்து பேசி வந்தோம்.. எனக்கு புவனகிரியில் வேலை கிடைத்து வந்துவிட்டேன். ஆனாலும் சத்யாவுடன் பழக்கம் தொடர்ந்தது.. சம்பவத்தன்று சத்யா, என்னை பார்க்க ஆபீசுக்கு வந்தார்.

கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று சத்யா தொந்தரவு செய்ய ஆரம்பித்தார்.. நான் மறுத்துவிட்டேன்.. உடனே தகராறு செய்தார்.அதனால், கழுத்தை நெரித்து கொன்றுவிட்டேன். அங்கிருந்த படிக்கட்டில் சடலத்தை கொண்டு போய் போட்டுவிட்டு தப்பிவிட்டேன்” என்றார்.

குடும்பத்துக்காக உழைக்கும் கணவர் வெளிநாட்டில் இருக்க கள்ளகாதலுக்காக 2 குழந்தைகளையும் மறந்த சத்யாவின் வாழ்க்கை கொடூரமாக முடிந்துவிட்டது

45 வயதான பெண் வீட்டில் அரை நிர்வாண கோலத்தில் கொலை..

Quick Share

45 வயதான பெண் வீட்டில் அரை நிர்வாண கோலத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூரில் உள்ள குருக்கத்தான் சேரி பகுதியை சேர்ந்தவர் சாந்தி (45). இவர் ஒரு வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவரது ஒரே மகள் திருமணமாகி வெளியூரில் வசிக்கிறார்.

சாந்தி அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் கோலம் போடுவதற்காக காலையில் தினமும் வீட்டில் வெளியே வரும் அவர் நேற்று நீண்ட நேரம் வெளியே வரவில்லை. ஒரு கதவும் லேசாக திறந்து கிடந்தது.

சந்தேகமடைந்த எதிர்வீட்டில் வசிக்கும் பெண் மற்றும் அக்கம்பக்கத்தினர் வீட்டில் வந்து பார்த்தனர். அப்போது சாந்தி கழுத்தறுக்கப்பட்டு, வயிற்றில் கத்திக்குத்து காயத்துடன், அரை நிர்வாண கோலத்தில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார்

சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் அங்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சாந்தியின் சேலை, ஜாக்கெட் கிழிக்கப்பட்டு அரை நிர்வாண கோலத்தில் கிடந்ததால் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டாரா எனவும் மற்றும் கொலையாளிகள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.




You cannot copy content of this Website